
யாம் பாய்ச்சும் சக்திகள் உங்களைப் பின் தொடர்ந்து… உறுதுணையாக இருந்து… உங்களைக் காக்கும்
1.எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால்
3.நாம் முதலிலே நலமாக இருக்கின்றோம்.
அந்த மெய் ஒளி நமக்குள் வளர்ந்து சொல்லின் தன்மை நமக்கு நல்லதாகின்றது. நம் சொல்லைக் கேட்போர் உள்ளங்களையும் மகிழச் செய்கின்றது.
1.அந்த மகிழ்ச்சியின் தொடர் அவர்கள் பக்குவமாக என்னுடன் இணைந்து செயல்படும் தன்மையும்
2.நாம் போகும் நிலைகளுக்குத் தடையின்றி வழிப்படுத்துவதும்
3.தடையின்றி வியாபாரம் நடப்பதும்… தடையின்றி மகிழ்ச்சி பெறுவதும்… தடையற்ற நிலையாக நமக்குள் உருவாகின்றது.
ஆகையினால் இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
எப்பொழுது துன்பம் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். நாங்கள் நலமும் வளமும் பெற வேண்டும். எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் எங்கள் செயலெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று இப்படி வியாபாரத்திற்கோ மற்ற எங்கே சென்றாலும் இதைச் செயல்படுத்துங்கள்.
1.யாம் கொடுக்கும் இந்த அருள் உணர்வுகள் எப்பொழுதும் உங்களைப் பின் தொடர்ந்து உறுதுணையாக இருந்து உங்களைக் காக்கும்
2.உங்களுக்குள் உயர்வை ஊட்டும்… மெய் ஒளியின் தன்மை எட்டச் செய்யும்.
அதை நீங்கள் பெருக்கிக் கொள்ள முடியும்.
ஆகையினால் நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்து எம்மைப் பார்க்கும் பொழுது… சாமி…! நீங்கள் சொன்னபடி நாங்கள் எடுத்தோம்… நாங்கள் நன்றாக இருக்கின்றோம் எங்கள் உடல் நலமானது என்று நீங்கள் சொல்ல வேண்டும்.
அதிலே தான் எனக்கு மகிழ்ச்சி…!
காரணம் சதா உங்களைத்தான் நான் பிரார்த்தனை செய்கின்றேன். உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி உடலைக் கோவிலாக எண்ணி உங்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைத் தெய்வமாக எண்ணி
2.அந்தக் கோவிலில் இருந்து வரக்கூடிய மூச்சு எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று
3. உங்களைத் தான் - நான் பார்த்த கோவில்களை “ஒவ்வொருத்தராக நான் தியானம் செய்கின்றேன்…”
அதிகாலையில் 4 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களைப் பிரார்த்தனை செய்கின்றேன். அந்த நேரத்தில் உங்களைத் தட்டி எழுப்புவது போல் இருக்கும்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.
அதைப் பெறும் போது உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் தவறு செய்யாமலே உங்களுக்குள் தீங்கு விளைவிக்கும் அந்த நிலைகள் மாறி… அது நல்லது செய்யும் ஆற்றலாக வரும்.
1.அதைப் பெறச் செய்வதற்கு உங்களுக்கு அந்தத் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
2.ஆகையினால் முழு நம்பிக்கையுடன் உங்களை நம்பி நீங்கள் செயல்படுங்கள்.
சாமியை நம்புகின்றீர்கள் சாமியாரை நம்புகின்றீர்கள் ஜோசியத்தை நம்புகிறீர்கள் மந்திரத்தை நம்புகின்றீர்கள் ஆனால் “உங்களிடம் அத்தனை சக்தியும் இருக்கின்றது…”
“உங்களுக்கு முன்னாடியே… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இருக்கின்றது…” அதை எண்ணினால் உங்களுக்குள் அது கூடும். நல்லதைப் பெற முடியும்… மெய் ஒளியைக் காண முடியும்
மனிதன் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த நிலை.
ஆகவே… உங்களை நம்பி இதைச் செயல்படுத்துங்கள்.
1.சாமி சொன்னார் என்று சொல்லி…
2.சாமி சொன்ன சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
சாமி செய்து கொடுப்பார் என்று எண்ண வேண்டியதில்லை.
உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று தான் மகரிஷிகளின் அருளைப் பாய்ச்சுகின்றேன். அது கிடைக்க வேண்டும் என்று உங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றேன்.
சூரியனிலிருந்து காந்த அலைகள் வெளி வருகின்றது. பூமி அதை எடுத்துக் கொண்டால் தான் வளர முடியும். பிரபஞ்சத்தில் காற்றிலே பல சக்திகள் படருகின்றது. போகும் பாதையில் அதை ஈர்த்துக் கொண்டால் தான் பூமி வளர முடியும்.
இதைப் போன்று தான் மெய் ஞானிகள் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
2.அதன் மூலம் நீங்கள் மகிழ்ந்து வாழும் சக்தி பெற முடியும்
3.காற்றிலிருந்து அந்த மகரிஷிலளின் அருள் சக்தியை நீங்கள் கவர முடியும்.