ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 15, 2013

நாம் வெளிவிடும் மூச்சின் ஆற்றல்

1. எமது சொல் உங்களுக்கு நல்லதாகின்றது
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் கவரும் பொழுது, உங்கள் உயிரான உணர்வலைக்குள் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, நல்ல உணர்வின் தன்மை உங்கள் உடல் முழுவதற்கும் பாய்கின்றது.

அப்பொழுது, சாதாரண மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட சுவாசத்தினால், கை கால் குடைச்சல், மேல் வலி, தலைவலி மன வேதனை, மனக் குடைச்சல் இதைப் போன்ற உணர்வுகளை நீக்குகின்றது.

அது நீங்கியபின், உங்களுக்குள் மகிழ்ச்சியைத் தூண்டிவிட்டு நீங்கள் இடும் மூச்சலைகள் இந்தக் காற்றிலே மிதக்கப்படும் பொழுது, அதிலிருந்து யாமும் அந்தச் சக்தியைப் பெற முடிகின்றது.

ஏனென்றால், சாமியைப் பார்த்தேன் எனக்கு நல்லதானது, அதிலிருந்து எனக்கு நல்ல நிலை ஏற்பட்டது என்று நீங்கள் மகிழ்ச்சியாகும் பொழுது, துன்பத்திலிருந்து விடுபட்டு, இன்பமான நிலைகளில் மகிழ்ந்திருக்கின்றேன் என்று, நீங்கள் அந்த மகிழ்ச்சியான எண்ண அலைகளை வெளிப்படுத்துகின்றீர்கள்.

நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள் என்று எண்ணி ஏங்கும் பொழுது, இதைப் போன்று ஆயிரக்கணக்கான பேர் விட்ட மகிழ்ச்சியான மூச்சின் அலைகளை யாமும் சுவாசிக்கின்றோம்.

நான் ஒருவன் இட்டதை நீங்கள் ஆயிரம் பேர் சுவாசித்தாலும்,
அந்த உணர்வின் தன்மை,
அந்த ஆயிரம் பேருக்குண்டான
அந்த வியாதிகளுடனுடைய தன்மைகள் நீங்கி,
பின் மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
2. உங்களுடைய மூச்சலைகளின் ஆற்றல் மற்றவர்களுக்கு நல்லதாகும்
அந்த மகிழ்ச்சியான மூச்சு வெளிப்படும் பொழுது, நம்மைப் பார்ப்போருடைய நிலைகளில் நிம்மதியாகின்றது. அவர்களுடைய நோய்களும் நீங்குகின்றது.

அவர்கள் விடும் அந்த மகிழ்ச்சியான எண்ணங்களை யாம் சுவாசிக்க நேருகின்றது. அப்பொழுது, இந்த அருள்ஞானத்தை யாம் பெறுவதற்கு முன்பு, இளமையிலே எத்தனையோ தீய உணர்வுகள் எமது உடலில் பல அணுக்களுக்குள் கலந்திருக்கும்.

நம் குருநாதர் காட்டிய வழி கொண்டு பல ஆற்றல்மிக்க நிலைகள்,  தெரிந்தோ தெரியாமலோ யாம் செய்த நிலைகளில் வாழ்க்கையில் ஏற்பட்ட, தீவினையினுடைய நிலைகளை அது குறைக்கின்றது.

அதைப் போன்று, அந்த மகிழ்ச்சியின் சக்தி உங்களால் இது பட்டாலும், மீண்டும் இது வலு கொண்ட நிலைகள் கொண்டு,
ஒருவருக்கு இன்னல் வரப்படும் பொழுது,
அவருக்கு நல்லதாக வேண்டும் என்று எண்ணும் பொழுது,
மற்றொருவருக்கும் நல்லதாகின்றது.

ஏனென்றால், உங்கள் சக்திதான் அங்கே செயல்படுகின்றது. குருநாதர் அருள் ஒளிகள் எல்லோருக்கும் பதிகின்றது. நமக்குள் அது மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கின்றது.

இன்று சூரியன் எவ்வாறு மற்ற கோள்களின் தன்மை கொண்டு, ஒவ்வொரு கோளும் ஆற்றல்மிக்க நிலைகளில் இருந்தாலும்,
சூரியன் அது வெளிப்படுத்தும் ஆற்றல்மிக்க உணர்வுகளை
கோள்கள் எடுத்து,
கோள்களிலிருந்து வெளிப்படுவதை
சூரியன் தனக்குள் எடுத்து ஒளியாக மாற்றுவது போன்று,
நம் குருநாதர் அருள் வழி கொண்டு, நாம் அனைவருமே இதை நாம் செயல்படுத்தும் பொழுது, அது நன்மை பயக்கின்றது.
3. உங்களுடைய சொல் எல்லோரையும் காக்கும்
ஆகவே நாம் அனைவருமே, யார் துன்பப்பட்டாலும், அவர்கள் எந்த நோய்வாய்ப்பட்டாலும், ஏன் இப்படி இருக்கின்றது? என்ற கஷ்டமான எண்ணங்களை நாம் எண்ணிவிடக் கூடாது.

உடனே ஆத்ம சுத்தி செய்து, ஆத்ம சுத்தி செய்த அந்த வலிமை கொண்டு, னி உனக்கு வியாதியில்லை, நீ நலமடைவாய் என்று உங்கள் வாக்கை நீங்கள் சொல்ல வேண்டும்.

அப்படிச் சொல்லும் பொழுது, அந்த வாக்கின் வலிமை கொண்டு உடலிலிருக்கக்கூடிய அது எத்தகைய நோய்கள் இருந்தாலும், இது விலகக் காரணமாகின்றது.

ஏனென்றால், உங்கள் எண்ணத்திற்குள் நல்ல எண்ணம் பெறவேண்டுமென்று சதா உங்களை யாம் பூஜிக்கும் பொழுது உங்கள் உயிரான ஈர்ப்பு சக்திக்குள் அது வளர்ச்சி பெறுகின்றது.

அதன் வழியில் யாம் சொல்லும் இந்த முறைப்படி, நம்மைச் சார்ந்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் நல்லது நடக்கும் என்று எண்ணத்தை நீங்கள் சொல்லும் பொழுது, இந்த எண்ணத்தாலே நிவர்த்தியாகின்றது.

தைத் தொடர்ந்து நீங்கள் எடுக்கும் பொழுது, நீங்கள் சுவாசிக்கும் உணர்வும் உங்களுக்கு நன்மையைத் தருகின்றது.
உங்கள் மூச்சின் உணர்வு ஒலிகள்
உங்களைச் சார்ந்தோர் நண்பர்களுடைய நிலைகளில்
பிணியைப் போக்கவும் உதவுகின்றது.