ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 13, 2020

நம் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தி கலந்தே வர வேண்டும்

 

உடலில் எந்த நோய் இருந்தாலும் அந்த நோயை மறக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உடலில் படர்ந்து
1.சர்க்கரை சத்தை நீக்கும் அரும் பெரும் சக்தியாக எனக்குள் உருவாக வேண்டும்
2.இரத்தக் கொதிப்பு இருந்தால் அதனுடைய நிலைகள் நீங்க வேண்டும்
3.இருதய  நோயோ ஹார்ட் அட்டாக்கோ வந்தால் அதை நீக்கிடும் அந்த அரும் பெரும் சக்திகள் எனக்குள் வளர வேண்டும் என்று
4.இந்த உணர்வினைச் சேர்த்து வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
 
இத்தகைய ஒரு பழக்கத்திற்கு நீங்கள் வந்து விட்டால் வாழ்க்கையில் நாளை வரும் கடும் விளைவுகளில் இருந்து மாற்றி இந்த உடலைவிட்டு எந்த நேரம் போனாலும் நாம் அங்கே சப்தரிஷி மண்டலம் போய்ச் சேரலாம்.
 
இல்லை என்றால் நோயின் உணர்வுகள் பங்கு அதிகமாகச் சேர்ந்து விட்டால் இந்த புவியின் ஈர்ப்புக்கு வரும்.
 
ஆகவே நம் உடல் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்த  நஞ்சை எப்படி மலமாக மாற்றுகின்றதோ இதைப்போல் நாம் நுகர்ந்த உணர்வுக்குள் வரும் நஞ்சினை அருள் உணர்வுகளை எடுத்து மாற்றி நல்ல அணுக்களுக்கு அதைத் தெளிந்த உணவாகக் கொடுக்க வேண்டும்.
 
இன்று விஞ்ஞான அறிவு கொண்டு உப்புத் தண்ணீரில் உள்ள உப்புச் சத்தை மாற்றி நாம் நல்ல நீராக (RO WATER) மாற்றுகின்றார்கள். அதைத் தான் நாம் இன்று குடிக்கின்றோம்.
 
1.இதைப்போல… நாம்  மகரிஷிகளின் உணர்வை எடுத்து நம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி
2.நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களை ஒளியாக ஆக்க முடியும்.
 
ஆகவே அப்படி ஒளியாக மாற்றும் திறன் பெறுவதற்குத்தான் அடிக்கடி உங்களுக்குள் நினைவுபடுத்தி அந்த உயர்ந்த சக்தியைப் பெறச் செய்வதற்குத்தான் இதைத் திரும்ப திரும்ப சொல்வது.
 
என்னடா சாமி திரும்பத் திரும்பச் சொல்கின்றார்…! என்று நினைக்கலாம். இந்த உணர்ச்சிகளைத் தூண்டி அந்த அரும்பெரும் சக்தியை நுகரச் செயவதற்குத்தான் இதைச் செய்கிறேன்.
 
ஒரு தடவை சொல்லிவிட்டுப் பேசாமல் விட்டுவிடலாம்…
1.ஆனால் உங்கள் நினைவின் ஆற்றலை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்
2.அதை நுகரும் ஆற்றலைக் கொண்டுவர வேண்டும் என்பதற்குத்தான் அடிக்கடி நாம் சொல்வது
3.அடிக்கடி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி கொண்டே இருக்கவேண்டும்.
 
ஏனென்றால் நாம் இன்று பார்க்கலாம்… எந்த நோயாக இருந்தாலும் இரத்தத்தைத்தான் எடுத்துப் பரிசோதிக்கின்றார்கள். சளி சம்பந்தப்பட்டது ஆஸ்மா சம்பந்தப்பட்டது. டி.பி. என்று இப்படி எதுவாக இருந்தாலும் அந்த விஷ அணுக்கள் உருவாகும் தன்மை இருக்கின்றது என்று இரத்தப் பரிசோதனையில் தான் பார்க்க முடிகின்றது.
 
வாழ்க்கையில் சலிப்பும் சங்கடத்துடன் இருக்கும் ஒரு கூட்டத்துடன் ஒரு மாதம் சேர்ந்து இருந்துவிட்டு வந்து பாருங்கள். உங்கள் இரத்தத்தைச் சோதித்துப் பார்த்தால் அதில் நீங்கள் நுகர்ந்த அந்த விஷத் தன்மைகள் இரத்தத்தில் இருக்கும்.
 
ஆனால் இது போன்று ஆகும் தன்மையில் அதனுடைய உணர்வுகளை எல்லாம் மாற்றுவதற்காகத்தான் மருந்தை உட்கொள்கின்றோம். ஆனால் மருந்திற்குள்ளும் விஷம் உண்டு
 
அந்த மருந்தைக் கொண்டு உடல் நோயை அழித்தாலும் அந்த மருந்துக்குள் ஊடுருவிவிட்ட அந்த விஷத்தன்மை நமக்குள் கலக்கின்றது
 
1.நீங்கள் எந்த மருந்தைச் சாப்பிட்டாலும் உடலில் உள்ள விஷத்தை ஒன்றை மாற்ற அடுத்து இன்னொன்று வரும்.
2.ஆக இதை எல்லாம் வென்ற அருள் ஞானியின் உணர்வை எடுத்து அதை மாற்றி
3.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வின் எண்ணங்களை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும். 
 
ஏனென்றால் அணுக்கதிரியக்கங்கள் சூரியனை அணுகி விட்டது. ஒரு நொடிக்குள் எப்படி பூமி நில நடுக்கம் ஆகின்றதோ இதைப்போல அங்கே அதிகமான விஷத் தன்மைகள் பரவினால் நம் சிந்தனைகளை சிதறிவிடும்.
 
ஆகவே அத்தகைய நேரங்களிலும் நம்முடைய சிந்தனைகள் சிதறிடாது காக்க வேண்டும்.
 
எப்படி பல்பு ஃபீஸ் (FUSE) ஆகிவிட்டால் வேலை செய்யுமோ…? செய்யாது. அது போல் மனிதனின் உணர்வுகள் ஃபீஸ் ஆகிவிட்டால் மனித நிலை அல்லாது வேறொரு உருவை உருவாக்கிவிடும்.
 
அந்த நிலைக்கு விஞ்ஞான அறிவினால் ஒரு நொடிக்குள் மாற்றம் ஏற்படப் போகும் தீமைகளில் இருந்து நாம் மீள ஒவ்வொரு நொடியிலும் நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பழக வேண்டும்.
 
காலையிலிருந்து இரவு படுக்கச் செல்லும் நேரம் வரையிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
1.“சொல்லுக்குச் சொல்… செயலுக்குச் செயல்…! இதை நாம் பெற வேண்டும்.
2.அதற்குத்தான் மீண்டும் மீண்டும் இதைச் சொல்லிக் கொண்டே வருகிறோம்.