ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 23, 2017

“மெய் ஞானம் பெறும் மெய் ஒளி பெறும்…,” சரியான அந்தச் சந்தர்ப்பம் எது?

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வாழ்க்கையில் நமக்குத் துன்பம் என்ற நிலைகள் எப்போது வருகிறதோ

1.அந்தத் துன்பத்தை மனதார நாம் ஏற்றுக்கொண்டு

2.இந்த இன்பத்திற்குண்டான வழியை

3.அந்த மெய் ஞானியின் அருள் ஒளியை நாம் ஏற்றுக்கொண்டு

4.துன்பத்தை நீக்கும் முயற்சியை எடுப்பதற்கு

5.”இந்தச் சந்தர்ப்பத்தை எடுத்து தியானமும் உங்களுக்கு ஆத்ம சுத்தியும் கொடுக்கின்றோம்.

ஓம் ஈஸ்வரா என்று உயிரான ஈசனை எண்ணிப் புருவ மத்தியில் நினைவினைச் செலுத்துங்கள்.

விண்ணிலிருந்து நம் பூமிக்குள் வந்து கொண்டிருக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து, எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று உடலுக்குள் கண்ணின் நினைவினைச் செலுத்துங்கள்.

இவ்வாறு ஆத்ம சுத்தியை நீங்கள் எடுக்கப்படும் பொழுது வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை நீக்கி வாழ்வினுடைய நிலைகளில் மனிதனாகப் பெற்ற புனிதத்தன்மையை நாம் பெறுகின்றோம்.

நமது வாழ்க்கையிலே நாம் சாதாரண மனிதனுக்குள் பழக்கப்பட்டுப் பழகி வரப்படும்பொழுது எதிர்பாராத சலிப்போ, சஞ்சலமோ, பயமோ, ஆத்திரமோ, கோபமோ, வேதனையோ இதைப் போன்ற உணர்ச்சிகள் தூண்டும்பொழுதெல்லாம் அடுத்தகணம் நாம் ஆத்ம சுத்தி செய்து நம் உடலில் வரக்கூடிய துன்பங்களை நாம் துடைப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பவசத்தால் எல்லை கடந்து துன்பங்கள் வரப்படும்பொழுது நாம் ஏங்கியிருக்கக்கூடிய நிலைகள்

1.நம்மை மறந்து

2.துன்பத்தை மறந்து

3.நாம் மெய் ஒளியின் தன்மை பெறவேண்டுமென்று

4.தியானத்தின் வழி நாம் கூட்டும் இந்த உணர்வின் ஆற்றல் அதை நாம் பெருக்கப்படும்போது

5.விண்ணின் ஆற்றலை நாம் பெறமுடியும்.

ஆகவே, நாம் ஒவ்வொரு நாளும் மெய் ஒளி பெறும் தியானத்தைக் கூட்டிக்கொள்வோம்.

ஒரு நாள் முழுவதும் உடலுக்காக வேண்டி நாம் பாடுபட்டு உழைத்தாலும் மெய் ஒளி பெறும் அந்தச் சந்தர்ப்பத்தை ஒவ்வொரு நாளும் ஒரு 10 நிமிடமாவது மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறவேண்டும் என்று தியானித்து அந்த ஆற்றல் மிக்க காந்தத்தைக் கூட்டிக் கொள்வோம்.

அதை நம் உடலிலே சேர்த்துக்கொண்டு ஒவ்வொரு நிமிடமும் நமக்குத் துன்பம் வரும்போது “ஈஸ்வரா என்ற எண்ணத்தைக் கொண்டு “மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும், எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று நாம் எண்ணி சுவாசித்து நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

ஒரு சமயம் இல்லாவிட்டாலும் ஒரு சமயம் எதிர்பாராத சங்கடத்தில் நாம் துன்பப்பட்டு நம் உணர்ச்சிகளைத் தூண்டி

1.மிக அதிகமான கஷ்டங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்திலே,

2.உணர்ச்சியின் வேகங்கள் உந்தி,

3.நாம் விண்ணின் ஆற்றல் மிக்க நிலைகளை

4.துரித நிலைகளில் பெறும் சந்தர்ப்பமும் கிடைக்கும்.


உங்களால் மெய் ஞானியாக முடியும்.., உங்களை நீங்கள் நம்புங்கள்.