
விதி இயக்கினாலும்… செய்த பாவத்திற்கு அனுபவித்தாலும்… “அருள் பற்றை மட்டும் தான் நாம் வளர்க்க வேண்டும்”
சிலர் “கஷ்டம்
கஷ்டம் கஷ்டம்” என்று வந்து என்னிடம் சொல்லிக்
கொண்டிருக்கின்றார்கள். அதிகமாகச் சொல்லப்படும் பொழுது இந்த
உணர்வை யாம் எடுத்தவுடனே அது ஜீவன் பெறுகின்றது.
1.அபயக் குரலை இடுகின்றார்கள்… அது இங்கே வரப்படும் போது
நன்மை செய்ய எண்ணுகின்றோம்.
2.அந்த விதி…! உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது… சந்தர்ப்பங்கள் அதை உணர்த்தும்… உருபெற்றபடி என்ன செய்கிறோம்…?
வரபோகும் போது மேடான பாதையிலிருந்து காலை வைக்கப்படும் போது அங்கே சரியாக என்னால் போக முடியவில்லை.
1.அங்கே விபத்தாவதைத் தப்பிக்க (அபயம் கேட்டவர்களை) வைக்கின்றோம்.
2.ஆனால் இங்கே என் உடலைக் காக்க முடியவில்லை… விதி இங்கே வேலை செய்கின்றது (ஞானகுரு தனக்கு எலும்பு முறிந்ததைச்
சொல்கிறார்)
மீண்டும் அதையே எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்…?
1.அதனுடைய எதிர் அலைகள் ஏராளமாக வரும்… அப்பொழுது உடல்
பற்று வருகின்றது
2.விதிப்படி நாம் மீண்டும் பிறவிக்கு வருகின்றோம்… பல
துன்பங்களை அனுபவிக்க நேரும்.
அந்த உணர்வுகளை அதிகமாக வளர்த்து விட்டால் இதைப் போன்று பல இம்சைகளை
உருவாக்கக்கூடிய ஒரு உயிரினமாக உயிர் மாற்றிவிடும். “நம் உடலில் இப்படி
எத்தனையோ விதிகள் உண்டு…”
அதனதன் நிலைகள் வரப்படும் பொழுது
1.நாம் செய்த நிலைகளுக்கு இது கழிகின்றது…
2.இனி நாம் அருள் வழியை கூட்ட வேண்டும் என்ற நினைவில்
3.”போய்க் கொண்டே இருக்க வேண்டும்…”
எது எப்படி இருந்தாலும்… தெரிந்தோ தெரியாமலோ… நுகர்ந்தால் உயிர் இயக்கிவிடும்.
பாத்திரத்தை அடுப்பில் வைக்கின்றோம்… சமையல் செய்கின்றோம்.
1.நான் தானே சமையல் செய்கிறேன்… நான் போடாமல் அதிலே
வேறு ஒரு பொருள் விழுந்தால் என்ன ஆகும்…?
2.அதற்கு
நான் என்ன செய்ய முடியும்…? நான் போடவில்லை
என்றால் என்ன செய்ய முடியும்…!
ஏனென்றால்
1.காற்றிலிருந்து ஒரு விஷப் பூச்சி பறந்து வந்து பாத்திரத்திற்குள் விழுகிறது.
2.பூச்சியை
நான் போடவில்லை…! நான் போட்டால்
தானே அது வரும் என்று சொன்னால் என்ன ஆகும்…?
இதைப் போன்று தான் நம் உயிரின்
வேலை. அது நெருப்புக்குச் சமம்…!
பாத்திரத்தை வைத்து அதில் எந்தச் சரக்கைப் போடுகின்றோமோ அதை அந்த நெருப்பு சமைக்கும். உயிருடைய வேலை அது தான்.
ஆனால் இதையெல்லாம் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி யாரிடம் இருக்கின்றது…? நம் ஆறாவது
அறிவிடம் இருக்கின்றது.
1.ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால்
2.மீண்டும் தேய்பிறைக்குச் சென்று விடுகின்றோம்.
இதற்கு
முன் எத்தனையோ சரீரங்களில் நாம் வேதனைப்பட்டு இருக்கின்றோம்… எத்தனையோ இம்சைப் பட்டிருக்கின்றோம்.
இப்பொழுது நாம் பார்க்கின்றோம் அல்லவா…! ஒரு விட்டில் பூச்சி பறக்கிறது என்றால் காகம் அதைக் கொத்திக்
குதறுகின்றது… விழுங்குகின்றது.
தன்னுடைய குஞ்சுகளுக்கு உனவாகக் கொண்டு போய்க் கொடுக்கின்றது அந்த வீட்டில்
பூச்சியின் உயிர்… அடுத்து காகமாகப் பிறக்கின்றது.
பத்து எறும்புகள் சேர்த்து ஒரு வீட்டில் பூச்சியைக்
கடித்துக் கொண்டு செல்கின்றது. அந்த உணர்வை நுகரப்படும்
பொழுது… எறும்பின் நினைவே வீட்டில் பூச்சிக்கு வந்து அடுத்து
அது எறும்பாகப் பிறக்கின்றது.
இப்பொழுது நாம் பல கோடிச் சரீரங்கள் தாண்டி மனிதனாக வந்திருக்கின்றோம். ஒரு பாம்பு நம்மைத் தாக்க வருகிறது. நம்மைக் காப்பாற்ற நாம் அதை அடிக்கின்றோம். அந்தப்
பாம்பின் உயிர் அடித்தவரின் உடலுக்குள் சென்று விடுகின்றது.
மனித உணர்வைக் கருவாக்கி அந்தப் பாம்பு அடுத்து மனிதனாகப் பிறக்கும் தகுதிக்கு
வருகின்றது.
ஆனால் பாம்பு மனிதனைக் கடித்தால் நினைவுகள் இழக்கப்படுகின்றது “ஐயோ… பாம்பு
கடித்து விட்டது… பாம்பு கடித்து விட்டது…” என்றே நினைவு வருகின்றது. இந்த உணர்வின் தன்மை ஆன பின்
மனிதனின் உயிர் அந்தப் பாம்பின் ஈர்ப்புக்குள் சென்று பாம்பாகப் பிறக்கும்.
1.பரிணாம வளர்ச்சியில் முதலில் மனிதனாக வந்தோம்
2.மீண்டும் விஷத்தன்மையான பின் நினைவாற்றலை இழந்து விஷத்துக்குள் தான்
சென்று அடங்குகின்றோம்.
இது ஒரு விதியாக மாறுகின்றது. விதியைப்
பற்றி ஏன் சொல்கிறோம் என்றால்……!
என் வாழ்க்கையில் சிறுபிள்ளையிலிருந்து நடந்த சம்பவங்களை எல்லாம் குருநாதர் என்னிடம் சொல்லிக்
கொண்டு வருகின்றார். எறும்பை நசுக்கினாய்… ஒடக்கானைப் பிடித்து அதன் கண்ணிலே பொடியைப் போட்டாய்…! அது தலை ஆட்டுவதைக் கண்டு ரசித்தாய். அதற்குப் பின் நீ எத்தனை நாள் தலையாட்டினாய்…? என்று கேட்கிறார்.
நான் கல்யாணம் முடித்த புதிதிலே வீட்டிலிருந்து நடந்து டவுனுக்குப் போய்க் கொண்டிருக்கின்றேன். தன்னை அறியாது கிறு கிறு என்று தலை சுற்றலானது நடக்க முடியவில்லை… கீழே விழுந்து விட்டேன்…!
அதை ஞாபகப்படுத்திச் சொல்கின்றார் நீ இந்த இடத்தில் நினைவிழந்து விழுந்தாய்… உனக்குத் தெரியுமல்லவா…! என்றார்.
ஓரு சமயம் நானும் என் மனைவியும் ஒரு சிறிய பாலம் அருகே ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே
சென்று கொண்டிருந்தோம்.
வண்டி வந்து கொண்டிருந்தது. சிறிது கவனம்
இழந்திருந்தால் இரண்டு பேருமே அடிபட்டிருப்போம். ஆனால்
தப்பிவிட்டோம்.
குருநாதர் அதைச் சொல்லி…
1.இது எல்லாம் நீ சிறு வயதில் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து உனக்குள் இருக்கப்படும்
போது விதியாக அது அமைகிறது.
2.“டேய்…! அன்று நான் தான்டா அப்போது உன்னைக் காப்பாற்றினேன்” என்று குரு சொல்கின்றார்…!
3.முன் ஒரு சமயம் வேறு ஒரு பிறவியிலிருக்கப்படும் பொழுது நீ எனக்கு ஒரு உதவி
செய்தாய்.
4.அருள் சக்திகளை நான் பெற்றிருக்கின்றேன்… இப்பொழுது
(இந்தப் பிறவியில்) நான் உன்னைக்
காப்பாற்றினேன்.
5.மறைந்த உணர்வுகளை வரிசைப்படுத்தி குருநாதர் எடுத்துக் காட்டுகின்றார்.
இப்படி என் வாழ்க்கையில் என்னென்னவெல்லாம் நடந்தது என்று எல்லாவற்றையுமே குருநாதர்
சுட்டிக் காட்டுகின்றார்.
நீ உன் இளமையில் செய்த தவறுகள் நீ அறியாது செய்த நிலைகள் நீ எண்ணியதை எல்லாம்
உன் உயிர் ஜீவ அணுவாக மாற்றி
அதன் வழிப்படி ஒவ்வொரு தவறாகச் செய்யச் சொல்லி அது பெருகிக் கொண்டே வந்தது.
உன்னைத் தவறான நிலைக்கு அந்த
உணர்ச்சிகள் எப்படிக் கொண்டு செல்லும்…? என்று சொல்கிறார்.
தப்பித் தவறி நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பூச்சியைக் கொல்லும்படி விட்டு
விடாதீர்கள். ஏனென்றால்
நாம் எதைச் செய்கின்றோமோ உயிர் நுகர்ந்ததை இயக்கிவிடும்.
மனித வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்…? என்பதை குருநாதர் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார். அதைத்தான் இப்பொழுது உங்களையும் செய்யச் சொல்கின்றோம்.
1.எது எப்படி இருந்தாலும் அவ்வப்போது இது (வினை – விதி) கழியும்.
2.நான் எல்லோருக்கும் நன்மை தானே செய்தேன். நான் ஏன்
கீழே விழுவானேன்…? என் எலும்பு ஏன் முறிந்தது…?
எல்லோருக்கும் நன்மை செய்தேன் இவ்வளவு பெரிய சக்தி பெற்றிருக்கின்றேன். குருநாதரைப் பார்த்து “என்னை இப்படி எல்லாம் சோதிக்கின்றாயே…! என்று
சொன்னால் என்ன ஆகும்…?”
1.நான் செய்த பாவத்திற்கு நான் தானே அதை அனுபவித்தாக வேண்டும்.
2.ஆனால் அனுபவித்தாலும் மீண்டும் அந்த உயர்ந்த நிலையை பெற வேண்டும் என்று
3.மேலே பட்ட தூசியைத் தட்டி விடுவது போன்று துடைத்துக் கொள்ள வேண்டும்.
4.உடல் பற்று இல்லாதபடி அருள் பற்றுடன் நாம் சென்றால் இந்த உடல் பற்று நம்மை
இயக்காது.
என் உடலிலே எத்தனையோ முறை எரிச்சல் வந்திருக்கின்றது. ஒரு சந்தர்ப்பம் நான் சுற்றுப்பயணம்
செய்து வரும் பொழுது குமாரபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி இது.
தீயில் எரிந்த ஒரு ஆன்மா ஒரு அம்மாவின் உடலுக்குள் சென்று விட்டது. அந்த அம்மாவிற்கு 45 வயது. உடல் எல்லாம் “எரியுதே
எரியுதே” என்று குதிக்கும். மேலே
சேலையைப் போட்டாலே குதிக்கும்… “ஐய்யய்யோ
எரிகின்றதே… என்னைக் கொல்கின்றீர்களே…!” என்று சொல்லிக் கொண்டு ஓடும். அதனால் பொறுக்க
முடியாது.
எம்மிடம் அழைத்து வர வேண்டும் என்று துணியைப் போட முயற்சித்தார்கள். ஆனால் துணியை போட முடிந்தால் தானே…! மேலே பட்டாலே “என்னைக் கொல்கிறார்கள்” என்று ஓடுகின்றது.
எங்களால் அந்தப் பெண்ணை அழைத்து வர முடியவில்லை என்று என்னிடம் சொன்னார்கள். நாலாபுறமும் சுற்றித் துணியைக் கட்டி
மறைத்து அழைத்துக் கொண்டு வாருங்கள்… மேலே துணியைப் போட
வேண்டாம் என்றேன்.
அதன்படி செய்தார்கள். இங்கே கூட்டுத்
தியானம் எடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
1.தியானத்தில் எடுக்கக்கூடிய அலைகள் அந்தப் பெண்ணின் உடலில் எப்படிப்
பாய்கின்றது…? என்று
2.சிறு குழந்தைகளை வைத்து நேரடியாகப் பார்க்கும்படி சொன்னேன்.
அந்த உடலில் இருக்கும் ஆவி வெளியே செல்கின்றது. அது போய்விட்டது என்று தெரிந்த உடனே இந்த அம்மா
எழுந்து உட்காரும். துணியைக் கொடுப்பார்கள்.
ஆவி மறுபடியும் வந்து விட்டது என்று சொல்லி “எரியுதே” என்று அந்த அம்மா
மீண்டும் சொல்லும். இப்படிப் பல
நிலைகள் ஆனபின் ஒரு வழியாக அது விலகியது. இந்த அம்மாவுக்குச்
சரியானது.
ஆனால் “அந்த அம்மா
உடலில் பட்ட எரிச்சல்” அது எப்படி இருக்கிறது…? என்பதை நீ பார் என்று குருநாதர் சொன்னார். நான் எடுத்தவுடனே
கப… கப… என்று என் உடல் எல்லாம்
எரிகின்றது.
அந்த உடலிலே இருந்த அந்த ஆவியின் தன்மை அடங்கினாலும் அதனுடைய எரிச்சலான உணர்வுகளை
நான் கவரப்படும் பொழுது நுகர்ந்தறிந்த உணர்வுகள் எனக்குள் பதிவாகின்றது.
அது உடலில் இருந்த ஆவி…
1.அது எரிந்த உணர்வலைகள் அதிலிருந்து வந்ததை நான் சுவாசிக்கப்படும் பொழுது
எனக்கு அந்த நேரத்தில் எரிகின்றது
2.இப்பொழுது எரிவதற்குக் காரணம் உன் உடலுக்குள் ஏற்கனவே விளைந்தது… “அது எரிந்தது…” இப்படி இயங்குகின்றது
(குரு சொல்கிறார்)
உன் சிறு
வயதில் நீ குருவியைச் சுட்டு எப்படியடா
தின்றாய்…? கயிறை வைத்துக் கட்டி தலை கீழாக உயிருடன்
குருவியை வாட்டினாய் அல்லவா.
1.ஆனால் இப்பொழுது நீ உயிருடன் இருக்கும் போது (அந்த அம்மாவிற்கு) நன்மை செய்யப் போனாய்.
2.தீயிலே வெந்த ஆவி அந்த உடலில் இருக்கின்றது. அதை நீ
அடக்க எண்ணும் போது அந்த வேதனையைச் சூரியனுடைய காந்த சக்தி எடுக்கின்றது.
3.அப்பொழுது அந்த உணர்வு என்ன செய்கின்றது…? நீ எண்ணி
எடுத்தாய் உனக்குள் வந்துவிட்டது.
4.காரணம் அந்தக் குருவி எப்படி எரிந்ததோ அந்த அணுக்கள் உன் உடலில்
இருப்பதற்குச் சாப்பாடு தேவை.
5.இதை எடுக்கின்றது அந்த எரிச்சல் உனக்குத் தெரிகின்றது…!
நடந்த நிகழ்ச்சி…! அனுபவித்துத்
தான் இதைச் சொல்கின்றேன்.
நான் செய்த தவறு… அது ஒரு
விதி ஆகிறது. அந்த நேரத்திலே அங்கே எரிச்சல் ஆகிறது.
1.ஆனால் அவரைக் காப்பாற்றுகின்றேன்.
2.எனக்குள் கொஞ்சம் அந்த ஊழ்வினை மறைகின்றது.
இப்படி நமக்குள் எத்தனையோ விதிகள் உண்டு. இதையெல்லாம் மாற்ற வேண்டும்.
நான் தினமும் தியானம் செய்கின்றேன். எனக்கு ஏன் கஷ்டம் வருகிறது…? எனக்கு ஏன் நோய் வருகிறது…? என்று சொல்லிக் கொண்டிருந்தால் நாம் இங்கேதான் இருப்போம். அங்கே விண்ணுலகம் செல்ல முடியாது,
ஆகையினால் எந்தக் (எத்தகைய)
கஷ்டம் வந்தாலும்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்
3.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி
பெற வேண்டும் என்று
4.இதை எண்ணி வளர்த்தோம் என்றால் நம் உணர்வுகள் அங்கே செல்கின்றது… அடுத்து நாம் சப்தரிஷி மண்டலம் செல்கின்றோம்.
ஆனால் என்னை இப்படி எல்லாம் பேசினார்கள் பாவிகள் உருப்படுவார்களா…? அவர்களால் தான் இப்படி ஆனேன்…! என்று சொன்னால் இந்த
உடலுக்குப் பின் யாரை எண்ணிச் சொன்னோமோ அங்கே சென்று
மீண்டும் நோயால் வாடும். மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டும்.
இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நாம் தப்ப வேண்டும்.
1.அதற்குத்தான் குருநாதர் எனக்குக் காட்டியதை
2.உங்களுக்கு ஞாபகப்படுத்தித் தெளிவாக்கிக் கொண்டு வருகிறேன்.