ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 19, 2020

புத்திர பாக்கியம் பெற தியானிக்க வேண்டிய முறை

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா. துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் அனைவரது உடல்களிலும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
 
கூட்டுத் தியானங்களில் இப்படி எண்ணி எடுக்கும் பொழுது இந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு அந்த உயர்ந்த உணர்வைச் சுவாசிக்கும் தகுதி பெறுகின்றோம். சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் இரத்தத்தில் கலக்கின்றது.
 
அதனின் வலுக் கொண்டு கை கால் குடைச்சலோ அசதியோ தலை வலியோ உடலில் நீர்ப் பிடிப்போ சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ இருதய வலியோ இது போன்ற நோய்களை அகற்ற முடியும்.
 
துருவ நட்சத்திரத்தின் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது இந்தச் சுவாசத்தை எடுக்க எடுக்க உங்கள் இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்கும். உங்கள் உடலில் உள்ள வலிகள் குறையும்... அதை நீங்கள் உணரலாம்.
 
இடுப்பு வலியுடனோ கால் வலியுடனோ தலை வலியுடனோ வயிற்று வலியுடனோ வேறு எந்த வலியுடன் இருந்தாலும் அந்த வலி நீங்க வேண்டும் என்ற நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
 
உங்கள் உடலில் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற்று “எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா...!” என்று ஏங்கித் தியானியுங்கள்.
 
1.உங்கள் உடலில் மின்சாரம் பாய்வது போல் பாயும்
2.நீங்கள் சுவாசிக்கும் அந்த அருள் உணர்வுகள் இரத்த நாளங்களில் கலந்து 
3.உங்கள் உடலில் உள்ள விஷத் தன்மைள் கலைந்து செல்லும்
4.உங்கள் உடலில் உள்ள நோய்கள் அகலும்.
 
அகஸ்தியன் அவன் கண்டுணர்ந்த தீமைகள் அகற்றிய அருள் உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடல் முழுவதும் இப்பொழுது பரவும்.
1.சர்வ பிணிகளும் நீங்கும்... இருதயம் சீராக இயங்கும்.
2.எத்தகைய நோயாக இருப்பினும் அது எல்லாம் குறையும்
3.உடலில் உள்ள சிக்கல்கள் நீங்கி உடல் நலம் பெறும் சக்தியாக மாறும்
4.குடலில் நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.
 
புத்திர பாக்கியம் வேண்டுவோர்
1.தன் உடலில் புத்திர பாக்கியம் பெறும் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி
2.அதே போல் என் கணவருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று பெண்கள் எண்ண வேண்டும்.
3.ஆண்களும் தன் மனைவிக்கு புத்திர பாக்கியம் பெறும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணி
4.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

புத்திரபாக்கியம் பெறும் அருள் உணர்ச்சிகள் உங்கள் உடலிலே உருவாவதைக் காணலாம்.

உங்கள் இரத்தநாளங்களில் புது விதமான உணர்ச்சிகள் தூண்டி
1.கருப்பைகளில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படும்
2.கரு விந்துகளிலும் இதன் உனர்வுகள் உணர்ச்சிகள் கூடி
3.குழந்தைகள் பெறும் உணர்வின் அணுக்கள் வளர்ச்சி அடையும்.
 
1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி கணவன் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மனைவியும்
2.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி மனைவி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கணவனும் எண்ண வேண்டும்.
3.புத்திர பாக்கியம் பெறும் அணுக்கள் எங்கள் இருவருக்குள்ளும் ஓங்கி வளர வேண்டும் ஈஸ்வரா என்று
4.கணவன் மனைவி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் நெற்றியைப் பார்த்து
5.மேலே சொன்ன உணர்வுகளை எல்லாம் பாய்ச்சுதல் வேண்டும்.
 
சீக்கிரமே கரு உருவாகி ஞானக் குழந்தையாக உருப்பெறச் செய்யும் சக்தி பெறுவீர்கள்.  

இது எல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) வாக்குடன் கொடுக்கக்கூடிய ஞான வித்துகள். ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி... அந்த நல்லது நடக்க வேண்டும் என்று இச்சைப் பட்டால் உங்களுக்குள் அது கிரியையாகி உங்கள் எண்ணத்தாலேயே அந்த நல்லவைகளை நீங்கள் பெற முடியும்.