ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 20, 2013

விஞ்ஞானத்தால் வரும் உலக மாற்றத்திலிருந்து தப்பவேண்டும்

1. இன்று விஞ்ஞானப் பாதகங்களை அவர்கள் வெளிவிடுவதே இல்லை
இன்று அணு உலைகளைக் கொண்டு நாம் ஆற்றல்மிக்க மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டாலும், அதனால் வரக்கூடிய தீயவிளைவுகள் காற்றுக்குள் நச்சுத்தன்மைகளாக மாறி,
அதனின் கழிவின் சக்திகள் அனைத்துமே பூமிக்குள் ஊடுருவி,
பூமிக்குள் சிறுகச் சிறுகச் சேர்ந்து,
பூமிக்குள் நிலநடுக்கங்கள் ஏற்படும் நிலை இருக்கின்றது.

அணுகுண்டை வெடித்தவுடன், இந்தக் காற்றுக்குள் இருக்கும் அணுவிற்குள் மோதியபின், ஒவ்வொரு பொருளுக்குள் மோதியபின், அந்தக் கதிரியக்கச் சக்திகள் புயலாக காற்றாக மாற்றி அதனுடைய விஷத்தன்மைகளைப் பரவச் செய்கின்றது.

ஆக, அந்த அணுக்களின் தன்மை பூமிக்குள் ஈர்க்கப்பட்டு அது சேர்க்கப்படும் பொழுது, அது குவிக்கும் இடங்களிலே பாறைகள் உருகி கீழே இறங்குவதும், அதனால் அதிர்வுகள் வருவதும் விஞ்ஞான அறிவால் காணமுடியாது.

இருந்தாலும், தனக்குப் பாதகம் ஏற்படும் என்று அவன் காட்டுவதில்லை. ஏதோ, நிலநடுக்கம் என்றுதான் நம்மிடம்  சொல்லிவிட்டுச் செல்கின்றார்களே தவிர வேறு எதுவும் இல்லை.

இன்று இராக்கெட்டில் இருப்பவனுக்கு அவனுடைய உடல் நிலையை அறிந்து அவனுக்கு நல்லது செய்கின்றான். அந்த இராக்கெட் திசை மாறிவிட்டால் அதற்கும் பூமிக்கும் தொடர்பு அற்றுவிட்டால், இராக்கெட் காணாமல் போய்விட்டது என்பான். இராக்கெட் காணாமல் போய்விட்டால் இவன் என்ன செய்வான்?

இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தொடர்பு கொண்டு வந்தாலும், அதனின் ஜீவன் துடிக்கும் என்று இங்கிருந்தே அவனைக் கொன்றுவிடுவான்.

ஆக, இராக்கெட் திசை மாறிவிட்டால், அதற்கென்ற நச்சுத்தன்மை மாறுபட்டவுடனே, விஷத்தைக் கொடுத்து அவன் தொடரக்கூடாது என்று, அறிவு கொண்ட மனிதனையும் மாய்த்துவிடுகின்றான். இதெல்லாம் விஞ்ஞான அறிவு.
2. கம்ப்யூட்டரை இயக்கும் காந்த அலைகள் திசை மாறினால், பாதுகாப்பற்ற நிலை உருவாகும்
இன்று இதைக் காட்டிலும் சூப்பர் கம்ப்யூட்டர் வந்துவிட்டது. சூப்பர் என்றால், மனிதனுக்குள் பல கோடி உணர்வின் எண்ணங்களை இயக்கக்கூடிய நினைவலைகளுடைய தன்மைகள், அது விளைந்ததுதான் சிலிகன்.

அந்த சிலிகன் என்ற நிலைகள் கொண்டு, விஞ்ஞான அறிவு கொண்டு இவன் மூச்சு விட்டாலும், இயந்திரத்தின் துணை கொள்ளும் பொழுது, மேக்னட்
இவனுடைய உணர்வுக்குள் பதிவு செய்து
சிலிகன் அலைகளின் தொடரில் வருவது
விஞ்ஞானிகளுக்குத் தெரியாது.
ஏதோ புதிதாகக் கண்டுபிடித்ததாகச் சொல்வார்கள்.
புதிதாகக் கண்டுபிடித்தது அல்ல. ஆக, மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வின் ஆற்றல்மிக்க செயல்கள் தான்.

இதைப் போன்று, இன்று பல அணு ஆயுதங்களையும், மற்ற நிலைகளையும் இவன் வைத்திருந்தாலும், பாதுகாப்பிற்காக கம்ப்யூட்டரை வைத்திருக்கின்றார்கள்.

ஆனால், காந்த அலைகளைக் கவர்ந்து, நுகர்ந்து அங்கிருக்கக்கூடிய நிலைகளை இழுக்கப்படும் பொழுது, ஒரு நொடிக்குள் தவறு நடந்து விட்டால் எப்பொழுது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.

இதனால், பல நிலநடுக்கங்கள் வரக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.
கடலுக்குள் பரவும் விஷக்கதிரியக்கங்களின் தன்மைகள்.
கடலுக்குள் ஊடுருவி, கடலிலே பெரும் மலைகள் தோன்றி,
கடலிலே பல அலைகள் பெருகி (சுனாமி),
பல நகரங்கள் சீர்கெடும் நிலைகள் வந்து கொண்டிருக்கின்றது.
பேப்பரில் பார்க்கலாம்.
விஞ்ஞானத்தின் பிடியிலே தான் சிக்கியிருக்கின்றோம்.
3.. விஞ்ஞானத்தை வெல்லும் ஆற்றல் பெற்று, நம்மைக் காக்கவேண்டும்
இதைப் போன்று காற்றுக்குள் நச்சுத்தன்மைகள் அதிகம் படர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விஞ்ஞானத்தை வெல்லும் தன்மைகளை நாம் பெறவேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்களுக்குள் ஆற்றலைச் செருகுகின்றோம். எனவே, நீங்கள் ஆற்றல்மிக்கவராக வரவேண்டும்.
விஞ்ஞான அறிவால் ஏற்படக்கூடிய விஷத்தின் தன்மை
உங்கள் மூச்சின் நிலைகளில்
அது ஆவியாக மாற்றி,
ஆவியின் தன்மை மேகமாக மாறி நல்நீராகக் கொட்டி
வீடும், நாடும், உலகமும் நலம் பெறும் தன்மை பெறவேண்டும்.

ஆக, ஆதிசக்தியின் நிலையில்
அணுக்கள் ஒன்றுக்குள் ஒன்று மோதி,
மோதிய நிலைகள் கொண்டு வெப்பமாகி,
விஷத்தின் தன்மை அதற்குள் ஆவியாக மாறி,
மேகங்கள் நீராக மாறி,
நீரின் தன்மைக்குள் அது ஊடுருவிச் சென்றாலும்,
அணுக்களை தனக்குள் அது கவர்ந்து கொண்டாலும்,
அதற்குள் அடக்கி தனக்குள் எடுத்துக் கொண்ட
வெப்பத்தின் தன்மை தொடரச் செய்து,
விஷத்தின் தன்மையை அடக்கிக் கோள்களாக மாறி,
அது எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வின் தன்மைதான்
சூரியனாக மாறியது.

சூரியன் எவ்வாறு மற்றதை அடக்கி தனக்குள் ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ, இதைப் போன்று எத்தகையை விஷத்தன்மைகள் வந்தாலும், மனிதன் அதை முறியடித்து, தன் உணர்வை ஒளியாக மாற்றி, விண்ணிலே என்றும் நிலையான பெருவீடான பெருநிலைகள் பெறமுடியும்.

நாம் சாதாரண மக்கள் என்று எண்ண வேண்டாம். நமக்குள் உயிராக நின்று இயக்கும் நிலைகள் கொண்டு, எந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கின்றோமோ, அந்த உணர்வின் ஈர்ப்பலைகள் நமக்குள் சென்று, நம் உயிரிலே அது பிரம்மமாக நின்று நமக்குள் ஒவ்வொன்றையும் சிருஷ்டித்துவிடும்.

ஆக, உங்களுக்குள் சிருஷ்டிக்கும் தன்மையாக அந்த மெய்ஞானியின் ஒளிகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். இந்தப் பதிவுகள் உங்களுக்குள் இயக்கப்பட்டு, அந்த உணர்வின் எண்ணத் தொடர் கொண்டு, 
துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகள்
உங்கள் உயிருடன் மோதி,
உங்களுக்குள் அது சேரும் பொழுது
துன்பத்தை நீக்கும் வலு நீங்கள் பெறுகின்றீர்கள்.
உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

இந்த உடலுக்குள் விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட சில நச்சுத்தன்மையிலிருந்து நம்மை மீட்டுக்கொள்ள வேண்டும். பிறரையும் காக்கும் சக்தி பெறவேண்டும். அதற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.