
சிறிதளவு பேரையாவது உண்மைகளை உணரச் செய்து உலகைக் காக்கும் சக்திகளாக உங்களை வளர்க்க வேண்டும் என்பதே எம்முடைய நோக்கம்
கருப்பை
இல்லை… அதனால் குழந்தைப் பாக்கியம் இல்லை என்று டாக்டர்களால் கைவிடப்பட்ட நிலையில்
கணவன் மனைவியாக எம்மிடம் வந்து “எங்களுக்குக் குழந்தை வேண்டும்” என்று கேட்டார்கள்.
யாம் ஆசீர்வாதம் கொடுத்த பின் குழந்தை கிடைத்தது.
1.அதைப்
பற்றிப் பெருமைப்பட்டார்கள்.
2.ஆனால் அதற்குப்பின் சாமியைத் திரும்பி பார்த்தார்களா…? என்றால் இல்லை.
3.ஒரு நாள் ஒரு பொழுது கூட என்னிடம் வந்து எதையும் கேட்கவில்லை.
ஒரு முறை வீட்டிற்கு வர வேண்டும் என்று சொன்னார்கள். அதற்குப் பின் எம்மைச் சந்திக்கவும் இல்லை.
அப்பொழுது எம்முடைய அருள்
உபதேசங்கள் எல்லாம் என்ன…?
உங்கள் எண்ணம் தான் உங்களுக்குள்
(அந்த உணர்வுக்குள் குழந்தை கருவாகி) எப்படிப்
பதிவாகின்றது…? அதனால் “நான்
செய்தேன்” என்று எண்ண வேண்டியதில்லை என்று அவர்களுக்கு
உணர்த்தினோம்.
ஆக அவர்கள்
என்ன சொல்கிறார்கள் என்றால்… “சாமி செய்கிறார் என்றால் சாமியிடம்
என்ன சக்தி இருக்கின்றது…?” நம் எண்ணத்தால் தானே உருவாகின்றது என்று…!
1.எண்ணத்தின் உணர்வு கொண்டு உயிர் என்ன செய்கிறது…?
என்று யாம் சொல்கின்றோம்.
2.அதற்குண்டான ஒரு நல்ல கருவை ஞானத்தைக்
கொடுக்கின்றோம்.
3.ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் அந்தப் பருவம் வர வேண்டும் அல்லவா.
பின் இதை
எதற்காகச் (அவர்களுக்கு) செய்தோம்…?
1.மனம் ஒத்த நிலைகள் ஒத்து வரப்படும் பொழுது அந்த இணக்கங்கள்
நல் வழியை உயர்த்தும்
2.இது என் குருநாதர் எனக்குச் சொன்னது…!
போற்ற வேண்டும் என்று “நான்
செய்தேன்” என்றால் தவறுகள் கூடிக் கொண்டே தான் இருக்கும்.
நல்லவைகள் மறைந்து கொண்டுதான் இருக்கும்.
1.அனுபவரீதியிலே கொண்டு வருவதற்குத் தான் இதைச்
சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
2.சிறிதளவு பேராவது “இந்த உண்மைகளை உணர்ந்தால்” தெளிவாக இருக்கும்.
ஒரு நோயாளி
தன் நோயைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தால் இதே உணர்வுகள் தான்
எல்லோருக்கும் இயக்கப்பட்டு அந்த நோய் தான் மற்றவருக்கும்
பரவுகின்றது.
ஆனால் அருள் ஒளியைப் பெற்று நல்லதாகும் பொழுது “இதே
வாக்கினை நீங்கள் சொன்னீர்கள்” என்றால் உங்கள் வார்த்தைகளைக் கேட்டால் தீமைகளை அது அகற்றும்.
விளம்பரம் செய்யாததின் நோக்கங்கள் என்ன…? என்றால்
1.ஆசையை ஊட்டி விட்டோம் என்றால் அங்கே அறிவு
இழக்கப்படுகின்றது.
2.எதை குறிக்கோளாக வைத்து வந்தார்களோ அது தான் கிடைக்கும்.
3.அதன்படி
கிடைத்து வந்தாலும் அதைப் பாதுகாக்கும் சக்தி இழந்து விடுகின்றார்கள்.
சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா…! யாம் கொடுக்கும் அருள் சக்திகளைப் பாதுகாக்க
முடியாமல் போகின்றார்கள்.
1.அவர்களும் வளர்ப்பதில்லை…
2.மற்றவர்களுக்குப் பயன்படுவதுமில்லை.
ஆரம்பத்திலிருந்து இதைத்தான் நாம் தெளிவாக சொல்லிக் கொண்டு வருகின்றோம்
எத்தனையோ பேர்களை குருநாதர் காட்டிய வழியிலே நாம் தபோவனத்தில் பார்த்திருக்கின்றோம் அல்லவா…!
ஆகவே அந்த அசுத்த உணர்வு எப்படிப் போகின்றது…? அதனுடைய தாக்கத்திலிருந்து நாம் எவ்வாறு மீள வேண்டும்…? இது மிகவும் முக்கியமானது.
ஓசோன் திரை கிழியப்பட்டு எந்தெந்தப்
பகுதியில் அதன் வழி விஷத் தன்மைகள் வருகிறதோ
அங்கே அது பரவுகின்றது. ஆனால் ஒரே இடத்தில்
நிற்காது.
விஷத்தன்மைகள் பூமிக்குள் பரவினாலும் தன் இனத்தைச் சேர்த்து ஒரு குவியலாக
வரும். குறிப்பிட்ட
இடத்தில் தான் சுழன்று கொண்டிருக்கும் எல்லா இடத்திலும் வராது.
அப்பொழுது இந்த ஊரையும் தெருவையும் நாம் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
“அருள் ஒளி பெற வேண்டும் என்று” எல்லோரும்
1.ஒவ்வொருவருடைய உள்ளங்களிலும் பரவச் செய்து இந்த அலைகளைப் பரப்பி விட்டீர்கள் என்றால்
2.இந்த உணர்வு பரவிய பின் அந்த விஷத்தன்மைகளை இது விலக்கி
விட்டு விடும்.
3.இந்த ஒரு பகுதியாக பாதுகாக்கப்பட்டு நிற்கும்.
அதைச் செய்வதற்கு தானே யாம்
திரும்பத் திரும்ப இதை எல்லாம் உங்களுக்குத்
தெரியப்படுத்துகின்றோம்.