ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 20, 2017

இனி வரும் காலத்தில் "சித்திரக்குள்ளர்கள்" தோன்றுவார்கள்...!

இந்த விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் உண்டான வித்தியாசத்தைப் பார்க்கலாம்.

விஞ்ஞானத்தில் விஞ்ஞானிகள் அவர்கள் கண்டுணர்ந்த நிலைகளால் இன்று காற்று மண்டலமே விஷத் தன்மை பரவிட்டது.

உதாரணமாக நீர் மூழ்கிக் கப்பலை (SUBMARINE) உபயோகித்துப் பல காலம் கடலுக்கடியில் அமிழ்ந்து “ஆராய்ச்சி செய்யலாம் என்று எண்ணிச் செயல்பட்டனர்.

இந்த நாட்டைச் சேர்ந்த நீர் மூழ்கிக் கப்பல் காணாமல் போய்விட்டது அதில் இருந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்றெல்லாம் நீங்கள் பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள்,

இப்படி அணுக் கதிரியக்கத்தால் அவன் ஓட்டிய அந்தக் கப்பலினால் தீமைகள் விளைகின்றது என்று தெரிந்து கொண்டனர்.

அதிலே பட்ட கசிவான அணுவின் தன்மைகள் (RADIOACTIVE) மற்ற பொருள்களுடன் இணைந்தபின் இது எங்கே சென்றாலும் அந்த (தன்) நாட்டுக்கே ஆபத்து என்ற நிலைகள் உணர்ந்து கொண்டனர்.

அதை எப்படி மறைப்பது! என்று எண்ணுகின்றார்கள்.

மறைக்க வேண்டும் என்று எண்ணினாலும் அதை அடக்குவதற்காக கடலின் கண நீரிலிருந்து ஹைட்ரஜனைத் தயார் செய்தார்கள்.

செய்தாலும் கடலுக்குள்ளே இவன் இருக்கப்படும் பொழுது சிதைந்த உடல்கள் செயலிழந்த நீர் மூழ்கிக் கப்பலின் விஷக் கதிரியக்கங்களும் அதன் கழிவுகளும் மீண்டும் கடலுக்குள் பரவிப் படர்ந்து கொண்டுள்ளது.

அப்படிக் கசியும் அணுக் கதிரியக்கங்கள் கடல் வாழ் உயிரினங்களின் உடல்களிலும் இனப் பெருக்கங்களாகிக் கலந்து அதுவும் பெருகிவிட்டது.

இன்று மனிதன் உணவாக உட்கொள்ளும் கடல் வாழ் உயிரினங்களின் உடல்களில் அணுக்கதிரியக்கங்கள் சேர்ந்து விட்டது.

1.எந்த விஞ்ஞான அறிவு கொண்டு அணுக்கதிரியக்கங்களைக் கண்டுபிடித்தானோ
2.கசிந்ததை எப்படி மறைக்க வேண்டும் என்று முயற்சித்தானோ
3.மீனை இன்று இரசித்து உணவாக உட்கொள்ளும்போது அந்தக் கதிரியக்கச் சக்தி “மீண்டும் மனிதனுக்கே வருகின்றது.

இந்த உணர்வின் தன்மை வளரப்படும் பொழுது இதனின் கடைசி எல்லை எது? ஆக இப்பொழுது இருக்கும் இந்த
1.மனித உடலையே இழக்கச் செய்து
2.மனிதனின் நினைவை இழக்கச் செய்து
3,மனிதக் கருக்களை உருமாற்றி
4.மனிதனின் உண்மையான உருவத்தை மாற்றி – “சிதைவுண்டு
5.அதனின் நிலைகள் இனி வரும் எதிர்காலம் “சித்திரக் குள்ளர்களாகப் பிறப்பார்கள்.

இந்த அணுக்கதிரியக்கங்கள் பதிந்த நிலைகள் சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுக வளர்ந்து இப்பொழுதுள்ள இந்த உருவம் மாறி “சித்திரக்குள்ளர்களாக மாறும் நிலை வரும்

ஒரு செடிக்கும் ஒரு மரத்திற்கும் வித்தியாசம் உண்டு. ஆனால், கதிரியக்கங்களால் பூமி கொதிகலனாகி துருவப் பகுதிகள் உருகி நீர் நிலை பெருகி இந்த நிலங்கள் குறையப்படும் பொழுது ஒரு செடியைப் பார்த்தாலே அது மரத்தைப் போன்று ஆகி அதனின் வளர்ச்சியிலே கூழையாகி செடியே மரமாகிவிடும்.

விஞ்ஞான அறிவால் மனிதன் குறுகிய நிலைகள் கொண்டு மீண்டும் இத்தகைய நிலை பெறும் தகுதியைத்தான் பெறுகின்றோம்.

இன்றைய உலகம் சென்று கொண்டிருக்கும் இத்தகைய நிலையில்
1.விஞ்ஞானத்தை எல்லோருக்கும் எளிதாகப் புகட்ட முடிகின்றது.
2ஆனால், மெய்ஞானத்தைப் புகட்டும் நிலைகள் வந்தால் எதிர் நிலையாகின்றது.
3.நாம் ஏற்க மறுக்கின்றோம்.
4.அந்த அளவிற்கு விஞ்ஞானத்தின் வீரிய உணர்வுகள் நம் உடலுக்குள் அணு செல்களாக வளர்ச்சி அடைந்துவிட்டது.

இதையெல்லாம் யாம் சொல்கிறோம் என்றால் “அடேயப்பா.., இவருக்கென்ன (ஞானகுரு) விஞ்ஞானத்தைப் பற்றி என்ன தெரியும்? என்று சிலர் நினைப்பார்கள்.

அந்த விஞ்ஞான அறிவைப் பற்றி நமது குருநாதர் “அவர்கள் எப்படி இயக்குகின்றனர்?” என்பதைக் காட்டினார்.

நாளை நடக்கும் எதிர்காலத்தை நமது குருநாதர் விஞ்ஞான அறிவால் வந்த நிலைகளை இது எவ்வாறு மாற்றமடைகின்றது என்ற நிலைகளை உணர்த்தியுள்ளார்.

ஆகவே என்ன செய்யும் என்று நமக்குத் தெரியும். இதை எப்படி அகற்ற வேண்டும் என்று நிலைகளுக்குத்தான் தொடர்ந்து அருள் ஞானிகள் பெற்ற ஆற்றல்களை யாம் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

எல்லோரும் இதைத் தெரிந்து கொள்வது நல்லது.