ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 12, 2017

அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற பிரஞ்சத்தின் ஆற்றலை உங்களையும் பெறச் செய்கிறோம்

அன்று அகஸ்தியன் தாய் கருவிலே விளையப்படும் பொழுது மற்ற மிருகங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நஞ்சினை வென்றிடும் அந்த மூலிகைகளை தாய் தந்தையர்கள் இவர்கள் உடலிலே பூசி வளர்த்துக் கொண்டார்கள்.

ஆனாலும் கருவுறும் அணுக்களில் இந்த விஷத் தன்மைகள் ஊடுருவி அந்த விஷத்தை ஏற்று அதையே வளர்த்துக் கொள்ளும் நிலையும் விஷத்தை வென்றிடும் உணர்வின் அணுக்களாகக் கருவிலே உருவாகும் சிசுவிற்கு எப்படி உருவாகின்றது என்று வளர்ந்த நிலைகளும் இதைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

அக்காலங்களில் அந்த உணர்வுகளை நுகர்ந்ததும் அவர்கள் உடலிலே வளர்ந்ததும் உணர்வின் அலைகள் இன்றும் பரவியிருப்பதும் அதை நுகர்ந்தறியும் உணர்வுக்குள் நீ இதைக் காணும் பாக்கியத்தைப் பெறுகின்றாய் என்று இதனைத் தெளிவாக்கி அதை நுகரும்படிச் செய்தார் குரு.

கருவில் வளரும் சிசுவிற்கு இந்த மூலிகை மணங்கள் எவ்வாறு அது படர்கின்றது? ஆக, இந்த விஷத் தன்மையை அடக்கும் அணுக்களாக எவ்வாறு விளைகின்றது?

அப்படி விளைந்த மனிதன் தான் பிறந்தபின் அவன் உடலிலிருந்து வெளிப்படும் மணங்களை மற்ற விஷம் கொண்ட புலியோ யானையோ மற்ற மிருகங்களோ இதை நுகர்ந்தால் அவைகள் பலவீனமடைகின்றது. இவனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது.

ஆனால், குழந்தையோ ஒன்றும் செய்யவில்லை. இவனோ விண்ணை நோக்கி ஏகுகின்றான். சூரியனின் நிலைகளில் அதனின்று தூவும் உணர்வின் ஒளி அலைகள் விஷத்தைத் தாக்கி வெப்பமாகி விஷத்தைப் பிரிக்கின்றது.

விஷத்தை முறிக்கும் நிலைகள் கொண்ட அந்தச் சூரியனை உற்றுப் பார்த்தோம் என்றால், ஆனால் தாக்குதலிலிருந்து வெப்பமும் இந்த உணர்வுகளை நாம் நுகர்ந்தால் விஷத் தன்மைகள் நமக்குள் ஊடுருவப்பட்டு நம்மை இருளச் செய்கின்றது.

ஆனால், அவனையோ இந்த விஷத்தை முறித்திடும் தன்மை வரும் பொழுது நுகர்நறிந்தாலும் இந்த உணர்வின் ஒளி அலைகளைப் “பளிச்” என்று அறியும் தன்மைகள் வருகின்றது.

இன்று உதாரணமாக ஆடோ, மாடோ மற்ற காட்டு விலங்குகள் இரவிலே தன் உடலிலுள்ள விஷத்தின் தன்மை கொண்டு அது தன் மூச்சலைகளைப் பாய்ச்சப்படும் பொழுது இந்த உணர்வுகள் தன் உடலில் வரக்கூடிய மணமும் தன் உடலில் இருந்து வரக்கூடிய ஒளியும் எதிர் நிலை வரப்படும் போது தாக்கும் பொழுது அது வெளிச்சமாகின்றது, பின் அங்கிருக்கும் பொருள்கள் தெரிகின்றது.

இதைப் போன்றுதான் அகஸ்தியனின் உணர்வுகளில் அந்தப் பிஞ்சு உள்ளங்களில் விண்ணை நோக்கி ஏகுகின்றான்.

சூரியனால் இந்த உணர்வுகள் தாக்கப்படும் பொழுது ஒளி அலைகளாகப் பரவுவதும் விஷம் பிரிந்து செல்வதை அதன் உணர்வின் ஆற்றலை அகஸ்தியன் உற்றுப் பார்க்கும்போது ஏனென்றால் விஷத்தை முறிக்கும் ஆற்றல்கள் இவனுக்குள் ஒளியின் கதிராக மாற்றும் தன்மை இவ்வாறு வருகின்றது.

ஆகவே, தாய் கருவில் பெற்ற உணர்வுகள்தான் இதனின் தொடர் கொண்டு அவனுக்குள் இயங்குகின்றது.

விஷ அணுக்கள் எவ்வாறு உருவாக்குகின்றது? அது எதன் வழிகளில் இந்தப் பிரபஞ்சத்தில் பரவுகின்றது என்ற நிலையும் நட்சத்திரத்தையும் உற்று நோக்குகின்றான்.

பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மையை நட்சத்திரங்கள் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக மாற்றி அந்த உணர்வின் தன்மை தூசியாக மாறும் பொழுது சூரியனின் காந்தசக்தி அதைக் கவரப்படும் பொழுது கதிரியக்கப் பொறிகளாக அது கவர்கின்றது.

ஒரு பொருள் மற்ற உணர்வுடன் கலக்கப்படும் பொழுது எதிர்மறை ஆகி உணர்வின் ஒளிப் பேழைகள் அது எவ்வாறு மின்னுகின்றது? ஆக, கதிரியக்கச் சக்தி எப்படி மாறுகின்றது?

இதைப் போன்று நட்சத்திரங்களிலிருந்து பல உணர்வுகள் நம் பூமிக்குள் கவரப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது இங்கே மின்னலைப் பார்க்கின்றோம்.

இதைப் போல 27 நட்சத்திரங்களில் அது உமிழ்த்தும் தூசிகள் துகள்கள் வரப்படும் பொழுது சூரியன் காந்தச் சக்தி கவரப்படும் பொழுது அது எப்படி மின்னணுக்களாக மாறுகின்றது?

இந்தத் தூசியின் துகள்கள் எப்படி மாறுபட்ட நிலைகள் கொண்டு மற்ற கலவையாகி அதன் துருவப் பகுதியில் கவர்ந்து அதன் அருகில் இருக்கும் கோள்கள் எப்படி தனக்குள் எதிர்மறையான நிலைகள் உருவாக்குகின்றது என்ற நிலையினையும் அந்தப் பிஞ்சு உள்ளத்தில் அகஸ்தியன் பார்க்கின்றான்.

அவன் பார்த்த உணர்வும் அவன் அறிவின் தன்மை வளர்ந்ததும் அது எவ்வாறு பார்த்தான்? அந்த அலைகள் வெளி வந்தபின் அதை நீ நுகர்ந்து பார் என்ற உணர்வினை ஊட்டி அதனை நான் கவரும் நிலைகளைச் செயல்படுத்தினார் குரு.

அகஸ்தியன் பெற்ற நஞ்சினை வென்றிடும் உணர்வின் பொறி அலைகளை அதனை உன்னில் ஏங்கச் செய்து இந்த உணர்வை எதிர் மறையாக்கப்படும் பொழுது உன்னை ஏன் தாக்கவில்லை? என்ற இந்தப் பேருண்மையையும் உணர்த்துகின்றார் குருநாதர்.

அதை எனக்குள் பெறும் பாக்கியத்தை உருவாக்குகின்றார்.

இதைத்தான் உங்களை அந்த நினைவின் ஆற்றலை அந்தத் துருவ நட்சத்திரத்துடனும் அவர் பெற்ற உணர்வின் தன்மை பாய்ச்சி உங்கள் நினைவின் ஆற்றலைச் சூரியனுடனும் இந்த 27 நட்சத்திரத்தின் இயக்கத்துடனும் உங்களைத் தொடர்பு கொள்ளச் செய்கின்றோம்.

நீங்கள் அங்கே தொடர்பு கொண்டு அந்த உணர்வுகளை நுகர்ந்தறியப்படும் பொழுது இதை வென்றிடும் அணுவாக உங்கள் உயிர் அந்த உணர்வின் அணுவாக மாற்றும் தன்மைக்கு இதை உங்களுக்குள் வளர்க்கும் தன்மைக்கும் உங்கள் உடலுக்குள் வரும் தீமைகளை அகற்றும் நிலைகள் பெறச் செய்வதற்கும்தான் இதைச் சொல்வது.

ஏனென்றால், நான் கல்வி கற்றவனும் அல்ல, கற்றுணர்ந்தவனும் இல்லை. கற்றுணர்ந்து இதையெல்லாம் பேசவில்லை.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரால் கொடுக்கப்பட்ட உணர்வுகள் நுகர்நறிந்த உணர்வுகள் அணுவாகி அதன் நினைவாக எடுக்கப்படும் பொழுது உணர்வின் ஆற்றலை நுகர முடிகின்றது.

உணர்வின் இயக்கமாக என்னை இயக்குகின்றது. ஆகவே, சொல்லால் இப்பொழுது சொல்வதைக் கேட்கும் பொழுது கேட்டுணர்ந்தோர் உடலுக்குள் பதிவானால் தீமைகளை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குள் விளைகின்றது.

இந்த நினைவாற்றலை நீங்கள் கொண்டு நுகர்ந்தீர்கள் என்றால் உங்களையறியாது வரும் தீமைகளை நீங்கள் அகற்றிடும் வல்லமை பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசத்தை உங்களுக்குள் தெளிவாக்குவது.