ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 16, 2019

கண்ணணான கண்களின் இயக்கங்களையும் அருள் வழியில் அதைப் பயன்படுத்தும் முறைகளையும் பற்றி வியாசக பகவான் உணர்த்தியது


மகாபாரதப் போர் என்றும் குருக்ஷேத்திரப் போர் என்றும் அந்தக் குருக்ஷேத்திரப் போரைக் கண்ணன் எப்படி வழி நடத்திச் செல்கிறான் என்ற நிலைகள் காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.

1.நமது கண்கள் எப்படி இயக்குகிறது…? என்ற நிலையும்
2.நுகர்ந்த உணர்வுகள் அணுக்களாக உடலுக்குள் எப்படி உருவாகிறது…? என்றும்
3.அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது உயிர் ஆணையிடும் பொழுது சிறு மூளைப் பாகம் சென்று
4.அதே சமயத்தில் உயிரிலே இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பி
5.கண்ணுக்கும் செவிக்கும் உடலுக்கும் நம் மனத்திற்கும் இந்த உணர்வுகள் இயக்கி
6.நமக்குள் எப்படி அறிவிக்கச் செய்கிறது என்ற நிலையை வியாசகர் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

தீமையான உணர்வுகளை ஒரு தடவை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கி விடுகின்றோம். மீண்டும் அதனின் நினைவை எடுக்கப்படும் பொழுது நம் உயிருடன் சேர்த்து அந்த உணர்வுகள் அந்தப் போரை… சங்க நாதம் எழுப்புகின்றது நம் கண்கள்.

அதாவது தீமை செய்பவர்களை நினைத்து நாம் சுவாசித்த பின் அது நம் உயிரிலே படும் பொழுது அந்த உணர்வுகள் இயக்குகின்றது.
1.உணர்வின் ஒலி அலைகள் பட்ட பின் நம்மைக் காத்திடும் உணர்வுகள்
2.நாம் எதை எண்ணினோமோ - நியாய அநியாய உணர்வுகள்
3.அந்த வலுவின் தன்மை கொண்டு எதிர்த்து உள்ளே போராடச் சென்று விடுகின்றது.

ஒரு வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நம்மைப் பலவீனம் அடையச் செய்துவிடுகின்றது. நம் செயல்களைச் சீராகச் செய்ய முடியாதபடி ஆக்குகின்றது.  

உதாரணமாகத் தன் பையன் மீது வெறுப்பின் தன்மை வந்துவிட்டால் பையனுக்காக வேண்டிச் சேர்த்த சொத்தையும் அல்லது நாம் சேமித்து வைத்த மற்ற பொருளையும் எடுத்து அடித்து நொறுக்கும் தன்மை தான் வருகின்றது.

நொறுக்கும் உணர்வுகள் வரப்படும் பொழுது நாம் எதை எண்ணினோமோ அதுவாகவே நாம் மாறுகின்றோம். அதைத்தான் கீதையிலே கண்ணன் கூறுவது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று வியாசகர் அதைத் தெளிவாக்குகின்றார்.

வியாசகர் என்றால் கல்வியறிவு இல்லாத மூடனாக இருந்தாலும்
1.வியாபித்திருக்கும் உணர்வுகளைத் தனக்குள் அறிந்துணரும் சந்தர்ப்பம் பெற்ற பின் அவர் அனைத்தையும் அறிந்தார்.
2.அதனால் வியாசகர் என்ற காரணப் பெயரைச் சுட்டிக் காட்டினார்கள் அக்காலங்களில்.

பகவான்…! என்றால் தன்னுடைய நிலைகளில் எல்லா உணர்வையும் நுகர்ந்தார்… அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்தார். அதற்கு “பரமாத்மா…” என்று வியாசகர் ஒரு பெயரை வைத்தார்.

பரத்தில் இருக்கக்கூடிய ஆத்மாவைத் தனக்குள் எடுத்துத் தனக்குள் வளர்த்தார் என்பதற்குத்தான் “வியாசக பகவான்…!” என்ற பெயர்களை வைத்தார்கள்.

ஆக…
1.மனித வாழ்க்கையில் நம்மை அறியாமல் மறைமுகமாக எப்படித் தீங்குகள் விளைகின்றது…?
2.நம்மை அறியாது தீமைகளை எப்படி விளைவிக்கச் செய்கின்றது…?
3.நம்மை அறியாமலே நமக்குள் உணர்ச்சிகளை எப்படித் தூண்டுகின்றது
4.நம்மை அறியாமலே நமக்குள் ஏற்படும் இந்த உணர்ச்சிகள் நம் எதிரிக்கும் அது தூண்டப்பட்டு அந்த உணர்வுகள் என்ன செய்கிறது…?

நமக்கு ஒருவர் அடிக்கடி தொந்திரவு செய்கிறார் என்று எண்ணும் பொழுது இந்த உணர்வுகள் நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. அதே சமயத்தில் எதிரிகளின் உடல்களிலும் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

நமக்குள் வெறுக்கும் உணர்வுகளே தூண்டுகிறது. அந்த வெறுக்கும் உணர்ச்சிகளைத்தான் அது ஊட்டும். நமக்குள் அதனதன் உணவுக்காகப் போராடும். அதனதன் உணர்வுக்கு அங்கே போராடும்.
1.எதிரிகளை நமக்குள்ளும் வளர்க்கின்றோம்
2.அங்கேயும் எதிரிகளை வளர்க்கும் சக்தியே வருகின்றது.

ஆனால் இதை எல்லாம் தடைப்படுத்தும் உணர்வுகள் பெற்றவன்… இதை வென்றவன் துருவ மகரிஷி. அவன் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்,

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவருமேயென்றால் அதை நாம் நுகர்வோம் என்றால் நமக்குள் அது நாரதனாக இயக்கத் தொடங்குகிறது.

நாரதனாக நமக்குள் சென்ற பின் “நாம் எதைப் பிடிவாதமாக வைத்திருக்கின்றோமோ…” அந்த உணர்வைத் தணிக்கச் செய்கின்றது.

அப்பொழுது நாம் யார் மீது வெறுப்படைந்தோமோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்ற உணர்வை வலுப்படுத்தி
1.நம் கண்களின் நினைவாற்றலை அங்கே செலுத்தப்படும் பொழுது
2.கண்ணன் (கண்கள்) நாரதனுக்குண்டான நிலைகளை இங்கே சொல்லி
3.கண் கொண்டு பாய்ச்சப்படும் பொழுது எதிரியின் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை அந்த நாரதர் வேலையைச் செய்யும்.

பகைமையாக்கும் உணர்வுகளுக்குள் இந்த அருள் ஞானியின் உணர்வுகள் சென்ற பின் அங்கே சற்று சிந்திக்கச் செய்யும் சக்தி வருகின்றது.

அதைத்தான் நாரதன் கண்ணனிடம் செயலாக்கிய பின்
1.இவர்கள் இரண்டு பேருடைய உணர்வுகளுக்கும்
2.கண்களுக்கும்… நுகர்ந்த உணர்வுகளுக்கும் எவ்வாறு செய்கிறது…? என்று
3.வியாசகர் எவ்வளவு தெளிவாக எழுதியிருக்கிறார் என்ற நிலைகளை நாம் தெரிந்து கொண்டால் போதும்.