ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 25, 2013

அருளைத் தேடினால், (நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும்) செல்வம் தன்னாலே தேடி வரும்

நாம் இம்மனித உடலுக்குப்பின், பெறவேண்டியது எது? என்பதை உங்கள் எல்லோருக்கும், தெளிவாக்கும் தன்மைக்குத்தான் கொண்டு போகின்றோம்.

இன்று மனிதருடைய ஆசைகள் எப்படி இருக்கின்றது? இன்றைக்கு செல்வத்தைச் சம்பாதித்து விடலாம், செல்வத்தைத் தேடலாம் என்ற ஆசைகளில்தான் இருக்கின்றது.

ஆனால், இந்த உடலுக்குச் செல்வம் தேவை என்று, யாம் உணர்ந்து தான் இருக்கின்றோம். நீங்கள் செல்வத்தைத் தேடிப் போகின்றீர்கள் என்றால், அவ்வழியில், உங்களை முறைப்படுத்திச் சென்றால், செல்வம் தானாக உங்களைத் தேடி வரும்.

நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும், செல்வம் தன்னாலே தேடி வரும்,
அமைதியும் கிடைக்கும்,
சொல்லும் நன்றாக இருக்கும்,
கேட்போரிடத்தில் தீய உணர்வுகளை நீக்கும்.

ஆகையினால்நாம் செல்வத்தை எண்ணுவது முக்கியமல்ல. அருள் செல்வத்தை எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது, அந்த அருள் செல்வம் தன்னாலே வரும். 

ஆரம்பத்திலிருந்து, யாம் இதைத் தான் செய்து வருகின்றோம்.ஆக, அருளைப் பெருக்கும் பொழுது, இருள் நீங்குகின்றதுஅப்பொழுது, பொருள் தன்னாலே சேரும். எதன் நிலையில் எப்படிச் செயல்படுத்த வேண்டும்? என்பதற்குத்தான் இவைகளை உங்களுக்குத் தெளிவாகக் கூறுவது.

ஒவ்வொரு முறையும், நாம் பிறிதொரு தீமைகளைப் பார்க்க நேர்ந்தாலும், எண்ணினாலும், உடனே குரு கொடுத்த அருள் உணர்வின் துணை கொண்டு, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை எடுத்து, பிற தீய உணர்வுகள் தம்மிடத்தில் வராது தடைப்படுத்த வேண்டும்.

அவ்வாறு, தீமைகள் தம்முள் சேராது தடுக்கும் நிலையாக, துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைச் சேர்க்கும் அன்பர்கள் அனைவருக்கும்,  எமது அருளாசிகள்.