ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 14, 2017

விநாயகர் தத்துவம் - 15

1. நம் அன்றாட வாழ்க்கையில் அறியாமல் வரும் தீயவினைகளும் அதன் விளைவாக வரும் நோய்களும்
இப்பொழுது மனித வாழ்க்கையில் நடந்த வினைகள் நமக்குள் எப்படி ஆஸ்த்மாவாகவும், சிறுநீரகக் கோளாறாகவும், இருதய நோயாகவும் மாறுகின்றது? 

வாழ்க்கையில் இப்பொழுது நாம் ஒருவருடன் தொழிலுக்காகச் செல்கின்றோம். அவருடன் ஆசாபாசத்துடன்  பேசுகின்றோம். தொழில் செய்தால் “லாபகரமாக இருக்கும்.., என்று எண்ணி அவருடன் தொடர்பு கொள்கிறோம்.

தே சமயத்தில் நம்மிடம் தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வத் துடிப்பைத் தூண்டியவர் அவருக்கு எதிர்பாராத வகையில் தடை ஏற்பட்டுவிட்டால் அதனால் அவர் வேதனைப்படுவார்.

நாம் வாக்கு கொடுத்தோமே.., செயல்படுத்த முடியவில்லையே.., அந்த மனிதன் என்ன சொல்வான் என்று தன் கௌரவத்தைக் காத்திட எண்ணுகின்றார்.

அப்படி அந்த உணர்வுடன் இணைக்கப்படும்பொழுது, “நாளை என்னைக் குறைவாக நினைத்துவிடக்கூடாதே என்ற ஒவ்வொரு நிலைகளிலும் வேதனை என்ற உணர்வு அவருக்கு வருகின்றது.

ஆக அது நஞ்சு.

அதனுடன் சேர்த்துக் கொண்ட மனம் இப்படிச் சொல்வார்களே.., இப்படிச் செய்வோம் என்று எண்ணினோமே என்ற உணர்வுகளை எடுத்தபின் இந்த உணர்வு கலந்த வித்தாக இந்த நினைவின் அலைகள் ஊழ்வினையாகப் பதிவாகி விடுகின்றது.

ஆனால் அவர் செய்த நிலைகளில் இந்தச் சந்தர்ப்பம் அந்த நண்பனிடத்தில் சொன்ன நிலைகளை எண்ணும்பொழுது நாளை நம்மை அவமதித்துப் பேசுவானே.., மதிக்கமாட்டானே என்ற இந்த உணர்வுகள் கலந்து இந்த உணர்வின் நிலைகள் ஓர் வித்தாக மாறி தன் உடலுக்குள் பதிவாகிவிடுகின்றது.

ஆக முதலில் சொன்ன நண்பரோ இவர் வருவார்.., என்றும்தன்னுடன் கூட்டாகத் தொழில் செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.., அவர் நல்ல முறையில் வந்ததால் நல்ல பாதை கிடைத்தது என்று இவரின் மகிழ்ச்சியைப் பலரிடம் சொல்லி வைப்பார். 

அப்பொழுது உணர்வின் நிலைகள் கொண்டு அவருக்கு ஆனந்தமும் சொல்லிய நிலைகளில் இருக்கும். இனி தொழிலில் முன்னேறலாம் என்ற மகிழ்ச்சியான உணர்வை எடுத்து வைத்திருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

ஆனால் முதலில் சொன்னவரின் சந்தர்ப்பம் தன்னால் செயல்படுத்த முடியாத நிலைகளில் குறை ஏற்பட்டால்.., அவரை ஏமாற்றிவிடுவோமோ என்ற நிலைகள் வந்தவுடன் அச்ச உணர்வுகள் உந்தப் பெறும்.

அந்த அச்ச உணர்வாகி அதனால் பய உணர்வுகள் தனக்குள் கலந்தவுடனே சிந்திக்கும் திறன் இழந்து.., தீயவித்துகள் ஊழ்வினையாகப் பதிவாகிவிடுகின்றது.

யாரை நினைத்து யாருக்குச் சொல்லவேண்டும் என்று எண்ணினாரோ ஊழ்வினையாகப் பதிவாகி அந்த நண்பனை எண்ணும்பொழுது அவன் முகத்தில் எப்படி விழிக்கிறது என்ற இந்த பய உணர்வுகள் அவரை நினைக்கும்பொழுது பயந்து போகச் சொல்லும்.

அப்பொழுது ஆசையை ஊட்டிவிட்டுச் சொன்ன கெடுவுக்கு வராவிட்டால் என்ன.., ஆளைக் காணோமே.., என்ற நிலை வரப்படும்பொழுது அவரைத் தேடிச் செல்கின்றோம்.

இவரைக் கண்டவுடன் என்ன பதில் சொல்வது..?” என்று இந்த அச்ச உணர்வு இவரைப் பார்க்கவிடாது “ஒதுங்கிச் செல்வார்.

இவரைப் பார்த்து நம்மை.., மோசடி செய்ய வந்தவன் போல் இருக்கிறது..., அதனால்தான் விலகிச் செல்கின்றான்..என்ற உணர்வுகள் "புது வித்தாக விளைந்துவிடுகின்றது.

அடுத்த நண்பர்களிடத்தில் ஒலிபரப்பு செய்து ந்தத் தொழிலில் முன்னேறுவேன் என்ற எண்ணத்தைக் கொண்டு வரப்படும்பொழுது இந்த எண்ணத்திற்கு மாறாக வந்தவுடன் என்ன ஆகும்?

அப்பொழுது வேதனை என்ற நிலையும் அதே சமயத்தில் அடுத்தவர்கள் நம்மை இப்பொழுது மதிக்கமாட்டார்களே.., இவர் வேலையே இதுதான்.., என்று எண்ணுவார்களே.., என்று மனம் சங்கடப்படுவார்.

இந்த நிலையில் தன்னுடன் சகோதரர்களோ தாய் தந்தையரோ தன்னுடைய நண்பர்களோ ஆசை காட்டுகிறவன் கையிலே சிக்குகின்றாயே.., அவர்கள் சொல்லியது போல் ஆகிவிட்டதே.., என்ற வேதனை வரும்.

அன்று அவர் சொன்னார்., இன்று நடக்கவில்லையேஎன்ற எண்ணங்கள் இங்கு ஓங்கி வளர்ந்தவுடனே முதல் நண்பரின் சந்தர்ப்பத்தால் ஏற்பட்ட நிலைகள் செயல்படுத்தமுடியாது,

“அவரைக் கெடுத்துவிடக்கூடாது என்று நாம் சொன்ன நிலைகளுக்கு அடுத்து நம்மை.., மதிப்பு குறைவாக எண்ணுவார்களே.., என்று தன்னைக் காத்திடும் நிலைகள் கொண்டு உண்மையைச் சொல்லாமல்.., மறைத்து விடுவார்.

மறைத்த உடனே அடுத்தபடி இவரின் சிந்தனைகள் எப்படி வரும்? இதெல்லாம் வேண்டாம்.., பார்த்துச் செய்.., என்று சொன்னார்களே என்ற உணர்வுகள் அவருக்குள் வித்தாகிவிடும்.

வித்தாகி இந்த உணர்வின் தன்மை வலுவாகி அவர்களுடைய எண்ணங்கள் இங்கே ஓங்கி வளரப்படும் பொழுது இங்கு “எதிரியான உணர்வுகள் சேர்க்கப்பட்டு இப்படி உணர்வின் தன்மைகள் மாறுகின்றது.

நாம் குழம்பு வைக்கும்பொழுது அதிலே எல்லாப் பொருள்களும் கலவை சமமாக இருந்தால்தான் சுவையாக இருக்கும்.

ஆனால் புது உணர்வுகள் மாறப்படும்பொழுது இந்த குழம்பின் சுவை மாறுவது போன்று இவரின் உணர்வின் நிலைகள் வித்தாக மாறுகின்றது.

இதைப்போல நாம் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் அது வித்தாக (வினையாக) மாறி அங்கே எதிரியாக உருவாகின்றது. 

அதே சமயத்தில் நாம் எடுத்துக்கொண்ட உணர்வுகள் ஊழ்வினையாகப் பதிவாகி வினைக்கு நாயகனாக.., நமது உடலில் இருந்து வரக்கூடிய “மணம் அது உருவாகிவிடுகின்றது.

இந்த மணமே நாம் சிந்திக்கும்பொழுதெல்லாம் வேதனையும் நாம் சுவாசிக்கும்பொழுது உடல் உறுப்புகள் சீராக இயங்காதபடி நாம் எடுத்துக் கொண்ட கலக்க உணர்வுகள் நம் உயிரின் நினைவலைகளுக்கு இயக்கத் தொடங்கும்.

அடுத்து நாம் சுவாசிக்கும் உணர்வின் நிலைகளுக்கு வரப்படும்பொழுது அது விரிவடைந்து இயக்கும் தன்மை குறைந்து அதற்குள் நாம் எடுத்துக்கொண்ட நிலைகள் சரியாக விரிவடையும் பொழுது அதனுடைய அழுத்தத்தை வெளித்தள்ளும் நிலையை இழந்துவிடுகின்றது.

வெளியேற்றும் நிலை குறையும்போது உள்ளே சிறு துகள்கள் நெருங்கி அதே சமயத்தில் சுவாசப்பைக்குள் அதாவது நுரையீரலுக்குள் இருக்கும் இந்த உணர்வுகள் பற்களைப்போன்று அது அழுத்தத் தொடங்கும்.

வெளி உந்தும் நிலையிலும் அதனை வழித்திடும் நிலைகொண்ட நுரையீரலில் இவைகள் சிறுகச் சிறுக தேங்கிவிடுகின்றது.

இப்பொழுது ஒரு கவலையோ அல்லது பசப்பு உண்டான நிலைகள் மேலே பட்டால் நமக்குள் அரிப்பு ஏற்படுவதுபோல உள்ளே அந்த நுரையீரலில் அந்த உணர்ச்சிகள் தூண்ட நீர் கோர்த்துவிடும்.

சுவாசப்பைகளில் இது நீராக வடிந்து சலிப்பு என்ற நிலைகளை எடுத்துக் கொண்டால் உப்புச் சத்து அதிகமாகிவிடுகின்றது,

சலிப்பு என்பது உப்பின் சத்து. நாம் நைப்பு என்று சொல்லுகின்றோமே இதைப் போல உணர்வுகள் மாறி சலிப்பு என்ற நிலைகள் அடையப்படும்பொழுது இந்த உறுப்புகள் நீர் கோர்த்து  “சுவாசப்பை சரியாக இயங்காதபடி.., ஆஸ்த்மா போன்ற நோய்கள் வரும்.

அதன் தொடர்ச்சியில் அடிக்கடி சலிப்பின் தன்மையை அடைய நேர்ந்தால் அத உப்புச் சத்தின் நிலைகள் இரத்தத்தில் சேர்க்கப்பட்டு சிறுநீரகம்.., சரியாக இயங்காத நிலைகள் அடைந்துவிடுகின்றது. 

இப்படி நாம் எடுக்கும் உணர்வுகள் ஆன்மாவில் சேர்ந்த சுவாசம் தைப்பிரிக்கும் நிலை இழந்து நாம் எடுக்கும் சலிப்பின் தன்மைகள் இரத்தத்துடன் கலந்து சுழலத் தொடங்கும்.

ஆக, நாம் உணவாக உட்கொள்ளும் அல்லது நமது எண்ணத்திற்குள் கலந்து சென்ற அந்தத் தீய விஷத்தை இரத்தத்திற்குள் கலக்காமல்.., பிரிக்கும் நிலைகளின் செயலை இழந்து விடுகின்றது.

அப்பொழுது நாம் சிந்திக்கும் நிலையை இழந்து விடுகின்றோம். நாம் எதைச் சுவாசித்தாலும் நாம் எப்படி உணர்வின் தன்மையை உணர்வில் உள்ள நஞ்சை மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வின் தன்மையை ஆன்மாவாக மாற்றுகின்றதோ

இதைப்போல இந்த ஆன்மாவில் பிறர் எண்ணும் உணர்வுகள் நமக்குள் கவர்ந்து ஊழ்வினையாகப் பதிந்தாலும் அந்த உணர்வின் தன்மை நமது ஆறாவது அறிவிற்குள் இந்த ஆன்மாவாக மாற்றியபின் இது சுவாசிக்கும்  உணர்வுகள் நம் உணவுடன் கலந்து அது இரத்தத்துடன் கலந்து வந்தாலும் இது அதிகமாகச் சேர்ந்து விடுகின்றது.

அந்த நிலையில் வேதனை என்ற உணர்வுகள் அதிகமானால் நமக்குள் இருக்கும் சிறுநீரகம்நஞ்சினைப் பிரிக்கும் செயலை.., இழந்துவிடுகின்றது.

அது செயல் இழக்கப்படும் பொழுது அறுசுவை உணவு உட்கொண்டாலும் சுவை அற்றதாக நம் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து யார் சமைத்துப் போட்டர்களோ அவருடன் சண்டையிடும் நிலையும்.., வெறுப்பும் வேதனையும்.., அடைகின்ற தன்மை அதிகமாகும்.

அந்த வேதனையின் தன்மை அதிகமாகும்பொழுது மனிதனின் பரிணாம வளர்ச்சியின் நிலைகளில் நம் நஞ்சினை நீக்கிடும் இந்த ஆறாவது அறிவின் தன்மையை முழுமையாக அந்த நஞ்சினை அடையும் தன்மையாக ஆக்கி விடுகின்றது.
2. தீயவினைகளை தீய வித்துக்களை நமக்குள் வளர விடாமல் செய்தல்
இவ்வாறு அடைந்த நிலைகள் நமக்குள் தீய வினைகளாகச் சேர்ந்து மனிதனின் உணர்வின் நிலைகளை நாம் எப்படி பரிணாம வளர்ச்சியில் இருந்து வந்தோமோ அதன் நிலைக்கே (ஆரம்ப நிலைக்கே) நமது உயிர் அழைத்துச் சென்றுவிடுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக பரிணாம வளர்ச்சியில் நஞ்சினை நீக்கி வந்தோம் மனிதனானபின் நஞ்சினை நுகர்ந்து வளரும் நிலைகள் வந்தால் மீண்டும் நஞ்சு கொண்ட உயிரனங்களாக நம் உயிர் நம்மை உருவாக்கிவிடும். 

இந்தத் தீய வினைகளை (தீய வித்துகளை) வளரவிடாமல் தடுக்க வேண்டும் அல்லவா?

அதற்குத்தான் நமது வாழ்க்கையில் நாம்    எப்பொழுதெல்லாம் தீமைகளைக் காணுகின்றோமோ.., நுகர்கின்றோமோ.., உடனே அதைச் சதுர்த்தி  செய்யவேண்டும் (வளர விடாமல் செய்ய வேண்டும்) என்பதற்குத்தான் “விநாயக சதுர்த்தி என்பதை ஞானிகள் உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் இயற்கையில் விளைந்தவற்றை உணவாகப் புசித்து வந்துள்ளோம்.  ஆனால் மனிதனான பின் இயற்கையில் விளைந்த அனைத்தையும் வேகவைத்துச் சுவையா உணவாக உண்ணுகின்றோம். 

தாவரத்தில் விளைந்ததை வேக வைத்துவிட்டால் அது மீண்டும் முளைக்காது.

இதைப் போன்று நாம் நமது வாழ்க்கையில் வேகாநிலை அடைந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரொளியைக் கவர்ந்து நமது இரத்தங்களிலே செலுத்தி உடல் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.

அப்படி நம் உடல் முழுவதும் பரவச் செய்து நம்மையறியாது நுகர்ந்த நுகரும் தீமைகளை தீய வினைகளை "துருவ நட்சத்திரத்தின் பேரொளி கொண்டு வேக வைத்து நஞ்சை நீக்கிடல் வேண்டும்.

துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளி உணர்வுகள நமக்குள் சேர்த்து வினைக்கு நாயகனாக்க வேண்டும். அதன் வழியில் பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

அத்தகையை நிலை அனைவரும் பெறவேண்டும் என்று தவம் இருப்போம்.