ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 11, 2019

பூமியில் வாழும் உயிரினங்களின் “உயிர்த் துடிப்பே” இரு மடங்காகும் சந்தர்ப்பம் வந்து கொண்டிருக்கின்றது...!


பூமிக்க்குள்ளும் வெளியிலும் அணுகுண்டை வெடித்ததால் வெளிப்பட்ட கதிர்வீச்சுகள் வான்வீதியிலே சிதறப்பட்டு நம் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்களில் இணைக்கப்பட்டு சூரியனுக்குள்ளும் சென்று விட்டது.

அணுகுண்டை வெடித்த பின் கதிரியக்கங்கள் பரவி எல்லாவற்றையும் புகை மண்டலங்களாக மாற்றி அதன் இனத்தைப் பிரித்து விடுகின்றது. அந்தக் கதிரியக்கங்கள் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாக் கோள்களும் கவர்ந்து வைத்துள்ளது.

1.எல்லாக் கோள்களிலும் கலந்த அந்த உணர்வுகள் வரப்படும் பொழுது
2.சூரியனிலே இது மோதலானால் எலெக்ட்ரிக் உற்பத்தி செய்வதை இரு மடங்காக உருவாக்கிவிடும்.
(3.மின்சாரம் வரும் இரண்டு வயர்களை ஒன்றாக இணைத்தால் மின் ஆற்றல் அதிகமாகி எல்லாவற்றையும் கருக்குவது போன்ற நிலை சூரியனிலே உண்டாகும்)

ஆக இரு மடங்காக அந்த எலெக்ட்ரிக்கின் தன்மை உருவாக்கப்படும் பொழுது அதனின் விளைவுகள் எப்படி இருக்கும்...?

சாதாரண நிலைகளில் கம்ப்யூட்டரோ மற்ற எலெக்ட்ரானிக் சாதனங்களோ இயக்கப்படும் பொழுது அதில் உள்ள எலெக்ட்ரிக் ஒரு சம நிலையில் இருக்கின்றது.

நம் உயிரின் துடிப்பும் மின் இயக்கம் கொண்டது. மின் ஆற்றல் கொண்டு தான் இயக்கி உடலை உருவாக்குகின்றது. அந்த உணர்வுக்கொப்பதான் உணர்ச்சியின் வேகத் துடிப்பும் மற்ற நம் உடலை இயக்குவதும் எல்லாமே...!

ஆனால் அங்கே சூரியனுக்குள் மோதல் ஏற்பட்டு இரு மடங்கு காந்தப் புலன் அதிகமாக்கப்படும் பொழுது
1.நம் உயிரின் துடிப்பும் அதிகமாகும்
2.உணர்வின் துடிப்பும் அதிமாகும்.
3.மற்ற உயிரினங்களின் உயிரின் துடிப்பும் அதிகமாக்கப்படும் பொழுது அதனுடைய நிலைகளும் மாறுகின்றது.

விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட இந்த நிலை “ஹைட்ரஜன்” அதிகமாக விரிவாக்கப்படும் பொழுது அதனுடைய உணர்வின் தன்மையை அது இழக்கச் செய்கின்றது.

ஆகவே இந்தப் பிரபஞ்சம் சீக்கிரம் மாறப் போகின்றது...!

கம்ப்யூட்டரின் துணை கொண்டு தான் இராகெட்டுகளும் செயற்கைக் கோள்களும் மற்றவைகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய அந்தக் கம்ப்யூட்டர்களும் செயல் இழக்கப் போகின்றது,

அதே போல் விஷத் தன்மையை இயக்கும் இயந்திரங்களையும் இரசாயணங்களையும் அந்தக் கம்ப்யூட்டரின் துணை கொண்டு பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர்.

மின் உற்பத்தி இரு மடங்காக ஆக்கப்படும் பொழுது கம்ப்யூட்டர்கள் தாறுமாறாக இயங்கி பாதுகாப்பு இழந்து அது அது வெடிக்கப் போகின்றது. காற்று மண்டலம் முழுவதுமே நச்சுத் தன்மையாகின்றது.
1.நம் சொத்தெல்லாம் நிலைக்குமா…?
2.ஆக மொத்தம் இந்த உடலே இருக்கப் போவதில்லை.

விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கை வாழும் மனிதனின் ரூபத்தை அழித்திடும் இந்தக் காலத்தில் தொழில்... அது... இது...! என்று இருந்தாலும் நமக்குள் எதைச் சேர்க்க வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தொழில் வளம் பெற வேண்டும் என்றாலும் அந்த அருள் ஞானம் தேவை. அந்த அருள் உணர்வின் தன்மை நமக்குள் எடுத்தால் நஞ்சின் தன்மையை நீக்கிவிடும்.

கடவுளின் அவதாரத்தில் எப்படி வராகன் சாக்கடைக்குள் இருக்கும் நஞ்சினை நீக்கி விட்டு நல்ல உணர்வின் தன்மையை அது எடுத்ததோ அதைப் போல்
1.இந்தக் காற்று மண்டலமே நஞ்சாக மாறினாலும்
2.நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வுகளையும்
3.அடிக்கடி எண்ணி எடுத்து உங்கள் உடலில் பெருக்கிக் கொண்டே வந்தால்
4.விஷத் தன்மைகள் வந்தாலும் அதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்கள் உங்களுக்குள் வரும்.

ஆகவே அனைவருமே ஏகோபித்த நிலைகளில் “துரித நிலைகள் கொண்டு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து வளர்த்துப் பெருக்கிக் கொள்ளுங்கள். அப்படிப் பெருக்கினால் உங்களை காத்துக் கொள்ளலாம்.

பாதுகாத்தாலும் எந்த அருள் ஒளியை நமக்குள் வலுவாக்கிக் கொண்டோமோ இந்த உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவியில்லா நிலைகள் அடையலாம்.