ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 5, 2013

CANCER - கேன்சர் நோய் வர முக்கியமான காரணம்

புகையிலையோ மிகவும் விஷம் கொண்டது. 

அதற்குள் ஒரு புழு விழுந்தால், அதையும் மீறிய கடும் நஞ்சான மருந்துகளை வீசிப் பரப்பி அந்த மணத்தை நுகரச் செய்து, அந்தப் புகையிலை மேல் இருக்கும் கிருமிகளைக் கொல்கின்றோம்.

ஆனால், அந்தப் புழு இட்ட கரு முட்டைகள் அந்த நஞ்சான மருந்தைக் கவர்ந்து, அந்த உணர்வின் தன்மைகள் மீண்டும் புழுக்களாக உருவானால், முதலில் போட்ட மருந்தை உபயோகித்தாலும், அந்தப் புழுக்கள் சாவதில்லை.

இதைப் போன்றுதான், நாம் சாதாரண வாழ்க்கையில் பிறரை வேதனை கொண்டு கேட்கும் உணர்வுகள் நமக்குள் வினையாகச் சேர்ந்து, நம் ஆன்மாவில் எதிர் நிலையாகிவிடுகின்றது.

ஆக, இப்படி ஒவ்வொரு நிமிடமும் பிறர் சொல்லும்
வேதனையைக் கேட்டு, கேட்டு,
வேதனை வேதனை என்ற நிலைகளில்,
எதையெடுத்தாலும் இந்த வேதனைகள் கலந்து
இந்த விஷத்தின் தன்மை பாய்கின்றது.
அந்த விஷத்தின் தன்மைதான் கேன்சராக (CANCER) மாறுகின்றது.

நாம் எத்தகைய வலிமையான மருந்தைக் கொண்டு அதை அழிக்க நினைத்தாலும், நமக்குள் இருக்கும் மற்ற அணுக்களும் வீழ்ச்சி அடைந்துவிடுகின்றது. அவ்வளவு சக்தி வாய்ந்தாக அந்த விஷம் உட்கொள்கின்றது.

நமக்குள் இருக்கும் மற்ற அணுக்களுக்கு இந்த விஷத்தினைப் பாய்ச்சினால், அவைகள் தாங்காது உடல் மற்ற செல்களைச் செயலாக்காத நிலையாகிவிடுகின்றது.

அது மீண்டும் விஷத்தின் தன்மையால் ஆக்கிரமிக்கப்பட்டு, சாகாக்கலையாக மனிதனில், கடும் வேதனை கொண்ட நிலைகளைத் தூண்டும் எண்ண அலைகளாக வருகின்றது.

கேன்சர் என்ற நிலைகள் உடனடியாகத் தெரிவதில்லை. அது கேன்சர் என்ற நிலையைத் தெரிந்து கொள்ளும் நிலையும் இல்லை. ஆக, அது ஊடுருவி, முழுமையான நிலைகளில் வெளிவரும் பொழுதுதான் நாம் அதைத் தெரிந்துகொள்கின்றோம்.