ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 25, 2019

உயிராத்மாவை ஞானகுருவாக ஆக்குவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


ஒன்று பலவாகும் வித்தை வளர்க்கும் சக்தி எத்தொடர்பின் வளர்ப்பில் வளர்கின்றதப்பா…? தான் பெற்ற சக்தியைப் பலரும் பெறவல்ல வழித் தொடர் வளர்க்கும் முறை எப்படி…?

மனித எண்ணத்தின் பகுத்தறியும் உணர்வு ஞானம் வளரும் ஈர்ப்பலைக்கு ஞானிகளின் வழி வகுத்து குடும்ப வாழ்க்கை முறையில் பல நெறி முறைகளைக் காவியக் கதைகளில் உணர்த்திச் சென்றார்கள்.

அதன் வழித் தொடரில் பக்தியை ஊட்டி மனித ஆத்மாக்களின் எண்ணச் சிதறலை வழி வகுத்து
1.மனிதன் தன்னை மறந்து சில தேவையின் இச்சையில் தன் உணர்வையே இழக்கும் நிலைக்குச் செல்வதை
2.அன்றே காவியங்களில் கதையாக - தெய்வங்களான நிலைக்குக் கதை உருவங்கள் தந்து செயல்படுத்தினார்கள்.

உடல் உறுப்புகள் செயலிழந்தாலும் கை கால்கள் முடம் ஏற்பட்டாலும் மனிதன் பகுத்தறியும் ஆற்றலினால் செயற்கை உபகரணத்தால் தன் தேவையை அமைத்துக் கொள்கின்றான்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயற்கையின் மாறுபாட்டுக்கு ஏற்ப வெயில் குளிர் மழை காற்று இவைகளைத் தாங்கக்கூடிய வீடுகளை அமைத்துக் கொள்கின்றான்.

அதை எல்லாம் செய்தாலும்… இந்தப் புவியில் வாழும் மனிதன்
1.தன் வளர்ச்சியால் ஆத்ம பலம் கொண்டு
2.பூமியின் ஈர்ப்பலையில் இருந்து விடுபடும் உணர்வின் செயலுக்கு
3.தன் ஆத்ம ஞானத்தை வளர்த்துக் கொண்டால் தான் மனிதனின் ஆத்ம பலம் கூடும்.

ஞானத்தால் சக்தி கொண்டு
1.தான் பெற்ற சக்தியைப் பிறிதொரு ஆத்மாவும் பெறவல்ல போதனையால்
2.எச்சக்தி கொண்டு நம் ஆத்ம ஞானம் வளர்ந்ததோ
3.அதற்கு வலுவான ஆத்ம வலு அலைச் சக்தியை நம் ஆத்மாவும் பெற்று வலுப் பெறகின்றது.

ஏனென்றால் காந்த மின் ஈர்ப்பு ஜீவ உயிர் இது…!

இந்த உயிர்த் துடிப்பின் ஆத்ம ஈர்ப்பின் வலு கூட்ட இவ்வுணர்வின் எண்ணத்தைப் பக்குவம் கொண்டு ஞானம் வளர்த்து ஞானத்தால் அறியும் உயர் ஞான வழி முறையை
1.ஞானம் வளர்க்கப் பிறிதொரு ஆத்ம சுழற்சி எண்ணத்தில் செலுத்தி
2.அந்த வலு சக்தியை நம் உயிராத்மா பெறவேண்டும் (இது முக்கியம்).

உயிர் தந்தாய்… உடல் தந்தாய்… குருதியினைப் பாலாக்கி வளர்த்திட்டாய்… என்று அன்னையை முதல் தெய்வமாக குருவாக வணங்குகின்றோம். ஒவ்வொரு மனிதனுக்கும் குரு யார்…?

தன் உயிராத்மா தான் முதல் குரு. தாயானவள் நம் ஈர்ப்பிற்கு ஜீவன் பெற வழி தந்து வளர்ச்சி தந்து முதல் குருவானாலும் இந்த ஆத்ம குரு வளர்ப்பினால் தானே அக்குருவை நாம் அடைய முடிகின்றது.

குருவின் உண்மை நிலை என்ன..? போதனையால் பெறுவது குரு அல்ல…!

1.குருவின் போதனையை குரு காட்டியை போதனையாக நம் ஆத்ம குரு ஏற்கும் பொழுது தான்
2.எக்குருவின் போதனையையும் இந்தக் குரு செயலாக்கி வழிப்படுத்தும் முறைக்கு வருகின்றது

நம் ஆத்ம குரு வளர்ந்தால் தான் குரு சிஷ்யத் தன்மை வளர்கின்றதப்பா…! இக்குரு முறை அனைத்து நடை முறைச் செயல்களுக்கும் ஒன்றியது தான்.

இவ்வாத்ம குருவை… ஞானம் வளர்க்கும் நற்குருவின் செயல் குருவாக… இவ்வாத்ம குரு வளர்வது தான் குருத் தன்மை பெறும் நிலை.

1.ஒவ்வொரு ஆத்மாவும் தன் உயிர்க்குருவை உயர் குருவாக
2.இந்தப் புவி ஈர்ப்புப் பிடி சுழற்சியிலிருந்து விடுபட்டு
3.இந்த உயிராத்மாவை ஞான குருவாக்குங்கள்.