ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 15, 2020

அன்றாட வாழ்க்கையில் நாம் எந்தக் கணக்கைப் பார்க்க வேண்டும்...!

உதாரணமாக வேதனைப்படுவோரை அதிகமாக நாம் உற்று நோக்கிப் பார்ப்போம் என்றால் வேதனை அணுக்கள் உடலிலே உருவாக்கி விடுகின்றது,
 
இதனின் அளவுகோல் அதிகமாகி விஷத் தன்மைகள் பெருக்கமாகும் பொழுது நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் நலிவடையும் தன்மை ஏற்படுகிறது.
 
உதாரணமாக... சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் என்ற புலனறிவுகள் நாம் சொல்லும் (வெளிப்படுத்தும்) உணர்வுகளை அது நுகர்கின்றது.
 
பின் அந்த உணர்வின் சத்து தன்னுடன் இணைந்து அதன் மணம் விஷத்தின் தன்மையால் வெளிப்படுத்துகின்றது. ஆகவே புலனறிவு ஐந்து.
 
ஒரு மனிதன் வேதனைப்பட்டால்...
1.வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலையில் அவன் வேதனையும் கூடும் பொழுது
2.நமக்குள் இருக்கும் விஷம் அந்த வேதனை உணர்வுடன் இணைந்து விடுகின்றது.
 
ஏனென்றால் நம் உடலில் நல்ல குணங்களை அதே புலனறிவு தான் (வெப்பம் காந்தம் விஷம்) இயக்குகின்றது.
 
ஆக அதன் வழி நல்ல குணங்களை நல்ல உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது நல்ல அணுக்களாக மாறுகின்றது. ஆனால் வேதனை வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்து விட்டால் விஷத்தின் அளவுகோல் அதிகமாகின்றது... கேன்சராக மாறுகின்றது.
 
அந்த விஷத்தின் தன்மை அதிகமானால் நம் நரம்பு மண்டலம் வழி கூடி உடல் முழுவதும் விழுதுகளைப் பாய்ச்சி நோயாக (நமக்குத் தெரியாமல்) உருவாகின்றது.
 
நீரே இல்லாத இடத்திலும்... ஒரு அரச மரம் காற்றில் உள்ள நீர் சத்தைக் கவர்ந்து தன் விழுதுகளைப் பரப்பி நீர் உள்ள பக்கம் விழுதுகளை அனுப்பித் தனக்குள் அந்தச் சக்திகளை எடுத்துக் கவர்ந்து ஓங்கி வளர்கின்றது.
 
இதைப் போன்று தான் விஷத்தின் தன்மை ஊடுருவி உடலுக்குள் வளர்கிறது. எல்லா அணுக்களிலும் இயக்கச் சக்தியாக இந்த விஷத் தன்மை உண்டு. அதை எடுத்து அது வளரத் தொடங்கும்.
 
உதாரணமாக...
1.நமக்கு வேண்டாதவர்களாக இருந்தால் “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்...” என்று
2.அந்த வேதனைப்படுவோரைப் பார்த்து நாம் ரசிக்கின்றோம்.
3.வேதனைப்படும்படியாக ஒரு சொல்லைச் சொல்வோம்... அதைக் கண்டு ரசிப்போம்.
 
இத்தகைய நிலைகள் நமக்குள் நுகர அந்த வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்து விட்டால் கேன்சர் என்ற நிலை வரும் போது அந்த அணுத் தன்மை இந்த உடல் முழுவதும் நரம்புகள் வழி பாய்ச்சி மற்ற அணுக்களுக்குச் செல்லும் விஷத்தை அது கவர்ந்து விடுகிறது.
 
அவ்வாறு அந்த விஷத்தின் தன்மை கவர்ந்தால் நல்ல அணுக்களுக்குச் செல்லும் விஷத் தன்மையை இது கவர்ந்து கொண்டால் நல்ல அணுக்கள் இயங்க விஷத்தின் தன்மை இல்லை என்றால் இயக்கம் இல்லாது பலவீனமான நிலைகள் அடைந்து விடுகின்றது.
 
தேவாங்கு போன்ற சில உயிரினங்களுக்கு விஷத்தின் துடிப்பு குறைவாக இருப்பதனால் அந்த உயிரினத்தின் வேகத் துடிப்பு குறைவாக இருக்கும்.
 
இதே மாதிரி சில உயிரினங்களுக்கு விஷத்தின் தன்மை குறைவாக இருக்கும் நிலைகள் அது வேகத்தின் நிலைகள் குறைவாக இருக்கும் சிந்திக்கும் தன்மைகளும் குறைவாகவே இருக்கும்.
 
இதைப் போன்று தான் வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் தூண்டும் போது நாம் சுவாசிக்கும் உணர்வே விஷம் கலந்ததாக மாறி நமக்குள் கேன்சர் நோய் பரவுகின்றது.
 
அந்தக் கேன்சரை நீக்க வேண்டும் என்றால் அதைக் கொல்ல கடுமையான மருந்துகளை அதாவது அதைக் காட்டிலும் விஷமான மருந்துகளைத் தான் அந்த மருந்துக்குள் விஷத்தைக் கூட்டி அதனின் வேகத்தைக் கூட்டுதல் வேண்டும்.
 
1.ஆனால் அந்த விஷத்தைக் கூட்டினால்
2.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களும் மடிந்துவிடும்
 
அதே போல் வைத்தியரீதியிலும் விஞ்ஞானரீதியிலும் அது செயலற்றதாக மாற்றிட உடலில் எந்தப் பாகத்தில் அந்த விஷத்தின் தன்மை கூடுகின்றதோ எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் (கரெண்ட் ஷாக்) என்ற முறை கொண்டு அந்தக் குறித்த பாகத்தில் வெப்பத்தின் தணல் கூடி அந்த அணுக்களை மடியும்படி செய்கின்றனர்.
1.அவ்வாறு மடியும்படி செய்தாலும் இந்தத் தசைகளில் உள்ள
2.மற்ற நல்ல செல்கள் அது வளரும் தன்மையைக் குறைத்து விடுகின்றது.
 
பின் அதற்குள் இந்த விஷத்தின் தன்மை பரவும் தன்மை தான் இருக்கின்றதே தவிர மாற்றும் தன்மை இல்லை.
 
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு வேதனைகளை நமக்குள் வளர்க்காது பிறர் படும் வேதனைகளை ரசிக்காது அருள் ஒளி கொண்டு அகற்றி மற்றவர்களும் அந்த அருள் ஒளி பெற்று வேதனையிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணினால் இது போன்ற கொடுமையான விளைவுகளிலிருந்து தப்பலாம்...!
 
ஆகவே உங்களுக்கு மீண்டும் மீண்டும் யாம் (ஞானகுரு) ஞாபகப்படுத்துவது இது தான். சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை.
1.நாம் எந்தெந்தக் குணங்களைச் சுவாசிக்கின்றோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் தான்
2.நம் உடலில் நோய்கள் வருவதோ துன்பங்கள் வருவதோ நம்மை அறியாது கஷ்டங்கள் வருவதோ எல்லாமே அதனால் தான்...!