அகண்ட அண்டத்தின் ஒளிர் ஞான தத்துவ அடக்கமே... “பேரருள் பேரொளி”
(1) முடிவே இல்லாதது...!
1.ஒன்றுடன் ஒன்று மோதி 2.ஒன்றுடன் ஒன்று கலவையாகி உருவாகி
உருமாற்றமாகிக் கடைசியில் ஆவியாகி 3.மீண்டும் திடமாகி
மீண்டும் அதே சுழற்சி 1,2,3.. 1,2,3
(2) என்றுமே அழிவில்லாதது
1.விண்ணிலே தோன்றும் உயிர்
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிய மகரிஷிகள்
(3) நிலையானது...! (4) சத்தியமானது...!
ஆதிசக்தியின் இயக்கம்…! வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றும் சேர்ந்து எதைக் கவர்கிறதோ அதனின் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே உள்ளது.
5) ஒளிர் ஞான தத்துவ அடக்கமே...! பேரருள் என்பது.
ஆதிசக்தியின் இயக்கத்தின் நோக்கமே அனைத்தையும் ஒளியாக ஒளிரச் செய்வது… ஒளியின் வளர்ப்பாக முதிர்வடையச் செய்வது தான். அது தான் பேரருள்.
அப்படிப் பேரருளாக முதிர்ந்து ஒளியாக ஒளிரச் செய்து ஒளியின் வளர்ப்பை வளர்க்கும் போது பேரொளியாகிறது. அவர்கள் தான் மகரிஷிகள். துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் போன்றவைகள்.
மேலே சொன்ன ஐந்தையும் உள்ளடக்கிய தத்துவம்
ஆதிசக்தியின் படைப்பின் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக ஆன பின் ஞானத்தின் வழித்தொடரைத் தனக்குள் விளைய வைத்து உடலை விட்டு அகன்றால்
1.பேரண்டத்தில் எத்தனை தீமையின் நிலைகள் நஞ்சாக இருப்பினும் தன்னை அணுகாது
2.அதை அடக்கிடும் நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக மாற்றிடும் நிலைகள் வருகின்றது.
அப்படி ஆனவர்கள்தான், இன்று எதனையும் பிளந்திடும் நிலைகள் பெற்றவர்கள், சப்தரிஷிகள்.
1.ஆக ஒவ்வொரு பூமியின் தொடர் கொண்டும் வாழுகின்றார்கள்
2.அந்தந்த பிரபஞ்சம் இறந்தாலும், இவர்கள் தனி மண்டலமாக இயக்கப்பட்டு
3.தீமையற்ற உலகை அவர்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டிருப்பார்கள்.
ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஏற்பட்ட இந்த மண்டலங்கள் வேறு வேறு விதமாக இருப்பினும்
1.உடல் பெற்ற உணர்வின் நிலைகளிலிருந்து
2.தீமைகளைப் பிளந்த உணர்வுகள் ஒருக்கிணைந்து
3.பெரும் மண்டலமாகத் திகழ்கின்றார்கள்.
இந்த அகண்ட பேரண்டத்தில், இப்பேர்ப்பட்ட மகரிஷிகளும் உண்டு. ஆக, மனிதனில் தெளிந்த நிலைகள் கொண்டு அது பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
1.மனிதர்களாகிய நாம் அனைவரும்
2.அதிலே இணைந்தால்தான் நல்லது.
முழுமையான விரிவாக்கம்
பேரண்டம், முதலிலே இருண்ட நிலைகளில் இருந்தது,
1.ஒன்றுடன் ஒன்று மோதி சுழற்சி வேகம் கொண்டு சூரியன்களாக விளைந்து நட்சத்திரங்களாக விளைந்து
2.அதிலே தோன்றிய கோள்களாக விளைந்து, உயிரணுக்களாக விளைந்தது.
உயிரணுக்கள் அதனின் நிலைகள் நுகர்ந்து நுகர்ந்து
1.உணர்வின் தன்மை உடல் பெற்று
2.எண்ணத்தின் நிலைகள் கொண்டு இயங்கத் தொடங்கும் நிலைகள் கொண்டு
3.தன்னைக் காத்திடும் காத்திடும் நிலைகள் கொண்டு வந்தது.
இப்படி இந்த உயிரின் நிலைகள் உடல்களைக் காத்திடும் நிலையாக வந்தாலும்,
1.இந்த உயிருடன் ஒன்றி
2.ஒளியின் சரீரமாகத் தன்னைக் காத்திடும் நிலைகளில் விளைந்தவர்கள் தான் மகரிஷிகள்.
ஆகவே அது அனைத்தும் நாம் பெற முடியும்.
அதைப் பெறச் செய்வதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி விண்ணின் ஆற்றலைக் காண அதைப் பெறும் பாக்கியத்தை இன்று நாம் அனைவரும் பெற்றுள்ளோம்.
ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம்.