ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 9, 2019

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன ஆற்றலைத் தியானத்தின் மூலம் பெறச் செய்யும் ஞான வித்து


அகஸ்தியன் (மகரிஷியாக) ஆவதற்கு முன் அவனுடைய தாய் தந்தையர்கள் நுகர்ந்தறிந்த பச்சிலை மணங்கள் இப்பொழுது வெளிப்படுகிறது. வெளிப்பட்டுள்ள அந்த மணங்களை நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்க நாம் இப்பொழுது தியானிக்கப் போகின்றோம்.

1.அதை நீங்கள் நுகரும் பொழுது இப்பொழுது அவர்கள் காலத்தில் (பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்)
2.எப்படி நஞ்சினை வென்ற உணர்வுகளை அகஸ்தியன் கவர்ந்தானோ
3.அதே சக்தியை நாமும் பெற முடியும்.

அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் பல பச்சிலைகளை அரைத்துத் தன் உடலில் முலாமாகப் பூசினாலும் அந்த உணர்வுகளை அவர்கள் நுகர்ந்து கருவில் இருக்கும் அணுக்களுக்கு இந்தச் சக்திகளைக் கொடுத்தார்கள்.

அதையும் இப்பொழுது உங்களுடைய உணர்வுகளை நினைவாக்கி நினைவு கொண்டு அதைப் பெறத் தியானிக்கப் போகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழி நீங்கள் நுகரப்படும் பொழுது…
1.நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஆற்றலை நீங்கள் பெறப் போகின்றீர்கள்.
2.உங்கள் உடலிலே வளர்ந்து வரும் அந்த அணுக்களும் இதை நுகரப் போகின்றது.
3.அதன் வழி அன்று அகஸ்தியன் பெற்ற… அவன் வளர்ந்த… வளர்ச்சி பெற்ற அந்தத் திறனை எல்லாம்
4.நாம் அனைவரும் பெறப் போகின்றோம்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற நினைவினை உங்கள் உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அதை நாம் நுகரப்படும் பொழுது அனைவருக்கும் அவர்கள் பெற்ற (அகஸ்தியன், அவன் தாய் தந்தையர்) அருள் சக்தியிலிருந்து வெளிப்பட்டதை நீங்கள் நுகரும் சக்தி பெறுகின்றீர்கள்.

அந்த மணங்களை இப்பொழுது நீங்களும் உணர முடியும்.

மணத்தை உணர முடியவில்லை என்றால் உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் பரவுவதை (சக்கரம் போல் சுழல்வதை) உணரலாம்.
1.உங்கள் உடலில் தீங்கினை விளைய வைக்கும் அணுக்கள்
2.அது ஒடுங்குவதையும் உங்களால் உணர முடியும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப எண்ணித் தியானியுங்கள்.

அந்தச் சக்தி இங்கே படர்கின்றது… தியானிக்கும் உணர்வுகளில் அதை ஈர்க்கும் சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் திருமணமான பின் துருவ மகரிஷியாகப் பருவம் பெற்ற
1.அவர்கள் கணவனும் மனைவியும் துருவத்தை உற்று நோக்கி…
2.இருவரும் ஒன்றாக நுகர்ந்தறிந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் இப்பொழுது பரவி
3.உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அந்தச் சக்தியைப் பெறும்.

அதன் வழி உங்கள் நினைவின் ஆற்றல்… “துருவப் பகுதியில்” செல்லும். அங்கிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நீங்கள் நுகர்வீர்கள்… அந்த உணர்வுகள் உங்கள் உடலிலே பரவும்… உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெறும். உங்கள் இரத்தநாளங்களில் இவை அனைத்தும் கருவாக உருப்பெறும்.

1.உங்கள் புருவ மத்தியில் இளம் நீல நிற அலைகள் வரும்
2.அந்த உணர்வுகள் உயிரினின்று உடலுக்குள் பரவும் உணர்வுகளை நீங்கள் அறிவீர்கள்… காணலாம்…!

துருவத்தில் நிலை கொண்டு… துருவ நட்சத்திரமாக வானுலக ஆற்றலைக் கவர்ந்து இன்றும் ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து வரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் நினைவாற்றல் அனைத்தும்… துருவ நட்சத்திரத்தை எல்லையாக வைத்து விண்ணை நோக்கி நினைவைச் செலுத்தி… அதன் வழி கவர்ந்து… உங்கள் உடல்களில் இரத்தநாளங்களில் கலக்கச் செய்யுங்கள்.

1.இப்பொழுது உங்கள் புருவ மத்தியில் பளீர்…ர்ர்…! என்று இளம் நீல அலைகள்
2.உங்கள் உயிர் ஈர்க்கும் நிலையை உணரலாம்… காணலாம்
3.உங்கள் உடலுக்குள் இந்த உணர்வுகள் பரவுவதையும் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து வரும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது வான்வீதியில் மிதப்பதைப் போன்று உணர்வுகள் வரும்.

அரும் பெரும் காட்சியாக வானுலகம் உங்கள் உடல்களிலும் உணர்வுகளிலும் காண முடியும். வளர்ந்து வரும் உணர்வினை உங்களால் அறிய முடியும்.

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற “குலதெய்வங்களின் உயிரான்மாக்கள்…” சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து ஒளி பெறும் சரீரம் பெறவேண்டும் என்றும் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்றும் அவர்களை உந்திச் செலுத்துங்கள்.

எமக்கு குருநாதர் வழி நடத்திச் சென்ற அதே வழிப்படித்தான் இதை இந்த அதிகாலையில் தியானிக்கும்படிச் செய்தது. அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பதியச் செய்து அதை நீங்கள் நுகர்ந்து உடலில் பதியச் செய்யும் நிலையும் உருவாக்கியது.

1.அந்த அகஸ்தியன் பெற்ற விஷத்தை வென்றிடும் ஆற்றலும்
2.விண்ணுலக ஆற்றலைப் பெற்ற நிலைகளும் நீங்கள் இப்பொழுது நுகர்ந்திருந்தால்
3.அந்த மணங்கள் நுகர்ந்தவர்கள் அதை அறியும் பருவம் பெறுகின்றீர்கள்.

அகஸ்தியரை எண்ணித் தியானிக்கும் பொழுது “அவன் பெற்ற மகா பச்சிலைகளின் மணங்களை…” நீங்கள் நுகர்ந்திருப்பீர்கள்.

வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து துருவ எல்லையை துருவ மகரிஷிகளை எண்ணும் பொழுது
1.புருவ மத்தியில் இளம் நீல ஒளிக்கதிர்கள் - ஈர்ப்புடன் ஈர்ப்பு வட்டமாக
2.அந்த உணர்ச்சிகள் அந்த ஒளி அலைகள் தெரிந்திருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று வரும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளை நுகரும் பொழுது வானில் மிதப்பதைப் போன்று அந்த உணர்வுகளை நீங்கள் நுகர்ந்திருப்பீர்கள். உங்கள் உடலில் அந்தச் சக்திகள் படர்ந்திருக்கும்.

இதுகள் எல்லாம் அகஸ்தியன் கருவிலிருந்து அந்த உணர்வுகளைப் பெற்று அவனுக்குள் விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டதை சூரியனின் காந்தப் புலன்கள் கவர்ந்து அலைகளாகப் படரச் செய்துள்ளது.

இதனை நீங்கள் வரிசைப்படுத்தி உங்கள் உடலை உருவாக்கிய அணுக்கள் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்தினோம்.

அதன் வழி கொண்டு காற்றிலிருக்கும் அந்த அரும் பெரும் சக்திகளை நீங்கள் நுகர்ந்து அறியும் ஆற்றலும் அகஸ்தியன் வளர்ந்து வந்த அந்த அருளாற்றல் உங்களுக்குள் வளர்ச்சி பெறுவதற்கும் இது உதவும்.

அவர்கள் துருவ மகரிஷியாகி அதனின்று வெளிப்பட்ட உணர்வுகளை அவர்கள் சென்ற பாதையில் நீங்களும்
1.இதைக் கணவனும் மனைவியுமாகக் கவர்ந்து உங்களில் வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதற்கும்…
2.அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒருவரை ஒருவர் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுகள் வெளிப்படுத்தியதை உங்களில் பெறச் செய்வதற்கும்..
3.உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களைப் பெறச் செய்வதற்கும்
4.உங்கள் இரத்த நாளங்களிலே இரத்தங்களில் கலக்கச் செய்வதற்குமே இதைச் செய்தது.

பூமியின் ஈர்ப்பை விடுத்துச் சென்று துருவ நட்சத்திரமாக எல்லை கொண்டு பூமிக்கு வரும் அனைத்துச் சக்தியும் ஒளிக்கதிர்களாக மாற்றிக் கொண்டும் ஒளிச் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றோர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இப்படி உயிர் தோன்றி அகஸ்தியன் வழியில் நாம் செல்லும் பொழுது அடுத்து நம்முடைய எல்லை பிறவியில்லா நிலை தான்…!

எல்லையில்லாத அகண்ட அண்டத்தில்… என்றும் நிலையான உணர்வுகள் கொண்டு… அழியா ஒளிச் சரீரம் பெறும் நிலையைத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானித்து… உங்களுக்குள் பதியச் செய்து அதை ஞான வித்தாக ஊன்றியுள்ளோம்.

1.பதிந்த சக்தியின் துணை கொண்டு
2.நீங்கள் தியானிக்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு நிலைகளிலும் அந்தச் சக்தி கிடைக்கும்.
3.ஆகவே இந்தக் காலை துருவ தியானத்தை ஒரு பத்து நிமிடமாவது அவசியம் இருக்க வேண்டும்.