ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 18, 2019

ஈஸ்வரபட்டர் ஒளியான உணர்வுகளையே நாம் பெறுதல் வேண்டும்…! ஏன்…?


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் பித்தனைப் போலத்தான் இருந்தார். பல நிலைகளிலும் பல இன்னல்களைப் பட்டார்.

அவருடைய நிலைகளைப் பிறர் பார்க்கும் போது
1.தன்னைப் பைத்தியக்காரனாகத்தான் காட்டினார்.
2.ஆனால் அந்தப் பைத்தியக்கார நிலையில்
3.அவருக்குள் “எவ்வளவு பெரிய ரகசியங்கள் இருந்தது…? என்பது நமக்குத் தெரியாது.

அதே குருநாதரை வைத்து நான் அதைச் செய்கிறேன்இதைச் செய்கிறேன்…. ரசமணி செய்கிறேன்...! என்று மந்திரங்கள்... தந்திரங்கள் என்று அவர் பேரைச் சொல்லிக் கொண்டு இப்படியும் சிலர் செய்திருக்கிறார்கள்.

ஆனால் அவர் உடலில் பல உணர்வுகள் உண்டு. அவர் எடுத்துக் கொண்ட நிலைகளிலும் கற்றுணரந்த நிலைகளிலும் அவர் உடலை விட்டுச் சென்றார்.
1.அவர் உடலில் இருந்து பிணைத்த உணர்வுகள் உண்டு.
2.அதன் வழியில் தீமையை எண்ணுவோர்க்குத் தீமையே கிடைக்கும்.

ஆனால் குருநாதர் காட்டிய அந்த மெய் ஒளி பெற வேண்டுபவர்களுக்கு அந்த அருள் ஒளி கிடைக்கும்.
1.அவரின் அருள் ஞானத்தை நாம் பெறுவோம் என்றால் மெய் வழி காணும் நிலைகள் கிடைக்கும்.
2.நாம் இந்த உடலில் இருக்கும்போது அந்த அருளைப் பெற்று வளர்த்துக் கொள்ள வேண்டும்.
3.கணவன் மனைவியும் இதைப் போல் எண்ணுதல் வேண்டும்.

அன்று அகஸ்தியன் காட்டிய நிலைகள் துருவத்தில் பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தை அடைவோம்.

நாம் அனைவரும் பிறவி இல்லா நிலை பெறுவோம் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு)