
கண்கள் தோன்றிய விதம்
உடல் என்பது திரேதா தான். திரேதா யுகத்தில் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன்
பிறந்தான்.
1.வாசுதேவன்
- சுவாசித்ததை உருவாக்கக் கூடியவன்.
2.தேவகி
- பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள்.
சந்தர்ப்பத்தில் தீமையான உணர்வு மோதினால் அதிர்ச்சி என்ற நிலை
வருகின்றது. அதிர்ச்சி என்ற நிலை வரும் பொழுது சிந்திக்கும்
தன்மை இழக்கப்படுகின்றது.
எந்தச்
செடியின் சத்தை அது (கண்ணில்லாத புழு)
எடுத்து வளர்த்ததோ அதன் உணர்வின் தன்மை
இழக்கப்படுகின்றது. விஷமான செடியின்
சத்தை நுகர்ந்த பின்
சிந்திக்கும் தன்மை இழக்கின்றது.
ஆனால் மோதிய
பின் அதன் வழியாகத் தெரியப்படுத்துகின்றது. எதை…?
1.”அறிய
வேண்டும் என்ற உணர்வுகள்…”
2.துவாரகா
இந்த உடலுக்குள் அதைச் சேர்த்து இணைக்கப்படும் பொழுது தான்
3.ஒளிக்கற்றைகள் சிறுகச் சிறுக மின் அணுவாக மாறி… அணுக்களாகி அது அறியச் செய்யக்கூடிய கற்களாக மாறுகின்றது.
4.உறையும்
தன்மை வரும் பொழுது கருவிழி என்ற உணர்வுகள் அணுத் தன்மை அடைந்து
5.நரம்பு
மண்டலங்கள் இழுப்பதை ஒளிப் படலமாகப் பார்க்கும் தன்மை வருகின்றது.
இந்த ஒளிப் பிளம்புகள்
கரு விழியிலே மறைந்து விட்டால்… ஒளிப்
படலங்கள் அதாவது கண் பார்வை தெரியாது.
கண்ணில்லாத புழு “பார்க்க
வேண்டும்…” என்று தான் எண்ணிய உணர்வு கொண்டு கற்களாக
கருவிழியாக கண்கள் எப்படி உருவானது…?
1.சுவாசிப்பதை
உருவாக்கக் கூடியவன் உயிர் அதனால் தான் வாசுதேவன்.
2.தேவகி…
பார்க்க வேண்டும் என்ற தேவைக்கு வரும் போது
அது (கண்களாக) வருகின்றது.
இந்த மனித
உடலுக்குள் நாளை என்ன செய்வோம் என்று கற்பனை செய்கின்றோம்…?
அதன் உணர்வின் தன்மை வடிவமைக்கின்றோம். வடிவமைத்தது தனக்குள் பதிவாகின்றது.
துவாரகா… புறத்தால் கண்களானாலும்
1.அகத்திற்குள்
முதலிலே அதைப் படமாக்குகிறது.
2.படமாக்கிய பின் புறத்திலே எழுதுகின்றோம். உடலுக்குள் பதிவாகவில்லை என்றால்
எழுதவே முடியாது.
உணர்வின்
தன்மை பதிவாகும் பொழுது பதிவின் நினைவுகளை நினைவாக்குகின்றோம்.
துவாரகா இந்த உடலுக்குள் சிந்தனைகள் எடுத்துத்
தான் மனிதன் தன் செயல்களைச் செயல்படுத்த வேண்டும்.
இந்த வாழ்க்கையில்
நாம் எப்படி இயங்குகின்றோம்…? என்பதைத் தெரிந்து
கொள்வதற்கு தான் இதையெல்லாம் உங்களுக்கு உணர்த்துவது.
பதிவைத் தான் மீண்டும் எழுத்தில் கொண்டு வருகின்றோம். புறத்தால் நாம் எழுதினாலும் அதில் குறைகள் வந்தால்
திருத்துகின்றோம்.
இதைப் போல்
தான் துவாரகா யுகத்தில் தீமைகளிலிருந்து மீண்டிடும் சக்தியாகத் தன்னுடைய நிலைகள்
வருகிறது... கண்களாகின்றது. (சிறைச்சாலைக்குள் இருக்கும் தன் அன்னை தந்தையரைத்
தவறிலிருந்து மீட்கக் கண்கள் வருகிறது)
ஒரு படத்தை
(சித்திரம்) பார்க்கின்றோம்... பிழை என்ற நிலை வருகிறது. ஒருவன் தவறு செய்கிறான்
என்ற நிலைகளில் கண்கள் அதைப் பார்க்கின்றது. ஆனால் அவனின் அந்தத் தவறுகள் நமக்குள்
பதிவாகக் கூடாது.
தவறு செய்பவன்
உடல் கிரேதா. அவன் செய்யும் தவறை நாம் நுகரும் போது அந்தத் தீமை செய்யும் உணர்வு
திரேதா யுகத்தில் நம் உடலுக்குள் செல்கிறது.
அப்போது
அந்தந்த உணர்வின் உணர்ச்சிக்கொப்ப வைரஸ் (கிருமி) என்று சொல்கிறோமே அத்தகைய
அணுக்கள் உருவாகின்றது.
அந்த
அணுக்களின் உணர்வுக்கொப்ப அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் வருகிறது. அதன் மலத்தின்
தன்மை கொண்டு இரத்தத்தில் வருகின்றது. தீமையின் விளைவாக நோயாகிறது.
ஆனால் அதை
மாற்றி அமைக்கும் சக்தியாக அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து நம் இரத்தத்திலே
கலக்கப்படும் போது நம் உடலில் உள்ள உறுப்புகளை அது சீராக்குகிறது. அப்போது அந்த
ஞானிகளின் உணர்ச்சியின் எண்ணங்கள் நமக்குள் வரும்.
1.தீமை
செய்வோன் அவன் திருந்தி வாழ வேண்டும்
2.தெளிந்து
வாழ வேண்டும்
3.தெளிவான
வாழ்க்கை வாழ வேண்டும்
4.அமைதி பெற
வேண்டும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணி
5.இதன்
உணர்வைக் கொண்டு நாம் தெளிவாக்க வேண்டும்.
இதை நீங்கள்
உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
ஆகவே கிரேதா
திரேதா துவாரகா என்ற நிலையில் நம் உடலுக்குள் நடக்கும் ஒவ்வொரு நிலையையும்
வேதங்களில் தெளிவாகக் கூறப்படுகின்றது. அதை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.