ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 6, 2013

தியானத்தைச் சீராகக் கடைப்பிடிக்கும் அன்பர்களுக்கு யாம் கொடுக்கும் அலைத் தொடர்பு - ஞானகுரு

அநேகமாக, இந்தத் தியானத்திலே கலந்து கொண்டவர்கள் அனைவருக்குமே, இதில் யாரொருவர் நம்முடன் தொடர்பு கொண்டார்களோ, அவர்களுக்கெல்லாம் காலை 4.30 மணியிலிருந்து 5.30க்குள் துருவ நட்சத்திரத்திலிருந்து, துருவ மகரிஷி பெற்ற ஆற்றல்களைக் கிடைக்கச் செய்வதற்காக, யாம் அந்த நேரத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

அந்த நேரத்தில் சிலருக்கு உணர்ச்சி வசப்படக்கூடிய நிலையில் அந்த முழிப்பும் வரும். புதுப் புது உணர்வுகள் தோன்றும். தூக்கம் விழிப்பு ஆகும்.

யாம் உபதேச வாயிலாக உபதேசித்த வழி கொண்டு, அந்த முறைப்படி எண்ணி தியானமிருப்பவர்களுக்கும், அந்த நல்ல வாக்குகளைப் பதிவாக்கி, அந்த நினைவுடன் இருப்பவர்களுக்கும் இது கிடைக்கும்.

பல ஆயிரம் மைல்களுக்கு அந்தப் பக்கம் இன்றைக்கு ராக்கெட்டில் பறக்கச் செய்து,
அதில் ஒரு சிலிகனைப் பதிவு செய்து,
அதே உணர்வு கொண்டு கம்ப்யூட்டரின் துணை கொண்டு,
ஆன்டெனா பவர் கொண்டு,
அங்கே இருக்கக்கூடிய அலைகளை இங்கிருந்தே இயக்குகின்றான்,
அங்கிருந்தும் இங்கே இயக்குகின்றான், விஞ்ஞானி.

அதைப் போன்றுதான், நீங்கள் எந்த நல்லதைத் தேடி அந்த மெய்ஞானிகளின் ஆற்றல்மிக்க நிலைகளைப் பெறவேண்டும் என்று எண்ணி இப்பொழுது ஏங்குகின்றீர்களோ, அந்த ஆற்றலை யாம் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

பின், துருவ நட்சத்திரத்தின் ஆற்றலையும், துருவ மகரிஷியினுடைய உணர்வலைகளையும் எடுத்து, அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக வேண்டி யாம் தவமிருக்கின்றோம்.

ஆகவே, துருவ நட்சத்திரத்திலிருந்தும், சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும்
அடிக்கடி அந்த ஆற்றல்களை நீங்கள் எடுத்து,
அதைச் சுவாசித்துப் பழக வேண்டும்