ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 19, 2019

உடல் உறுப்புகளுக்குள் ஏற்படும் புண்கள் பற்றியும் தலையில் உருவாகும் செல்கள் (பேன்) பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது


1.அணுவுக்குள் அணு வளர்க்கும் வளர் தன்மை எத்தகையது…?
2.அணு வளர்ப்பின் இயற்கைக் குணம் ஜீவ சக்தியுடன் எப்படி மாற்றம் கொள்கிறது…?

இயற்கை வளர்ப்பில் வளர்ந்த கனிகளில் சாதாரணமாக வாழைப்பழத்தின் பழுத்த நிலைக்குப் பிறகு அக்கனியைப் பூமியின் ஈர்ப்பில் அப்படியே விட்டு விட்டால் என்ன ஆகின்றது…?

1.அந்தக் கனியானது அழுகிய தருவாயில்
2.பூமியின் வெக்கை அதன் மேல் பட்டு பூமி மீண்டும் ஈர்த்து
3.அக்கனியின் சுவை அமிலமுடன் இந்த உஷ்ண அலை ஈர்ப்புப்பட்டு வெளி வரும் பொழுது
4.அதன் அழுகிய தன்மையில் பல அணுக்கள் தோன்றுகின்றன.

தோன்றிய உயிரணுக்கள் எவ் அமிலத்தில் எச்சுவை கொண்டு அவ்வணு வளர்ந்ததோ அதன் தொடர்பு கொண்ட அணு வளர்ச்சி உருவத் தொடர்கள் “புழுக்களாக…” வளர்கின்றன.

இதன் நிலையை உணர்த்துவது எதற்கு…?

மனித பிம்ப உடலுடன் இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியில் வாழும் நாம் இந்தப் பிம்பக் கூட்டின் சுவாச அலையில்
1.எப்படி வாழைக் கனியிலிருந்து அதன் வெக்கையில் பட்ட உயிரணு தோன்றியதோ அதைப் போன்று தான்
2.ஒவ்வொரு ஜீவ சக்தியிலும் உணர்வின் சுவாசம் எடுக்கும் நிலையில் ஏற்படும்
3.வெக்கை உயிரணுக்கள் தான் உடல் பிம்பக் கூட்டிலும் வளர்கின்றது.
4.எடுத்து வெளியிடும் சுவாசத்திலும் அதன் தொடர்பு கொண்ட அணுக்களின் வளர்ச்சி தான் வளர்கின்றது.

ஒவ்வொரு ஜீவ சக்தியின் தொடர்பிலும் அணுவுக்குள் அணு வளரும் தன்மையில் அந்தந்த இனக் கலவை உயிரணுக்கள் வளர்வதுடன் பிறிதொரு அமில உயிரணுக்களின் செயல் எப்படிக் கூடுகின்றது..?

மனிதனின் உடலில் வளரும் புழுக்களும் தலையில் வரும் பேன்களும் எப்படி உருவாகின்றன…?

அமைதியுடன் ஆரோக்கியமான சந்தோஷ வாழ்க்கையில் உள்ள மனிதர்களுக்கு அது அதிகம் வருவதில்லை.

ஆனால் சலிப்புப்பட்டு சோர்வுப்பட்டு சங்கடம் போன்ற வறுமையில் வாழும் இன்னல்படும் ஆத்மாக்களின் உணர்வில்
1.அவர்கள் எடுக்கும் இச்சுவாச அலையின் வெக்கையானது
2.ரோமக் கால்களில் வெளிப்படும் அமிலக் கசிவில்
3.உடல் வெக்கையின் உஷ்ண அலையின் விகிதத்தைக் கொண்டு
4.இச்சஞ்சலமான நிலையில் உள்ளவர்களின் அலைகளில் இந்தப் பேன் வளரும்.

உடல் உறுப்புகளில் இவ் உணர்வின் கசிவில் வெளியில் உள்ள தூசிகளோ சில அழுக்குகளோ படும் பொழுது என்ன மாதிரியான பாதிப்பு வருகின்றது…?

1.உடலில் ஏற்படும் வெக்கையினால் வெளிப்படும் வியர்வையின் அமிலத்தின் மேல்
2.காற்றலையில் உள்ள சில உயிரணுக்கள் படும் பொழுது  
3.அவற்றின் வளர்ப்பாக அணுவுக்குள் அணு வளர்ந்து
4.அவை பெருகி ஏற்படுவது தான் உடல் உறுப்புகளில் ஏற்படும் சில கட்டிகளும் புண்களும்.

அவற்றின் கசிவு வளர்ப்பு அணுக்களினால் படரும் தொடர் நிலையை அவற்றை அழிக்கக்கூடிய சக்தி கொண்ட சில மருந்துகளால் வைத்தியத்தின் மூலம் மாற்றுகின்றார்கள்.

அணுவுக்குள் அணு வளரும் தன்மையில் இன்று விஞ்ஞான ரீதியில் தாவரங்களையும் மிருக இனங்களையும் சில கலப்புகளைச் சேர்த்து மாற்றி அமைக்கின்றார்கள்.

நாய் நரி இவற்றை மாற்றியதைப் போல் மனிதனுக்குச் சேவை செய்யக் கொரில்லாக்கள் போன்ற இன விருத்தியை குரங்கின் இனத்துடன் மனித அமிலத்தைச் சேர்த்து வளர்த்த மனிதர்களே இன்று அவை வளராவண்ணம் தடுத்தும் விட்டனர்.

இதை எல்லாம் உணர்த்தும் முறை எதற்கு…?

உடல் என்ற பிம்ப உணர்வு அமிலக்கூட்டில்…
1.பல கோடி ஆண்டுகளாக அணுவுக்குள் அணு தோன்றி உரு மாறி மாறி
2.ஒவ்வொன்றின் உருவச் சேமிப்பின் முலாமுடன்
3.இன்று வழித் தொடர் கொண்டு வளர்ந்து வாழ்ந்து கொண்டுள்ள நாம்
4.எச்சக்தியும் செயலாக்கக்கூடிய எண்ண ஆற்றலின் ஞான வளர்ச்சிக்கு
5.எண்ணத்தால் எடுக்கும் உணர்வலையின் நற்சுவாசத்தால்
6.இந்த உடல் அமிலத்தில் ஏற்கனவே உரு மாறி மாறி ஒவ்வொரு தொடர்பிலும் சேமித்த அமிலக்கூட்டில்
7.நற்சக்தியுடன் கூடி வந்த தீய குண அமிலத்தையும் உயர்ந்த சக்தியாகவும் ஆக்கிட முடியும்.

அணு தோன்றி… அணு வளர்ப்பின் வளர் தொடர் வள்ர்ப்பின் அணுக்கள் தான்… தொடர் அணு வளர்ச்சி நிலை…!
1.ஆகவே அணுவுக்குள் அணுவாக மகரிஷிகளின் உணர்வலைகளை ஊன்றி
2.உயர் உணர்வின் ஞானத்தில் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.