ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 5, 2019

கல்வி கற்றுத் தரும் ஆசிரியரே பரீட்சைக்கும் வந்து எல்லாவற்றையும் நமக்குச் செய்து தருவாரா...?


இன்று இருக்கக்கூடிய உலகம் விஷ உலகமாக இருக்கின்றது. அதிலிருந்து மீட்டுக் கொள்வதற்கு
1.ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்ற மாதிரி மெய் ஞானிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
2.அதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் காற்றிலிருந்து அந்த அரும்பெரும் சக்திகளை எடுக்கலாம்.
3.உங்கள் எண்ணம் தான் உங்களைக் காக்கும்.
4.சாமி (ஞானகுரு) வந்து நம்மைக் காப்பாற்றுவார் என்று எண்ணினால் இதெல்லலாம் தவறு.

ஆகவே உங்களை நீங்கள் நம்ப வேண்டும்...!

ஏனென்றால் உயிர் எண்ணியதைத்தான் உருவாக்குகின்றது. எண்ணிய சக்திகளை உங்களைப் பெறச் செய்வதற்காகத்தான் ஞானிகளின் உணர்வை உபதேசமாகக் கொடுக்கின்றோம்.

அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் பதிவானால் என்ன நடக்கின்றது.

உதாரணமாக பள்ளிக்குச் சென்று படிக்கின்றோம் என்றால் ஆசிரியர் இது இன்னது... இன்னது தான்...! என்று சொல்கிறார். அவர் சொன்னபடி நாம் எடுத்துக் கொண்டால்
1.அந்தக் கணக்குப் பிரகாரம் இயந்திரத்தைச் செய்யலாம்... இயக்கலாம்
2.கணக்கீடுகளைச் (CALCULATION) செய்யலாம்
3.இந்தந்தப் பொருள் இப்படி இயங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் அதற்குப் பதில் ஆசிரியரே வந்து எனக்கு எல்லாம் செய்து கொடுப்பார் என்றால்... எப்படி...? நீங்கள் வீட்டுக்குப் போன பின் ஆசிரியர் வந்து எப்படிச் சொல்லிக் கொடுப்பார்...?

சொல்லிக் கொடுப்பார். எழுதிக் கொடுத்து அதையும் செய்து கொடுத்துக் கொண்டே இருந்தால் ஆசிரியர் வேலை அன்ன ஆவது...?

ஆகையினால் நாம் எல்லோரும் என்ன செய்கிறோம்...? என்றால் சாமியார் செய்து தருவார்... சாமி செய்யும்.. ஜாதகம் செய்யும்... மந்திரம் செய்யும்... யாகம் செய்யும்...! என்று இப்படித்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றோமே தவிர
1.மனிதனான பின் தனக்குள் நாம் எண்ணியதைச் செயலாக்கும் சக்தி
2.”நம் உயிர் தான்...!” என்பதை மறந்தே இருக்கின்றோம்.

கோபத்தையும் வெறுப்பையும் வேதனையையும் மட்டும் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம். நல்லதை மட்டும் எண்ணவே முடியவில்லை...!

காரணம்... ஒரு விஷம் கொண்ட பொருளுக்குள் நல்ல பொருளைப் போட்டால் அந்த நல்ல பொருளும் ஒடுங்கிவிடுகின்றது.

விஷம் கொண்ட உலகமாக இருக்கும் பொழுது விஷம் கொண்ட இயக்கமாக இருக்கும் பொழுது இன்றைய மனிதனின் வாழ்க்கையில் அந்த உணர்வின் செயலாக்கமே நம் நல்ல உணர்வை அறியவிடாது தடைப்படுத்துகின்றது.

நல்ல உணர்வுகளை அறிய வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் கூறும் உபாயத்தைக் கடைப்பிடித்து
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்டால்
2.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
3.அடுத்து உங்களைப் பிறவியில்லா நிலையை நிச்சயம் அடைய முடியும்.
4.இந்த விஞ்ஞான உலகின் பேரழிவிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள இது உதவும்.