ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 10, 2019

அகண்ட அணடத்தின் சக்தியைக் கணவன் மனைவி பெறும் வழி


நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை நம் உடல் கழிவாகப் பிரித்து விட்டு நல்லதை...
1.நறுமணம் கொண்ட உணர்வாகவும்
2.நறுமணத்தை அறியும் அறிவாகவும்
3.நறுமணத்தை நுகரும் தன்மையாகவும்
4.நறுமணத்தின் உணர்வு கொண்டு நற்செயலைச் செயல்படுத்தும் உணர்வாகவும் உடல் மாற்றுகின்றது.
5.உடலின் மணங்கள் இவ்வாறு இயக்குகின்றது

ஆனால் மற்ற உயினங்கள் விஷத்தின் தன்மையைத் தனக்குள் சேர்த்துக் கொண்டு தன் உடலில் வலிமை பெறுகின்றது நல்ல உணர்வின் தன்மைகளை நஞ்சாக (கழிவாக) மாற்றுகின்றது.

உடல் வலிமை கொண்டு சிந்திக்கும் செயல் இழந்து ஒன்றோடு ஒன்று போர் முறை கொண்டு அது மற்றொன்றைத் தாக்கி மற்றவைகளின் உணவைப் பரிமாறிக் கொள்கின்றது.
1.இது மிருக உணர்வுகளின் இயக்கங்கள்.
2.ஆக நஞ்சின் வலிமை கொண்டு வரும் பொழுது சிந்திக்கும் தன்மை அவைகளுக்கு இல்லை.

ஆனால் மனிதனோ சிந்தித்துச் செயல்படும் தன்மை பெற்றவன். அந்த நஞ்சினை அடக்கும் உணர்வு கொள்ளும் பொழுது
1.அண்டத்தில் எட்டாத உயரத்தில் இருக்கும் உணர்வின் தன்மையையும் எட்டிப் பிடித்து
2.அகண்ட அண்டத்தில் அந்த அருள் ஒளியின் சுடராக அறியும் வல்லமை பெற்றது “மனிதனின் ஆறாவது அறிவு...”

அகண்ட அண்டத்தின் உணர்வுகளை நம் பிரபஞ்சம் கவர்ந்து சூரியன் ஒளிச் சுடராக மாற்றுகிறது. அதைப் போல
1.நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி
2.ஒளியின் சரீரம் பெறும் அறிவின் தன்மையைத்தான் கார்த்திகேயா என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
3.கார்த்தி என்றால் வெளிச்சம்.

அகண்ட அண்டத்தையும் அறியும் தன்மையும் அண்டத்தில் உருவான நம் பிண்டத்திற்கு (உடலுக்கு) உண்டு. அகண்ட அண்டத்தின் ஆற்றலை நமக்குள் பெறும் தகுதியும் உண்டு.

ஆகவே எத்தகைய நஞ்சின் தன்மை வந்தாலும் அதை வென்றிடும் உணர்வு பெற்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் நுகர்ந்து என்றுமே நமக்குள் பேரின்பம் என்ற நிலையை உருவாக்கிடல் வேண்டும்.

அத்தகைய அருள் ஞானத்தை கணவன் மனைவி இருவருமே பெற்றுப் பழக வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் இரு மனமும் ஒன்றாகி இரண்டறக் கலந்து உணர்வின் ஒளியாக மாற்ற வேண்டும்.

கணவனும் மனைவியும் அருள் ஞான சக்தி பெற்று நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று இரு உயிரும் ஒன்றி வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி ஒளியின் உணர்வாக உருவாக்கும் தன்மை பெறவேண்டும். உலக ஞானம் பெற்று இந்த உலகைக் காத்திட வேண்டும்.

உலகில் தான் நாம் வாழ்கின்றோம். நம் உடலுக்குள் உலக உணர்வுகள் அனைத்தும் உண்டு. ஆகவே அந்த உலக உணர்வை பகைமையற்ற நிலையாக்கிப் நம்மிடம் பகைமை வளராது தடுக்க வேண்டும்.

ஒளியின் சுடரான அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்தால்
1.உலக ஞானம் பெறலாம். பகைமைகளை அகற்றிடலாம்.
2.அருள் ஒளியின் சுடராகப் பேரருள் வாழ்க்கை வாழ்ந்து
3.மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற்று
4.நம் பேச்சும் மூச்சும் பிறரை மகிழச் செய்யும் உணர்வாக வளரும்.
5.இந்த உடலுக்குப் பின் அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத வாழ்க்கை வாழலாம்.