ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 28, 2013

அன்பர்களுக்கு ஞானகுரு, ஈஸ்வராய குருதேவர் இருவரின் அருளாசிகள்

உங்கள் அனைவரது வாழ்க்கையிலும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து, உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறச் செய்து, உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்து,
உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த
தீய வினைகள் அனைத்தும் நீக்கி,
குரு அருளைப் பெற்று, அருள் வழி வாழ்ந்து,
வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும்,
தெளிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடவும்,
தெரிந்து உங்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும்,
பொறுப்புடன் வாழும் தன்மையும்,
தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்று,
நமது குரு அருளை என்றென்றும் நீங்கள் துணை கொண்டு,
துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று,
உங்கள் வாழ்க்கையில் அருள் வழி வாழ்ந்து,
பேரின்பப் பெருவாழ்வு பெற
எமது ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

அருள் வழி வாழுங்கள்.
ஆனந்த வாழ்க்கை வாழுங்கள்.
பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையுங்கள்.
என்றும் பேரானந்த நிலை என்ற ஏகாந்த நிலை பெற எமது அருளும், குரு அருளும் நீங்கள் பெற்று, பேரின்பப் பெருவாழ்வு பெற எமது அருளாசிகள்.