ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 26, 2020

ஞானப் பாதையில் மெய் ஞானிகளைப் பற்ற (பிடித்துக் கொள்ள) வேண்டிய முறை

மேலை நாட்டில் இது நடந்த நிகழ்ச்சி. ஒரு சிறுவன் பாலத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்து விட்டான். கீழே விழுகும் பொழுது ஒரு கம்பியைப் பிடித்து அனாதையாக மூன்று நாள் தொங்கிக் கொண்டே இருக்கின்றான்.
 
அதை விட்டு விட்டால் கடலில் தான் விழுக வேண்டும். ஆனால் விழுகாதபடி தொங்கிக் கொண்டே இருக்கின்றான். அவன் தொங்கிக் கொண்டிருக்கக்கூடிய இடத்திற்குப் போக முடியாத நிலை. ஏனென்றால் அது ஒரு மலை உச்சி.
 
அவனைக் காப்பாற்ற நான்கு நாள் ஆனது.
1.அது வரையிலும் அவன் மன உறுதி கொண்டு இறுக்கிப் பிடித்திருக்கின்றான்.
2.இப்படி எல்லாம் இயற்கையின் நியதிகள்... தன் மன வலுவால் தன்னைக் காக்கும் நிலை அவனுக்கு வருகிறது.
 
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய மன வலிமை எதிலே... எப்படி இருக்க வேண்டும்...?
 
அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்ற மன வலிமை எந்த நேரத்திலும் நமக்கு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மன உறுதி இருந்தால்
1.சிந்தித்துச் செயல்படும் தன்மையையாக அது இயக்கச் செய்யும்
2.நம்மைக் காத்துக் கொள்ளும் அருள் உணர்வுகள் வளரும்.
 
அதற்குத்தான் தொடர்ந்து உங்களுக்கு உபதேசித்துக் கொண்டே இருக்கின்றேன் (ஞானகுரு). இந்த அருள் உணர்வுகளைப் பதிவாக்கிய பின் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்தச் சிந்தித்துச் செயல்படும் ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 
1.ஆக.. உங்களைக் காக்க உங்கள் நினைவு தான் வர வேண்டுமே தவிர
2.நான் (ஞானகுரு) காப்பாற்றுவேன்...! என்ற இந்த எண்ணத்தில் இருந்தால்
3.தான் எடுக்கக்கூடிய சக்தியை இழந்து விடுகின்றோம் என்று தான் பொருள்.
 
இன்றைய உலகில் விஞ்ஞான அறிவால் கடுமையான விளைவுகள் வருகின்றது. அதிலிருந்து நாம் தப்ப வேண்டும்.
 
இந்த உபதேசத்தின் வாயிலாக அருளைப் பெருக்கும் நிலையை உங்களுக்குள் உருவாக்குகின்றேன். அதைப் பெருக்கும் அருள் ஞானம் உங்களுக்குள் வளரட்டும்.
 
அந்த ஞானம் உங்களுக்குள் வளர வேண்டும் என்பதற்குத்தான் இந்தத் தூண்டுதலைக் கொடுத்து அதன் மூலம் ஞானிகளின் உணர்வை உங்களைச் சுவாசிக்கச் செய்கிறோம்.
 
ஞானிகளின் உணர்வுகளைச் சுவாசிக்கும் போது உங்கள் இரத்தங்களில் ஒரு புது விதமான ஓட்டங்கள் இருக்கும். அந்த உணர்வின் தன்மை பல நிலைகள் பல கலவைகள் ஆகின்றது.
 
சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்கும் அந்தக் கருத்தன்மை (அணுவாக மாறும் தன்மை) உங்களிலே உருவாகின்றது. அதை வளர்த்துக் கொண்டால் அருள் ஞானத்தைக் கொண்டு வாழ்க்கையைச் சீரபடுத்த “உங்கள் எண்ணம் உங்களுக்கு உதவும்...!”
 
காரணம்... அத்தகைய அணுக்கள் உருவாகி விட்டால் அந்த உணர்வின் தன்மை நுகரும் போது
1.உங்கள் உயிரிலே படுகின்றது. சிந்திக்கும் ஆற்றல் வருகிறது.
2.நல்ல உணர்வை நுகரச் செய்கிறது.. நல்ல அணுக்கள் உடலில் விளைகிறது... அருளைப் பெருக்குகிறது.
3.இந்த உடலுக்குப் பின் ஞானிகளின் அருள் வட்டத்தில் நாம் செல்கிறோம்.
4.எந்த ஞானி இருளை நீக்கி ஒளியாக மாற்றினானோ அவன் ஈர்ப்பு வட்டத்திற்கே நாம் செல்ல முடியும்.
 
ஆகவே... துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தைச் சென்றடைவதே மனிதனின் கடைசி எல்லை...!
 
உயிர் ஒளியானது... எத்தனையோ கோடிச் சரீரங்களிலிருந்து தப்பிடும் உணர்வு பெற்றுத் தான் இந்த மனித உடலை அமைத்தது நம் உயிர்.
 
எல்லாத் தீமைகளையும் வென்று உணர்வின் தன்மை ஒளியாக ஆனவன் துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எப்படியும் நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன்.
 
குருநாதர் எனக்குப் பல அனுபவங்களைக் கொடுத்தார். அதன் வழியிலேயே தான் உங்களுக்குள் பதிவாக்குகிறேன். இதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த அருள் ஞானம் உங்களைக் காக்கும் சக்தியாக வருகின்றது.
 
1.அந்த ஞானத்தின் வழி கொண்டு தான்
2.அருள் ஞானத்தை வைத்து இருளை நீக்கிடும் அந்த மெய் ஞானிகளாக நீங்கள் மாற முடியும்.