
கார்த்திகை மாதத்தின் சிறப்பு
ஆகவே கார்த்திகை நட்சத்திரம், நமது பிரபஞ்சத்திற்கு ஒரு முக்கியமான நட்சத்திரம்.
2.அந்தக் குணத்தின் சிறப்பு மிக்க நிலையை வெளிப்படுத்தும்,
கார்த்திகை மாதத்தில் நமது வீட்டு வாசல்படிகளில் விளக்குகளை ஏற்றி வைக்கிறோமென்றால்… அறிவின் ஒளியின் சுடராக நாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துவதற்காக ஞானிகளால் உருவாக்கப்பட்ட நிலைதான் அது.
அவசரப்பட்டு ஒரு தொழில் செய்ய வேண்டும் பொருள் சேர்க்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். அந்த ஆசை நமக்குள் வளர்ந்து விட்டால் “அதையே முழுமூச்சாகச் செயல்படுத்தத் தொடங்குகின்றோம்…”
உதாரணமாக நாம் ஒருவரைச் சந்தித்து வியாபாரத்தைப் பற்றிப் பேசப் போகிறோம் அல்லது அவர் மூலம் வியாபாரம் சம்பந்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்று செல்லும் பொழுது “அவருடைய சூழ்நிலை எவ்வாறு…?” என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தீபத்தைப் பொருத்தியபின் அதனின் வெளிச்சத்தில் நாம் எப்படிப் பொருள்களைக் காண்கின்றோமோ அதைப் போன்று
1.நாம் சிந்திக்கும் அறிவினைப் பயன்படுத்தி சிறிது நேரம் சிந்தித்து அவருடைய செயலாக்கங்களை அறிந்து கொண்டபின்
ஆனால் நாம் நம்முடைய காரியத்திற்காக அவரைப் பார்க்கப் போய் அவருடைய சூழ்நிலை தெரியாது அவசரத்தில் அவரிடம் போய்ப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தால்… அவர் தன் சலிப்பால் சஞ்சலத்தால் நமக்குச் சீரான பதிலைக் கொடுக்க மாட்டார்.
1.அவர் கர்வம் உள்ளவராக இருக்கிறார்
2.நாம் கேட்டால் பதில் சொல்லமாட்டேன் என்கிறார் என்ற உணர்வுகள் வந்து
3.நம்முடைய அவசரத்திற்கு அவரைக் குற்றவாளியாக்கும் நினைவினை ஊட்டுகின்றது.
எப்படி நாம் தீபத்தை ஏற்றி அதனின் வெளிச்சத்தைக் கொண்டு மற்ற பொருள்களைத் தெரிந்து கொள்கின்றோமோ அதைப் போன்றுதான்
1.கார்த்திகை நட்சத்திரத்தின் ஒளியலைகள் ஒன்றோடொன்று மோதும் பொழுது
2.அதன் அறிவின் தன்மை அறிவிக்கும் சக்தி பெற்றது.
நாம் எப்படியும் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடித்து விடவேண்டும் என்ற அவசர உணர்வுடன் ஒருவரிடம் தொடர்பு கொள்ளப்படும் பொழுது அவருடைய சூழ்நிலைக்கொப்பதான் நமக்கு பதில் வரும். நமது காரியமும் சித்தியாகாது.
2.அதன்பின் அவரைச் சந்திக்கும் பொழுது சூழ்நிலை சமமாக இருந்தாலும்
3.அவரை உற்றுப் பார்த்தாலே பழைய நினைவுகள் தோன்றி வெறுப்பின் உணர்வைத் தோற்றுவிக்கும்.
4.அப்படிப்பட்ட நிலையில் நம்முடைய சொல் அவரிடம் சீராகப் பேசும் தன்மையை இழந்து விடுகின்றது.
ஒருவர் மேல் உங்களுக்கு வெறுப்போ அல்லது பயமோ ஏற்பட்டு விட்டால் நீங்கள் அவரிடம் ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் கூட உங்களிடத்தில் ஒருவிதமான பதட்ட நிலைகள் ஏற்படும்.
ஆகவே தீபத்தின் வெளிச்சத்தில் நாம் எப்படிப் பொருள்களைக் காண்கின்றோமோ இதைப் போன்று
1.நாம் எந்த ஒரு காரியத்திற்குச் சென்றாலும் முதலில் நமக்குள் “அறிவின் ஒளியைப்” பொருத்திக் கொள்ள வேண்டும்.
2.அந்தச் சுடரின் உணர்வின் அலைகளைப் பரப்ப வேண்டும்.
நமது உணர்வுகள் எப்படி மாறுபடுகிறதென்றால்… நாம் ஒருவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பி வரப்படும் பொழுது நம்முடைய உணர்வுக்குத் தக்க அவருடைய செயலாக்கங்கள் இல்லையென்றால் “அவரைக் குறை கூறும் தன்மைக்கு…” வந்துவிடுகின்றோம்.
2.இந்த உணர்வுகளை நமது முகமும் கண்களும் காட்டிக் கொடுத்துவிடும்.
ஒருவரை நாம் சந்திக்கும் பொழுது இத்தகைய உணர்வுகள் இரண்டையும் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வுகள் கண்களின் ஒளி அலைகளாக… “பார்க்கும் பார்வையும் அந்தப் பார்வைக்கொப்ப உணர்வும் இணைந்து சொற்களாக வெளிவரும்…”
2.அவரிடத்திலும் குறையான உணர்வுகள் ஏற்பட்டு அவர் சொல்லும் சீராக இல்லாமல் தடுமாற்றமான நிலைகளில் பதில் வரும்.
இது தான், கீதையில் “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!” என்ற நிலைகளில் உணர்த்தப்படுகின்றது.
1.ஒளியின் சுடராக இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் அனைவரும் நமக்குள் பெருக்கி
2.நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றுவோம்.
மகரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்போம். மகரிஷிகளின் அருள் சக்தியை, நாம் நமக்குள் ஒளியின் சுடராக ஏற்றி, மகிழ்ந்து வாழ்வோம்.
2.சிந்தித்துச் செயல்படுவோம்
4.நாம் அனைவரும், மகரிஷிகள் சென்ற பாதையில் செல்வோம்.
5.இந்த உலகை “மகரிஷிகளின் உலகமாக” மாற்றுவோம்.