ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 31, 2017

இன்று எந்த நிமிடத்திலும்… எதுவும் நடக்கும்…!

முன்பு வாழ்ந்த மனிதரின் நிலைகளில் அவர்கள் சூது வாது அற்ற நிலைகள் கொண்டு தனக்குள் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றவர் பல கோடி பேர்கள்.

2000 ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்த நிகழ்ச்சிகளுக்கும் இன்று விஞ்ஞான நிலைகளில் போன வருடம் நடந்ததற்கும் இந்த வருடம் புதிய நிலைகளாக வருகிறது.

இப்பொழுது ஒரு மாதத்திற்குள் கூட துரித நிலைகளில் மாறிக் கொண்டே வருகிறது.

ஆனால், இன்று மனிதனே கூண்டுடன் அழியக்கூடிய தன்மைகள். நாட்டுக்கு நாடு அரசு தன்னைத் தற்காத்துக் கொள்ள மாற்று அரசை வீழ்த்திக் கொண்டுள்ளது. ஏனென்றால்
1.அவன் வளர்ந்துவிட்டால் தன்னை அழித்து விடுவான் என்ற
2.இந்த அழிக்கும் உணர்வுகள் அரசு போர் முறைகளில் பாயப்பட்டு
3.போர் முறைகளில் உலகத்தையே அழிக்கக்கூடிய நிலைகள் துரித நிலைகளில் உருவாகி,
4.மனிதன் கூடிய சீக்கிரம் மனித இனமே இல்லாத நிலைகளுக்கு ஆகப்போகின்றோம்.

மனித இனம் இருக்கலாம். மிருக நிலைகள் கொண்டு ஆரம்ப நிலைகளில் சிந்தனையற்ற நிலைகளில் இருந்தானே அதைப்போன்று இந்த விஞ்ஞான உலகத்திலே இப்பொழுது நாம்
1.மனிதன் என்ற தர்மத்தையே இழந்து
2.இன்று சிந்தனையற்ற நிலைகளில் இருக்கின்றோம்.

இதைக் காட்டிலும் விஷ அணுக்களின் தன்மையை நம்மை அறியாமலேயே நமக்குள் நுகரச் செய்துவிட்டார்கள். அதனால் இன்று வாழும் மனிதர்கள்
1.தன் பிள்ளைகள் யார்?
2.தன் வீடு எது?
என்கிற சிந்தனையே அற்ற நிலைகள் வர ஆரம்பித்துவிட்டது.

இதைப் போன்றுதான் போர் முறைகளில் நவீன ஆயுதங்கள் எடுத்து மற்ற அரசை மடக்கிக் கொண்டு இப்படித்தான் நாம் பயந்த சுவாசத்தின் நிலைகளில் வளர்ந்து வளர்ந்து இன்று விஞ்ஞான அறிவின் தன்மையால் ஒருவருக்கொருவர் அழிக்கும் நிலைகளில் இன்று முழுமையாக அழித்துக் கொள்ளும் நிலைகளுக்கே எல்லை கடந்து வந்துவிட்டோம்.

எந்த நிமிடத்திலும் எதுவும் நடக்கும் நிலைகளில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் எனக்கு உபதேசித்து உணர்த்திய இந்த உண்மை நிலைகளை பத்து முப்பது வருடமாகத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு தான் வருகின்றோம்.

அழிந்தால் எல்லோரும் தானே அழிவோம்…! அதற்கப்புறம் என்ன தெரியப் போகிறது என்று எண்ணத்தில் இருப்பவர்களும் இருக்கலாம்.

ஆனால் இந்தச் சுற்று போனால் இனி அடுத்து இன்னொரு பிரபஞ்சத்திற்குச் சென்று அங்கே உயிரினங்களை உருவாகும் பூமிக்குள் சென்று பல கோடிச் சரீரங்களை மீண்டும் எடுத்து மனிதனாக வரும் நிலைகள் எத்தனையோ “பல ஆயிரம் கோடி ஆண்டுகளாகும்”.

அது வரையில் எடுத்துக் கொண்ட விஷமான உணர்வு கொண்டு வேதனையை அனுபவித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்.

ஆகவே, இந்தப் பிரபஞ்சம் முதுமையடையும் நிலைகள் ஆகிவிட்டது. இந்த நிலையிலிருந்து அதைச் சிறிதேனும் சிறிது பேரையாவது மீட்டுக் கொள்ளலாம், மீட்டிட வேண்டும் என்ற நோக்குடன் “மெய்ஞானியின் அருள் ஆற்றலை உனக்குள் வளர்த்துவிடு.” என்று நமது குருநாதர் எம்மிடம் சொன்னார்.

வளர்த்த ஆற்றலை ஒவ்வொரு உள்ளத்திலும் வயலைப் பண்படுத்துவது போல மனதிலே பண்படுத்து.

இதைப் போல கண்டறிந்த உணர்வின் சக்தியை அவர்களைக் கூர்ந்து கவனித்திடச் செய். அந்த மனத்தினுடைய நிலைகளை ஒரு நிலைப்படச் செய். அந்த நிலைகளை ஏங்கவை. அந்த உணர்வுக்குள் இந்த ஞானிகளின் அருள் வித்தைப் பதியச் செய்.
1.அப்படிப் பதிந்த உள்ளம் கொண்டு அவர்களும் தமக்குள் துன்பத்தை நீக்கிட வேண்டும் என்று எண்ணினால்,
2.அவர்கள் விண்ணை நோக்கி எண்ணும் பொழுது
3.அந்த உணர்வின் ஆற்றலால் விண்ணின் ஆற்றல் அவர்களுக்குள் பெருகி
4.அவர்களை அறியாது வந்த துன்பங்களை நீக்கி
5.அந்த ஞானிகள் அருள் வட்டத்தில் செல்ல
6.இது உதவியாக இருக்கும் என்று குருநாதர் சொன்னார்.

அதைத்தான் யாம் செய்து கொண்டிருக்கின்றோம்.