ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 14, 2017

உருவாக்கிய கடவுளும் காத்தருளிய தெய்வமும் வழிகாட்டிய குருவும் நம் தாய் தான் – பெரும்பகுதியானவர்கள் நாம் தாயைச் சாதாரணமாகத் தான் எண்ணிக் கொண்டுள்ளோம்

நாம் புழுவாக இருந்திருப்போம். பூச்சியாக இருந்திருப்போம். அப்பொழுது (தாய்) கொன்றிருப்பார்கள். இந்த உயிர் அவர்கள் உடலுக்குள் போனால் அந்த உணர்வை எடுத்து நம்மை மனிதனாக உருவாக்கியது.

1.மனிதனாக உருவாக்கிய பின் அவர்கள் உயிர் கடவுள்”.
2.நாம் குழந்தையான பின் தெய்வமாக இருந்து நம்மைக் காப்பாற்றுகிறது.
அடுத்து குருவாக இருந்தும் இது நல்லதப்பா…, இது கெட்டதப்பா…,” என்றும் நமக்கு நல்ல வழிகளைச் சொல்லிக் கொடுக்கின்றது.

அதைத்தான் தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்குவோம். நல்வழி காட்டும் குருவை அடைவோம் என்று சொல்வது.

எந்தக் குருவை?

தாயை நம் குருவாக அடைதல் வேண்டும்.

ந்த முறைப்படி நீங்கள் செய்து அடிக்கடி தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு நீங்கள் எந்தக் காரியத்திற்கும் செல்லுங்கள்.

நான் வேலை செய்யுமிடத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும், அது வேண்டும் இது வேண்டும் என்று ஒரு சாமியாரிடமோ மற்றவர்களிடமோ கேட்க முடிகின்றது. ஆனால்,
1.“அம்மாவிடம் கேட்கக் கூச்சமாக இருக்கின்றது.
2.பெரும் பகுதி எல்லோரும் இப்படித் தான்.
3.தாயின் அருமையைத் தெரிந்து கொள்ளாமல் தான் நாம் இருக்கின்றோம்.
4.எப்பொழுதுமே தாயின் உணர்வே நமது உடல்.
5.நாம் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு.
6.நம்மைக் காத்திடும் உணர்வுகள் தாய்க்குள் விளைந்தது உண்டு.
7.அந்த உணர்வுகள் நமக்கு முன் உள்ள காற்றிலேயும் உண்டு.

இதை முறைப்படுத்தி இருந்தால் காற்றிலே வரக்கூடிய காட்டுக்குள்ளே போகின்றோம். ஒரு புலி வருகின்றதென்று வைத்துக் கொள்வோம்.

”அம்மா...,” என்று மட்டும் சொல்லிப் பாருங்கள். அந்த உணர்வின் தன்மை வரப்படும் போது தாயின் உணர்வுகள் காற்றிலே இருக்கின்றது. குவித்து…” வலுப் பெற்றுக் கொள்ளும்.

நம்மைத் தாக்க வந்த புலியும் தாய்ப் பாசம் உள்ளது. அந்தத் தாயின் உணர்ச்சிகள் வரும்பொழுது அதனுடைய மனதை மாற்றி அமைக்கும். உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

யானையே காட்டுக்குள் தாக்க வருகின்றதென்று வைத்துக் கொள்வோம். அம்ம...என்று சொன்னால் போதும். உங்களைத் தாக்காது.

இப்படி யாம் சொல்லிக் கொடுத்ததில் அனுபவத்தில் பெற்றவர்கள் எத்தனையோ பேர் உண்டு.

ஆகையினால் தாய்க்கு உண்டான சக்தியை நாம் மறந்து வாழ்கின்றோம். தாய்க்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு.

1.நாம் சாமியாரைப் பார்த்து விட்டு வரம் வாங்கப் போகின்றேன் என்று நினைப்பதைக் காட்டிலும்..,
2.என்னைக் (ஞானகுரு) கேட்டு “நான் வரம் வாங்கப் போகின்றேன் என்று என்னிடம் நீங்கள் கேட்பதைக் காட்டிலும்
3.தாய் மூலம் எளிதில் பெறலாம்.

நான் சொன்னதை நீங்கள் எடுத்தால்தானே அது நடக்கும்.

அதே மாதிரி தாய் சொன்னதை எடுத்தால் என் பையன் எப்பொழுதுமே உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்என்று என்னைக் காட்டிலும் அந்தத் தாயின் உணர்வின் பதிவு உங்களுக்குள் அதிகம் உண்டு.

தாயின் உடலே நீங்கள். ஆகவே இதனின் உணர்வை எடுக்கும் போது “உங்கள் தாயின் உணர்வே காக்கும்.

தொழிலிலே நஷ்டம் வருகின்றது கஷ்டம் வருகின்றது.., என்று சாமியாரிடம் போய்க் கேட்கின்றீர்கள் என்னிடம் கூடக் கேட்கின்றீர்கள்.

ஆனால் அதற்குப் பதில் அம்மா.., ”எனக்கு இந்தத் தொழிலில் லாபம் வர வேண்டும். உங்களது ஆசிர்வாதம் உறுதுணையாக இருக்க வேண்டும். நான் சிந்தித்துச் செயல்படும் அந்த சக்தி பெற வேண்டும்என்று தாயாரை எண்ணுங்கள்.

அதே மாதிரி தாயார் இல்லை என்றாலும் தாயார் படம் இருந்தால் அதைப் பார்த்து எண்ணி விட்டு நீங்கள் செயல்பட்டுப் பாருங்கள். தாயின் உணர்வுகள் உடலாக இருந்ததால் அந்த உணர்வுகள் காற்றிலே உண்டு. அதை உங்களால் பெற முடியும். அப்பொழுது உங்களுடைய காரியங்களெல்லாம் ஜெயமாகும்.

“அது எப்படி..,?” என்று எண்ணாதீர்கள். உங்களால் முடியும்.

உங்களது தொழிலுக்குச் சிலர் வேண்டுமென்றே தீமைகளைக் கொடுக்கின்றனர். தொல்லைகளைக் கொடுக்கின்றனர். நம்மை எப்படியும் துரத்த வேண்டும் என்று முயற்சி எடுக்கின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது நீங்கள் உங்கள் தாயை மட்டும் எண்ணி
1.”அம்மா.., இங்கே இருப்பவர்களுக்கெல்லாம் நல்ல குணங்கள் வர வேண்டும்.
2.நல்ல உணர்வை நீ ஊட்ட வேண்டும். அந்த அருளுணர்வு இங்கே படர வேண்டும்.
3.தொழில் செய்யும் இடங்களிலே அன்பு பரவ வேண்டும். அருளுணர்வு பெருக வேண்டும்.
4.அந்த அருள் ஞானம் நான் செல்கிற இடங்களில் எல்லாம் படர வேண்டும் என்று நீங்கள் அம்மாவை நினைத்துப் பாருங்கள்.

இந்த உணர்வுகள் தாயின் உணர்வுடன் வலுவாகி இந்த உணர்வைப் பெறப்படும் போது பகைமை உணர்வுகள் உள்ளவன்.., மாற்றிக் கொள்வான். நமக்குள் அந்த உணர்வின் தன்மை வலிமை பெறும்.

இதைச் சிறிது காலம் நீங்கள் செய்து பாருங்கள். உங்களது தாயின் பேரன்பை நீங்கள் உணரலாம்.

ஆனால், நீங்கள் சாதாரணமாகத் தாயை எண்ணுகின்றீர்கள்.

நாம் கஷ்டப்படுவதைக் காட்டிலும் எவ்வளவு தொல்லைகள் பட்டு எத்தனை இன்னல்கள் பட்டு நம்மை வளர்த்தது.

தாயை மறந்தவர்களாகத்தான் பெரும் பகுதியானவர்கள் நாம் இருக்கின்றோம்.

ஏனென்றால் நம்மை உருவாக்கிய கடவுள் அவர்கள். தெய்வமாகக் காத்தது தாய். நல்ல வழிகளைக் கற்றுக் கொடுத்ததும் குருவாக இருப்பதும் உங்கள் தாய்.

இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவு ண்டு. இது காற்றிலேயும் உண்டு. உங்களுக்குள் உண்டு. இதன் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பெறவேண்டும் என்றால் எளிதில் பெறலாம். அந்த வலிமை கூடுகின்றது.

இதைப்போல எண்ணும்போது நம் குரு காட்டிய அருளுணர்வுகள் உங்களுக்குள் உறுதுணையாக இருந்து இதையெல்லாம் பெறக்கூடிய தகுதி ஏற்படுத்துகின்றது. இதை நீங்கள் பின்பற்றுங்கள்.

அதே சமயத்தில் இப்பொழுது நமது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிகளில் தாயின் வழிகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்ற ஆசைப்பட்டால் இது இச்சா சக்தி.

அப்பொழுது இந்த உணர்வுகள் உங்களுக்குள் கிரியையாகி அந்த ஞான சக்தியாக உங்களை இயக்கும். தாயின் துணை கொண்டு அதை எளிதில் பெறலாம். இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி”.


இந்த உணர்வின் தன்மை நம் உடலில் வரப்படும் பொழுது தீமை அகற்றிடும் ஞானம் வருகின்றது. அந்த ஞானத்தின்படி நாம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.