ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 9, 2020

அகஸ்தியரில் விளைந்த மூச்சலைகளை நுகரவும் கவரவும் பழகிக் கொள்ளுங்கள்

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி புருவ மத்தியில் எண்ணி ஏங்குங்கள்.
 
அகஸ்திய மாமகரிஷிகளின் நினைவை இப்பொழுது கண்ணுக்கே கொண்டு வாருங்கள். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் மீண்டும் ஏங்கித் தியானியுங்கள்.
 
1.உங்கள் நினைவை அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்குச் செலுத்துங்கள்.
2.அவன் உடலில் விளைந்த நஞ்சினை வென்ற உணர்வுகளையும்
3.அருள் ஞானத்தைப் பெற்ற அருள் உணர்வுகளையும் பெற வேண்டும் ஈஸ்வரா...! என்று ஏங்கித் தியானியுங்கள்.
 
அகஸ்திய மாமகரிஷியின் பேரருளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அகஸ்தியன் வாழ்ந்த காலமான அந்தக் காலத்திற்கு உங்கள் நினைவாற்றலை அழைத்துச் செல்லுங்கள்.
 
அகஸ்தியன் பெற்ற பேரருள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
 
அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் இட்ட மூச்சலைகள்
1.காடு மலைகளிலும் அந்த வனாந்திரங்களிலும் பரவி உள்ளது
2.நாடு நகரங்களிலும் படர்ந்திருக்கின்றது
3.அந்த உணர்வை நுகரும் போது அதைக் காட்சியாகவும் அறிய முடியும்.
 
அகஸ்திய மாமகரிஷிகளின் பேரருள் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உங்கள் உடல் முழுவதும் படரச் செய்யுங்கள்.
 
உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி எங்கித் தியானியுங்கள்.
 
“கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்...” என்பது போல் அகஸ்தியன் நஞ்சினை வென்று பேரருள் பெற்றுப் பேரொளியான அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி அந்த உணர்வை நுகர்ந்து
1.கண்ணின் நினைவு கொண்டே உடல் முழுவதும் பரவச் செய்து
2.உடலில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவான்மாக்களும் அந்த அருள் சக்தியைப் பெறச் செய்யுங்கள்.
 
திருமணமானவர்கள்... மனைவி கணவனை எண்ணி அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி கணவர் உடல் முழுவதும் படர்ந்து அவர் இரத்த நாளங்களில் கலந்து அதில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று ஏங்கித் தியானியுங்கள்.
 
அதே போல் கணவன் மனைவியை எண்ணி அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி மனைவி உடல் முழுவதும் படர்ந்து அவர் இரத்த நாளங்களில் கலந்து அதில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று ஏங்கித் தியானியுங்கள்.
 
1.இப்பொழுது உங்கள் இரு மனமும் ஒன்றென இணைகிறது.
2.இரு உயிரும் ஒன்றென இணையும் சந்தர்ப்பம் உருவாகிறது
3.அருள் ஒளி என்ற உணர்வை உருவாக்க இது உதவும்.
 
குழந்தைகள் தங்கள் தாய் தந்தையரை எண்ணி அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் பேரருள் எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அவர்கள் பெறும் பேரருளை நீங்களும் பெறலாம்...!
 
1.அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் நுகர்ந்தறிந்த
2.பல விதமான மூலிகைகளின் உணர்வுகள் அந்த அருள் உணர்வின் மணங்களை
3.நஞ்சினை வென்றிட்ட அந்த அருள் மணங்களை நீங்களும் நுகரலாம்.
4.உங்கள் ஆன்மாவில் அது அதிகமாக இப்பொழுது பரவும்... அதை உணரலாம்.

அகஸ்தியனுக்குள் விளைந்த நஞ்சினை வென்ற உணர்வை நாமும் கவர இப்படிப் பழகிக் கொள்ள வேண்டும். அதற்குத் தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).