ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 10, 2020

தியானத்தின் மூலம் சக்தி பெற வேண்டிய சரியான முறை

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
1.நிச்சயம் நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுகின்றீர்கள்….
2.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பீர்கள்…
3.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் நோயை எல்லாம் மாற்றி அமைத்து விடுவீர்கள்….!
4.கணவன் மனைவிக்குள் சில குறை உணர்வுகள் இருந்தாலும் அதை எல்லாம் மாற்றி நிச்சயம் உயர்ந்தவர்களாக ஆவீர்கள்
5.இவ்வாறு நல்லதாக மாற்றக்கூடிய சக்தி உங்களிடம் இருக்கிறது.

உங்கள் குடும்பத்தில் உங்கள் குழந்தையோ பிள்ளைகளோ “இப்படி இருக்கின்றார்களே…! என்று வேதனையுடன் எண்ணுவதிற்குப் பதில் “அவர்கள் நிச்சயம் நல்லவர்கள் ஆகிவிடுவார்கள்… என்று எண்ணி இந்த உணர்வை நிச்சயப்படுத்தி நல்லவராக வேண்டும் என்று எண்ணி வாருங்கள்.
 
தியானம் செய்ய வேண்டிய முறை இது தான்…!
 
தியானத்தின் மூலம் அரும் பெரும் சக்தியை வளர்க்கவே இதை வாக்காகக் கொடுக்கின்றோம். இதை நீங்கள் பக்குவப்படுத்தி வளர்த்துக் கொள்ள முடியும். உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்… உங்கள் தெருவும் நன்றாக இருக்கும்… உங்கள் ஊரும் நன்றாக இருக்கும்…! ஊர் ஒற்றுமையாக இருந்தால் விவசாயமும் நன்றாக இருக்கும்.
 
ஊரில் ஒற்றுமை இல்லாது பகைமை இருந்தால் இந்தப் பகைமையான உணர்வுடன் நாம் பயிரிடும்போது பயிர்களிலும் கெடுதல் வரும். பல பூச்சிகள் விழும். விஷத் தன்மைகள் நம்மிடம் இருந்து அதற்குப் பரவும்.
 
அதை ஒழிக்க யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி தியானத்தின் வலுக் கொண்டு அருள் ஞானிகளின் உணர்வை நீங்கள் பயிர்களிலே பாய்ச்சுங்கள். பூச்சிகளைக் கொல்லும் விஷமான மருந்திற்கே வேலை இல்லை.
 
உங்கள் பார்வையில் விவசாயம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று எண்ணிக் காலை துருவ தியானத்தை எடுங்கள்.
 
அதில் நல்ல அணுக்கள் விளைய வேண்டும். நல்ல அணுக்களால் தாவர இனங்கள் விளைய வேண்டும். அதில் விளைந்திடும் உணவை உட்கொள்வோர் அனைவரும் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும். உங்கள் விவசாயம் நன்றாக இருக்கும்.
 
ஏனென்றால் இந்தக் காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக இருக்கின்றது. இதிலிருந்து நாம் அனைவரும் மீள வேண்டும்.
 
1.எல்லாரையும் அந்த ஞானத்தின் சக்தியைப் பெற வைக்க வேண்டும் என்றார் குருநாதர்
2.அதைப் பார்த்து நீ பேரானந்தப்பட வேண்டும் என்று தான் என்னிடம் சொன்னார்.
 
அதே உணர்வுடன் நீங்களும் எல்லாரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணிச் செயல்படுங்கள். பேரானந்தத்தை உருவாக்குங்கள்.
 
இந்தப் பூமியில் பிறந்த நாம் அந்தத் தாய்க்குச் சேவை செய்ய வேண்டும்.
1.தாய் பூமியை அசுத்தப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும்.
2.இதிலிருந்து தான் நாம் உருவானோம்… அந்தத் தாயை மதிக்க வேண்டும்
3.அந்தத் தாய் வீற்றிருக்கும் இந்த இடம் சுத்தமாக இருந்தால் இதில் வாழும் மக்கள் நாமும் நன்றாக இருப்போம்.