ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 23, 2020

வேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது…? தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…?

கண்ணின் கரு விழிக்குப் பின் இருக்கும் நரம்பு மண்டலம் வழி கொண்டு நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திற்கும் கண்  இணைக்கப்பட்டிருக்கிறது.
 
வேதனையான உணர்வுகள் நம் கண் வழியாகச் சென்று நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் இந்த வேதனை உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
 
தூண்டிய பின் அதனின் வலுவின் தன்மை கொண்டு அந்த வேதனைப்பட்ட உணர்வுகள் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை நுகரச் செய்து அந்த வேதனையான உணர்ச்சி கொண்டு எண்ணம் சொல் செயல் என்று இயங்கத் தொடங்குகிறது.
 
அதே சமயத்தில் சுவாசித்தது வேதனையான உமிழ் நீராக மாறி சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்துவிடுகிறது. அதனால் சிறு குடல் பெரும் குடலை உருவாக்கிய அணுக்கள் மயக்கமடைகிறது.
 
சிறு குடல் பெரும் குடல் பலவீனம் அடைந்தால் நாம் உணவாக உட்கொண்ட இந்த உணவுகள் நஞ்சாக மாறி நஞ்சின் தன்மை கொண்ட இரத்தமாக மாற்றுகின்றது.
 
அப்படி நஞ்சாக மாறும் போது நம் உடல் உறுப்புகளுக்குள்ளும் இரத்தத்தின் வழி விஷத் தன்மை பரவி நம் உடலில் பல விதமான நோய்கள் வரக் காரணமாகின்றது.
 
இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடுவதற்கு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நம் உடலில் உள்ள அணுக்களை உற்சாகப்படுத்த துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படி செய்கின்றோம்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறவேண்டும் என்ற ஆசையுடன் நாம் அதே கண்கள் வழியாக ஏங்கிக் கவரப்படும் போது
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம் கண் வழி உள்ள நரம்பு மண்டலம் வழியாக
2.உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் பாய்ந்து உற்சாகமூட்டும் வீரியத் தன்மையாக அடைகின்றது.
3.அதே சமயத்தில் சுவாசித்த உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக இயங்கி
4.அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி நம் சிறு குடல் பெரும் குடல்களில் கலந்து உற்சாகம் அடையச் செய்கிறது
5.சாப்பிட்ட ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது.
 
பின் அந்தச் சக்திகள் அனைத்தும் நம் உடல்களில் உள்ள உறுப்புகள் அனைத்திற்குமே கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் கணையங்கள் கிட்னி இருதயம் இந்த நல்ல இரத்தங்கள் செல்லப்படும் அவைகளும் உற்சாகம் அடைந்து தீமையை நீக்கும் வலிமையான உணர்வைப் பெறுகின்றது.
 
இதைப் போன்று உடல் உறுப்புகளுக்குச் சக்தியைக் கூட்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் அடிக்கடி பெற்று தீமைகளைத் துடைத்துக் கொண்டே வந்தால்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி உடலிலே அதிகமாகப் பெருகி
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலே என்றுமே அழியாத வாழ்க்கை நாம் வாழ முடியும்…!