ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 11, 2020

இரத்தக் காட்டேறிகள் என்று சொல்வதன் உண்மை நிலை என்ன...? - ஈஸ்வரபட்டர்

ஞானத்தின் சக்தி பெற்று சித்து நிலை பெற்றிடவே...
1.நம்முள் உள்ள அமில சக்தியை எல்லாம் நம் நிலைக்குகந்த அமில குணத்தை
2.ஞானத்தின் ஈர்ப்புக்குச் செல்லும் குண அமிலமாக நாம் செயல்படுத்தி விட்டால்
3.எந்த அமிலத்தை நாம் எந்த வழித் தொடருக்கு அதிகப்படுத்தி அதன் ஈர்ப்பில் வளர விடுகின்றோமோ
4.அதன் தன்மையின் ஆணைக்குட்பட்டு மற்ற அமில குணங்களும் அதன் கட்டுப்பாட்டிற்கே அடங்கிச் செயல்படுத்திட வைத்திடலாம்.
 
அதனதன் குணம் என்றுமே மாறாது... ஆனால் அதனை இதனின் கட்டுபாட்டிற்குள் அடக்கி வைத்திட முடியும். (இது முக்கியம்)
 
நல்ல அமிலத்தின் செயலைப் போன்றே தீய அமில குணத்தின் செயல் நிலையும் அதன் செயலிலேயே வழி கொண்டிடும்.
 
நமக்குள் உள்ள இந்தப் பன்னிரெண்டு வகை அமிலத்தையும் அதன் போக்கில் நாம் செல்ல விட்டால் என்ன ஆகும்...?
 
அதனதன் தொடரில் எதன் குணம் அதிகப்படுகின்றதோ
1.அதற்குகந்த ஆவி குண அமிலங்களும்...
2.இதன் ஈர்ப்பில் அந்தக் குணத்திற்குரிய இந்தக் காற்றில் சுற்றிக் கொண்டிருக்கும்
2.உடலை விட்டுப் பிரிந்த மனித ஆத்மா மிருக ஆத்மா என்ற பாகுபாடில்லாமல் எல்லாமே
3.இந்தக் குண அமிலத்துடன் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.
 
இப்படிச் சேரும் அவி அமிலங்களீல் சில சக்தி வாய்ந்த ஆவி அமிலங்கள் உடலில் ஏறிவிட்டால் அதன் செயல் நிலை அந்த உடலில் உள்ள உயிராத்மாவைக் காட்டிலும் இதன் தூண்டுதலின் வெறிக்கு உட்பட்டு மென்மேலும் “அதன் நிலைக்கே தான்...” இழுத்துச் சென்று கொண்டிருக்கும்.
 
பக்தி... ஞானம்... சித்து... என்ற நல் உணர்வு  அமில சக்தியின் கூட்டு நிலையும் இப்படித்தான். அதே போல் சலிப்பு கோபம் வெறி குரோதம் இப்படிச் செயல்படும் நிலையின் அமில குணமும் அதன் ஈர்ப்பில் தான் இழுத்துச் செல்லும்.
 
இப்படி இத் தீய அணுவின் அமில குணத்திற்குக் கட்டுப்பட்ட ஆத்மாக்களை “அந்தத் தீய அமில சக்தி” மென்மேலும் அதனை இழுத்துச் சென்று கொண்டே தான் இருக்கும்.
 
வாழ்ந்த காலத்தில் வஞ்சனை குரோதம் கொலை கொள்ளை இப்படிச் செல்லும் அமில உயிராத்மாக்கள் அதன் வெறி உணர்வினால் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றாலும் இந்த வெறி உணர்வு அடங்காமல் அதே நிலை கொண்ட உடல்களில் ஏறி தன் வெறிக்குகந்த செயலை மென்மேலும் தூண்டி “மனித ஆத்மாவைப் பேயாக்கி விடுகின்றது...!”
 
இந்த வெறி கொண்ட ஆவி உலக ஆவி... மனித ஜீவ உடல் கொண்ட அதே குண நிலையில் உள்ள ஆத்மாவின் உடலில் ஏறி... மென்மேலும் இந்த வெறி உணர்வு அதிகப்பட்டு...
1.உடலில் உள்ள பொழுதே மாமிச உணவுகளை மிக அதிகமாக உண்டு
2.அதன் வெறியிலேயே உடல் பிரிந்து சென்றாலும் அந்த ஆவிகள் தான் தன் வெறிக்குகந்த உணவைப் பெற
3.இரத்தக் காட்டேறிகளாக அந்த உதிரத்தின் சுவாசத்தை எடுக்க ஆவி உலகில் இருந்து கொண்டு வெறியாட்டம் நடத்துகின்றன.
 
இன்று உலகில் எலலாப் பாகங்களிலுமே அதிகமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றால் அது எந்த நிலையில்...?
 
இரத்தக் காட்டேறிகளாக ஆவி உலகில் சூழ்ந்துள்ள இந்த ஆத்மாக்களுக்கு அதற்குகந்த ஆகாரத்தை எடுத்துக் கொள்ளத் தான்... அவைகள் செய்யும் வெறிச் செயலினால் “இன்றைய உலக ஆத்மாக்கள் மாளுகின்றன...”
 
மனிதன் தான் தெய்வமும் ஆகின்றான். இரத்தக் காட்டேறியாகவும் ஆகின்றான். எமனாகவும் செயல்படுகின்றான். தேவனாகவும் செயல்படுகின்றான்.
 
1.எண்ணும் எண்ணத்தைக் கொண்டு நல் அமிலத்தை ஈர்த்து வாழ்பவன் தெய்வமாகின்றான்
2.தீய அமிலத்தை ஈர்த்து வாழ்பவன் பேயாகின்றான்.
 
நமக்கெல்லாம் மீறிய அப்பாற்பட்ட சக்தியான அந்த ஆதிசக்தி அவள் விதைத்த விதையில் வளரும் நிலை கொண்டு... “பலனைக் கண்டு அவளே நகைக்கின்றாள்...!”
 
எல்லா விதையும் ஒன்று போல் விதைத்து அந்த விதையின் பயனைக் கண்டு மென்மேலும் விதைத்துக் கொண்டே உள்ளாள்.
1.விதையின் நற்பயனைத் தன்னுள் எடுத்துக் கொண்டு வேண்டாத பயனை ஒரு கால கட்டத்தில் மாற்றி அமைத்து விடுகின்றாள்.
2.இந்தக் கலியில் பொறுக்கி எடுக்கின்றாள் தான் விதைத்ததன் பயனை எல்லாம்...!
3.தனக்குகந்தது எது...? என்று அவளுக்குத் தெரியும்.
4.மற்றவற்றைத் திரும்பவும் உழுது பயிருக்கு அனுப்புவாள். 

மாற்றி மாற்றிப் பலனை எடுத்துக் கொண்டே தான் இருக்கிறாள்... என்பதனை உணர்ந்து இரத்தக் காட்டேறிகளாக அலையும் ஈர்ப்பில் நாம் போய்ச் சிக்காமல்... “அன்பென்னும் அருள் நெறியில் நம்முள் உள்ள அமில குணங்களை வழி நடத்தி... அந்த ஞானத்தின் சித்தை அடைவோம்...”