ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 17, 2020

“பிராணன்…” (சுவாசம்) பற்றி ஞானிகள் சொன்னதன் உண்மை நிலைகள்

பூமிக்குள் ஏற்படும் உணர்வுகள் (கல் மண் தாவரம் உயிரினங்கள் வெளிப்படுத்துவது) சூரியனால் கவரப்படும் பொழுது அது பிராணாயாமம்.
 
மற்ற உயிரணுக்கள் அல்லது உயிரினங்கள் இந்த உணர்வை நுகர்ந்தால் அதே உணர்வுகள் இயக்கப்பட்டு அதன் உணர்வின் வழியிலேயே அதை இயக்கத் தொடங்குகின்றது.
 
உதாரணமாக ஒரு வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உயிரிலே அது பட்டால் பிராணாயாமம். அதாவது
1.நமக்குள் இப்படி எந்தெந்த உணர்வு வருகின்றதோ “பிராணன்…!”
2.அதை ஜீவனுள்ளதாக இயக்குகின்றது என்பதனை அவ்வாறு காட்டுகின்றனர்
 
ஆனால் இங்கே “பிராணாயாமம்” என்று சொல்லி…
1.மூச்சை (காற்றை) இழுத்து உடலுக்குள் அதிகமாகச் செலுத்தப்படும் பொழுது
2.நம் உடலில் “எதன் வேக உணர்வுகள் அதிகமோ” அதைக் கவர்ந்து விடுகிறது.
 
இயற்கையாகவே… சுவாசிக்கும் உணர்வுகளை எல்லாம் உயிரிலே ஃபில்டர் செய்யக் கூடிய சளி இதை வடிகட்டிவிடும். அதிகமானால் வெளித் தள்ளிவிடும். இப்படி வடிகட்டிய நிலைகள் கொண்டு தான் சுவாசம் உள்ளே போகிறது.
 
ஆனால்… உணர்வின் தன்மை உந்து விசை அதிகரிக்கப்படும் பொழுது காற்றை இழுத்துச் சுவாசிக்கும் போது
1.நம் உடலில் உள்ள சுவாசப்பைகளில் அதிகமாகச் சென்று விட்டால்
2.நாளடைவில் அந்த உறுப்புகளில் பல விதமான இருமல்கள் வரும்.
 
இதே உணர்வுகள் நுரையீரலில் அழுத்தப்பட்டு உடல் முழுவதற்கும் இந்த வாயுவை உந்தப்படும் பொழுது அந்த வாயு மண்டலத்தை இழுத்துச் செல்லும் நரம்பு மண்டலங்களுக்குள் சென்றுவிடும்.
 
அப்படிச் சென்றவுடன் இது எதை எடுத்தார்களோ அதனின் உணர்வின் தன்மை விஷத் தன்மையாகி கடு…கடு என்று கிடு…கிடு என்கிறது என்றெல்லாம் “மூச்சுப் பயிற்சி செய்பவர்கள் பெரும்பகுதி கடைசியில் கேட்டால் இதைத் தான் சொல்வார்கள்…!”
 
இன்று இவர்கள் இழுத்து இதை எல்லாம் கற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒருவன் வேதனைப்படுகிறான் என்ற நிலைகளில்… அவன் என்ன செய்கிறான்…? என்று எடுத்துச் சுவாசிக்கலாம். அப்பொழுது அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் வரும் பொழுது வேதனை உருவாக்கும் உணர்வின் தன்மையாக வரும்.
 
பிராணாயாமம் என்று இதை எடுத்துக் கொண்டு முதல் நிலையானாலும்
1.பிறருடைய உணர்வுகளைச் சுவாசித்துப் பார்த்தால் “சரம்”
2.அவன் உணர்வுக்கும் நம் உணர்வுக்கும் என்ன மோதுகின்றது…?
3.அவன் என்ன நினைக்கின்றான்…? அவன் உடலில் என்ன இருக்கின்றது...? என்ற நிலையை
4.பிராணாயாமம் சுவாசித்து உயிரிலே பட்டு இந்த உணர்வுகளை உணர்ந்தாலும்
5.பிறருடைய எண்ணங்களையும் (அவரவர் குணத்தின் எண்ணங்கள்) கவர்கின்றது.
 
கவர்ந்த இந்த உணர்வின் தன்மை தன் உடலுக்குள் சென்றால் வாயு மண்டலங்களில் விஷத் தன்மையாகிக் கை கால் குடைச்சல் என்ற நிலைகள் உருவாகிவிடும்.
 
ஏனென்றால் அந்த உணர்வுகளை நேரடியாகச் செலுத்தி இரத்த நாளங்களில் கலப்பதற்கு முன் வாய்வால் (காற்றாக) இது சுவாசப் பைகளில் சென்று உடலில் விஷத் தன்மைகளைப் பரப்புவதால் அந்த நிலை ஏற்பட்டு விடுகிறது.
 
வட கிளை தென் கிளை என்று சுவாசித்து… வடிகட்டும் திறனை இழந்து… இயல்பாக இருப்பதை மூக்கை அடைத்து இதைச் செயல்படுத்துவது என்பது இவர்கள் சொல்வது.   
 
ஏனென்றால் இதை எல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்… அதைத் தான் உங்களுக்குச் சொல்கிறேன் (ஞானகுரு).
 
1.நேரடியாகச் சுவாசித்து (அந்தந்தக் குணத்தின் உணர்வுகள்) உயிரிலே பட்டு வாயிலே உமிழ் நீராகி…
2.அந்த உமிழ் நீர் உணவுடன் கலந்து அந்த உணர்வுக்குள் உயர்ந்த நிலை ஆன பின் இது இரத்தமாக மாறும் பொழுது…
3.நாம் எந்தக் குணத்தை நாம் எண்ணுகின்றோமோ அதன் உணர்வு கொண்டு பிராணாயாமம்.

அருள் உணர்வுகளைப் “பிராணன்…” உருவாக்கி இதன் வழி நமக்குள் உருவாக்குதல் வேண்டும் என்பது தான் ஞானிகள் காட்டியது.