ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 30, 2019

நம்மைச் சார்ந்தவர்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணச் சொல்வதன் இரகசியம் என்ன…?


நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கினால்
1.இந்த அருள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் செல்கின்றது… .தீமைகளை அகற்றுகின்றது
2..நீங்கள் எண்ணிய உணர்வுகளை உங்கள் உயிர் உடலுக்குள் ஒளியான அணுக்களாக மாற்றுகின்றது
3.ஒளியான அணுக்களாக மாற மாற அது தீமைகளை அகற்றுகின்றது.

இப்படி நம் வாழ்க்கையில் நற்குணங்களை நாம் நுகர்ந்து நமக்குள் வளர்த்திடும் சக்தியைப் பெறவேண்டும். ஆகையினால் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து தீமைகளை வென்றிட வேண்டும் என்பதற்கே இதைச் செய்யச் சொல்வது.

இதை எல்லாம் ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால் நமக்குள் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை வளர்க்க வேண்டும். அந்த உயர்ந்த சக்திகளைக் கூட்ட வேண்டும்.

அருள் உணர்வுகளைக் கூட்டிய நிலையில் சிரமங்கள் பட்டுக் கொண்டுள்ளோருக்கு இதை நாம் எடுத்துச் சொல்தல் வேண்டும்.

ஆனாலும் இதை அடுத்தவர்களுக்கு நீங்கள் சொன்னாலும்…
1.நீங்கள் அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நுகர்ந்தே சொல்கின்றீர்கள்
2.அவர்கள் உடலிலிருந்து தீமைகள் அகல வேண்டும் என்ற உண்மை உணர்வுடன் நீங்கள் சொல்லப்படும் பொழுது நீங்களும் வளர்கின்றீர்கள்.
3.அதே சமயத்தில் அவர்களைத் தீமையிலிருந்து விடுபடவும் செய்கின்றோம்.

ஆகவே மற்றவர்களை நாம் அணுகும் முறைகள் இப்படித்தான் செயல்படுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணினால் இது தியானம். மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணினால் இது தவமாகின்றது.

1.தவத்தை மேற்கொண்டால் நாம் மகரிஷிகளின் செயலாக ஒன்றுகின்றோம்
2.மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் இணைகின்றோம்
3.அவர்கள் செயலாக நாமும் ஒன்றுகின்றோம்
4.அவர்கள் வேறல்ல நாம் வேறல்ல என்ற நிலையை எய்துகின்றோம்.