ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 30, 2017

விநாயகர் தத்துவம் – 3

பிள்ளையார் சுழி ஏன் போட்டுக் காண்பித்துள்ளார்கள் ஞானிகள்?
நான் என்ற நிலைகளுக்கு வரப்படும் பொழுது “தான் யார்..? நான் யார்..?” என்று விநாயகனைப் போட்டுப் “பிள்ளையார் சுழி..,” போட்டு வைத்திருக்கிறோம்.

பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக நாம் வந்தோம். யானைத் தலையைப் போட்டு மனிதனுடைய உடலைப் போட்டு முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாகக் காட்டினார்கள்.

இந்தப் பிள்ளை” யார்..,? என்று விநாயகனைப் போட்டு நான் யார்? தான் யார்? என்று தெரிந்து கொள்வதற்காகச் செய்தார்கள்.

“இப்பொழுது.., நாம் எதை எண்ணுகிறோமோ அதைச் சுவாசிக்கும் பொழுது நான்” ஆகின்றது.

அது நம் உடலுக்குள் சென்றவுடன்.., தான்” ஆகின்றது. 

இந்தத் தான் ஆகி இந்த உடலில் அது செயல்படுகின்றது. இந்தத் தான், உடலுக்குள் “உணர்வாக விளையப்படும் பொழுது.., நான்” ஆகின்றது. 

ஆக, தான் யார்?  நான் யார்?
உயிருடன் ஒன்றி அவனுடன் சேர்ந்து அவனாகி “அவனாகவே..,” உருபெறுவோம்
நாம் கோபப்படுகிறோம், ஆத்திரப்படுகிறோம், சஞ்சலப்படுகிறோம், சங்கடப்படுகிறோம் இவை அனைத்தும் தானாகின்றது. நாம் எண்ணுவது அனைத்துமே தானாகின்றது.

நான் இதைச் செய்தேன், “நல்லதைச் செய்தேன்.., ஆனால், எனக்கு இப்படிச் செய்கிறார்களே என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த உணர்வெல்லாம் உயிருடன் ஒன்றி உயிருடன் சேர்க்கும் போது நானாகின்றது.

இப்பொழுது நாம் எடுத்துக் கொண்ட உணர்வெல்லாம் தானாகி, நானாகி விடுகின்றது. இந்தத் தான் என்ற உணர்வின் நிலையாக உயிருடன் சேரும் பொழுது நானாகின்றது.

இன்றைக்கு மனிதனாக வந்திருக்கின்றோம்.

தான் யார், நான் யார் என்ற நிலைகளை இந்த விநாயக தத்துவத்தை அகஸ்தியன் தெளிவாக்கினான்.

நம்மை அறியாது இயக்கும் இருளான உணர்வுகளிலிருந்து விடுபடுவோம். அந்த அகஸ்தியன் அறிந்த வழியில் “நம்மை.., நாம் அறிவோம்.

அகஸ்தியன் அருளைப் பெற்று அழியா ஒளி உடல் பெறுவோம். அகஸ்தியன் உணர்வை.., நான் ஆக்குவோம். 

அதை நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களையும் அதைப் பெறச்செய்து, அந்த அருள் ஒளியைத்.., தான் ஆக்கிடுவோம். 

இந்தப் பிள்ளை, “உயிரால் வளர்க்கப்பட்ட பிள்ளை என்று உணர்ந்து நாம் அனைவரும் உயிருடன் ஒன்றி, அவனுடன் சேர்ந்து அவனாக ஆகி அவனாகவே உருப்பெறுவோம்.

அந்த மகரிஷிகள் சென்ற எல்லையை அடைவோம்.