ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 8, 2024

இன்று நாம் சிந்தனை குலைந்து (TENSION… STRESS...) உணர்ச்சிவசப்படுவதற்கு முக்கிய காரணம்

இன்று நாம் சிந்தனை குலைந்து (TENSION… STRESS...) உணர்ச்சிவசப்படுவதற்கு முக்கிய காரணம்

 

உதாரணமாக மிளகாய் காரமாக இருக்கின்றது. அந்தக் காரமான மிளகாயிலும் புழு உருவாகிறது.

அதைக் காட்டிலும் கடுமையான பூச்சி மருந்துகளை அடித்து அந்தப் புழுவைக் கொல்லும் பொழுது புழு சாகின்றது.
1.புழுவைக் கொன்ற அந்த விஷம் ஆவியாக மாறுகின்றது.
2.அந்த மிளகாய்ச் செடியில் புழுவைத் தாக்கிய இந்த விஷம் ஊடுருவுகின்றது.

அந்த மிளகாய்ச் செடியில் விளைந்த மிளகாயை நாம் உணவுப் பதார்த்தங்களில் சேர்த்தால் விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகி நமக்குள் “நோயாகவும்…” மாறுகின்றது.

மனிதன் விஞ்ஞானத்தால் பல விஷப் பூச்சிகளைக் கொன்றாலும் இது இந்த நிலை ஆகின்றது.

முந்தைய காலங்களில் இத்தகைய விஷப் பூச்சிகள் ஏற்பட்டால் அதை இயற்கையான முறைகளைக் கையாண்டு பூச்சிகள் உருவாகாமல் தடுத்தார்கள்.

சாணத்தை எரிக்கும் பொழுது
1.அந்த நெருப்பால் விஷம் ஒடுங்குகின்றது.
2.அப்பொழுது விஷத்தை ஒடுக்கும் உணர்வுகள் அந்தச் சாம்பலில் கலந்துவிடுகின்றது

மாட்டுச் சாணங்களைச் சாம்பலாக உருவாக்கி அந்த சாம்பலைப் பயிர்களில் தூவி விடுவார்கள். சாம்பலைத் தூவினால் பயிர்களின் உருவான இந்தப் பூச்சிகள் இந்த மணத்தைக் கண்டு மடிந்துவிடும்.

ஆனால் அதற்கு எதிர் நிலையாகப் படும் போது அதை உணவாக உட்கொண்டாலும் நல்ல அணுக்களாக மாறுகின்றது.

அந்தச் செடியில் விளைந்து வருவதை உணவாக உட்கொண்டால் நமக்கு நோயில்லாத நிலை வருகின்றது.

தாவர இனக் கழிவுகளைச் சேர்த்துக் குளங்களில் வண்டலாக மாறுகின்றது. இந்த வண்டலையும் சாணத்தையும் கலந்து வரும் போது
1.இந்த மண்களில் விஷப் புழுக்கள் உருவாவதில்லை.
2.சோளமோ மற்ற பருப்போ அதிலே போட்டோம் என்றால் புழுக்கள் அதிகமாக விழுவதில்லை.

புழுக்கள் அதிகமானாலும் சாம்பலையும் வெறும் உப்பையும் கலந்து அதிலே தூவினால் பருப்பு காய்கறிகளில் வரக்கூடிய புழுக்கள் அதனுடைய செயலாக்கங்களை இழந்து விடுகின்றது.

நெற் பயிர்களுக்கும் இதைப் போல சாம்பலும் சாப்பாட்டு உப்பையும் கலந்து தூவினால் அந்த காலங்களில் நெல் பயிரும் நன்றாக இருந்தது.

இப்போது விஞ்ஞான முறைப்படி விஷத்தைத் தூவிப் புழுவைக் கொல்கின்றார்கள்.
1.அதனுடைய முட்டையில் இந்த விஷம் பட்டு
2.இந்த விஷத்தைத் தாங்கக்கூடிய புழுவாக அடுத்து வந்து விடும்.

அடுத்து இதே மருந்தைத் தூவினால் புழு சாவதில்லை.

அதே சமயம் செடிக்குள் விஷத்தன்மை கலந்து கலந்து அதிலே உருவாகும் நெல் மணியிலும் அது கலந்து விடுகின்றது. கத்தரிக்காய் மற்ற எல்லாக் காய்களுக்கும் விஷ மருந்து தூவவில்லை என்றால் அவை விளைவதில்லை.

செடியில் விஷம் கலந்தபின் அதில் விளைந்த காய்கறிகளைச் சாப்பிடும்போது தூவிய விஷம் நம் இரத்த நாளங்களிலே கலந்து நம் உடலிலுள்ள அணுக்களுக்கு ஆகாரமாகச் சேர்கின்றது.

விஷத்தின் தன்மை உணவாக உட்கொள்ளும் போது இந்த மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களும் அதனுடைய செயலாக்கங்களைக் குறைக்கின்றது.

செடியில் தூவிய விஷங்கள் அனைத்தும் ஆவியாக மாறியதைச் சூரியன் எடுத்து வைத்துள்ளது.

ஆக செடியில் விளைந்ததை நாம் உணவாக உட்கொள்ளும் போது நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் அந்த விஷங்கள் கலந்துவிடுகின்றது.

அதன் வளர்ச்சியில் செடிக்குத் தூவிய மருந்தினைச் சூரியன் ஆவியாகக் கவர்ந்து வைத்துள்ள அந்த விஷங்களை நம் உடலில் உள்ள அணுக்கள் அது இழுக்கும். இழுக்கும் பொழுது நம் ஆன்மாவாக மாற்றும்.

நம் ஆன்மாவாக மாற்றும்போது
1.நம் நல்ல குணங்களுடன் சேர்த்து
2.அந்த விஷமான ஆவியைச் சுவாசிக்கும் போது
3.நமக்குள் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
4.மனமும் பலவீனப்படுகின்றது.
5.சொல்லிற்குள் நயம் கெடுகின்றது.

விஷம் கலந்த உணர்வுகளை நாம் கலந்தால் எப்படி “ஆ…” என்று அலறுகின்றோமோ இதைப் போல நாம் நுகர்ந்த உணர்வுகள் சொல்லாக வெளிப்படும் போது ஒருவர் செவிகளில் கேட்டபின் அந்த உணர்வுகளை அவர் நுகரும் போது அவரைச் சிந்திக்கும்படி செய்வதற்கு மாறாக “உணர்ச்சிவசப்படும்படிச் செய்கின்றது”.

1.நன்மையின் தன்மையை நீங்கள் சொன்னாலும்
2.சிந்திக்கும் தன்மைகளுக்கு மாறாக
3.வெறுப்பின் தன்மை உருவாக்கும் நிலையே
4.இந்த விஞ்ஞான அறிவால் வருகின்றது.

பண்டைய காலங்களில் எல்லாம் மனிதனுக்குகந்த நிலைகள் கொண்டு காட்டிற்குள் விளைந்த பல பயிரினங்களைச் சேர்த்துத்தான் நெல்லாகவும் மற்ற மற்ற தானியங்களாகவும் உருவாக்கினார்கள்.

பயிரினங்களில் பூச்சிகள் விழாது தடுப்பதற்காக மற்ற தாவர இனங்களை இது உரங்களாக இட்டார்கள். அப்படி இடப்படும் போது இந்த உரங்கள் தாவர இனச் சத்தைக் கொல்லும் பூச்சிகளை வளரவிடாது தடுக்கின்றது

அந்த மெய்ஞான வழியில் உருவாக்கிய நிலைகள் தான் இவைகள்.

விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அன்று வாழ்ந்த மெய் ஞானிகளின் உணர்வை அறியாது செயல்படும் பொழுது மனிதனின் சிந்தனையைக் குறைக்கும் நிலைக்கும் அழிக்கும் நிலைக்குத்தான் கொண்டு செல்கிறது.

உதாரணமாக வீட்டில் சமையல் செய்யும் போது பெண்கள் மஞ்சளை அதிகமாகப் பயன்படுத்துவார்கள்… பூச்சிக்கொல்லி மருந்து என்று சொல்வார்கள்.

விஷமான அணுக்களைக் கொல்லக் கூடிய சக்தி மஞ்சளுக்கு உண்டு மஞ்சளை உணவுடன் கலந்து சாப்பிடும் பொழுது நம் உடலுக்குள் விஷ அணுக்கள் உருவாகாதபடி அது தடுக்கும்.

இப்பொழுது அதையும் மீறி…
1.வேதனையும் வெறுப்பும் கொண்டு பெண்கள் இருந்தால்
2.மஞ்சள் பவுடரையோ அல்லது மஞ்சளையோ கையில எடுத்து வைத்திருந்தால் போதும்… அதில் வண்டு விழுந்துவிடும்.

கடையில் மஞ்சளை அவர்கள் வைத்திருக்கும் வரை ஒன்றும் செய்யாது. அவர்களும் அதைக் காக்க ஒன்றும் செய்வதில்லை… சுத்தமாகத்தான் இருக்கும்.

ஆனால் வீட்டிலே வாங்கிக் கொண்டு வந்து வைத்து
1.அதில் குறிப்பாக வேதனைப்படுவோர் கையில் எடுத்து உபயோகப்படுத்தினார்கள் என்றால்
2.நிச்சயம் வண்டு விழுகும்… முழுவதும் பவுடராக மாறிவிடும்.

காரணம் மனிதனிலிருந்து விளைந்தது நாம் எண்ணி வெளிப்படுத்திய உணர்வுகள் தன்மைகொண்டு மனிதனிலிருந்து உருவாக்கக்கூடிய உயிரணுக்கள் தான் அவைகள் அதிகமாக…!

வான் வீதியில் இது போன்ற அணுக்கள் அதிகமாக உருவாவதில்லை.

1.மனிதன் ஆனபின் மனித உடலில் இருந்து வெளிப்படக்கூடிய மூச்சு கடும் விஷமான நிலைகளில் இப்போது உருவாகின்றது.
2.டைஃபாய்டு மூளைக் காய்ச்சல் இது எல்லாம் இப்போது வருவதற்குக் காரணம் அதுதான். (சிந்தனை குலைந்து மருந்தாக உணவாகும் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வின் அணுக்கள்)

ஒரு மனிதன் வருகின்றான்… உற்றுப் பார்த்து அவனின் உணர்வை நுகர்கின்றோம் என்றால் நமது உயிரின் நிலைகள் ட்ரான்சாக்ஷ்ன்… ட்ரான்சிஸ்டர் என்றும் சொல்வார்கள்.

அதாவது
1.ரேடியோ எப்படி ஒரு இடத்திலிருந்து அடுத்த நிலைகளுக்கு மாற்றி
2.அந்த ஒலி அலைகளைச் சீராக கவர்ந்து எடுத்துக் கொடுக்கின்றதோ
3.அதைப் போல நமது உயிர் நாம் நுகரும் உணர்வுகளை மாற்றி நம் உடலுக்குள் கொண்டு செல்வதும்
4.அதன் சிந்தனைப்படி நம்மை இயக்குவதும் உண்டு.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் (உருவாகி இருக்கும்) அணுக்கள் அது உணவுக்கு ஏங்கும் பொழுது… அந்த உணர்ச்சிகள் உயிருக்கு… அந்தச் சிறுமூளைக்கு… ட்ரான்சாக்ஷ்ன் ஆக வரும்.

உயிருக்குள் வந்தபின் அந்த உணர்வுகள் கண் காது மூக்கு உடலுக்கு இது ஆணையிடும். ஆணையிடும் பொழுது எந்த அணுக்களின் தன்மை அதிகமாக நேசித்ததோ நமது கண் இந்தப் பூமியில் இருப்பதை இழுக்கும்.

ஏனென்றால்… முதலில் உற்றுப் பார்க்கும் போது கருவிழியால் பதிவானது கருவிழியால் நுகர்ந்து நமக்குள் சேர்ந்தது.

உடலில் அப்படிப் பதிவாகும் இந்த உணர்வுகள் கண்ணுக்குள் வந்த பின் இதே காந்தப் புலனறிவு
1.தன் உணவுக்காகக் காற்றிலிருந்து தனக்குள் எடுத்துச் சுவாசிக்கச் செய்து
2.இரத்த நாளங்களில் கலந்து அதிலிருந்து அது உணவாக எடுத்துக் கொள்ளும்.

இது எல்லாம் ஒரு இயந்திரத்திற்குச் சமமாக நம் உடல் இயங்குகின்றது

ஆனாலும் அந்த அணுக்களின் செயலாக்கங்கள் எவ்வாறோ… அதற்குள் இந்த உயிருடன் கொண்ட உடலில் எத்தனையோ வேதனைப்படுகின்றோம்…!

வயிற்றிலே வலி வந்தால் தாங்க முடிவதில்லை. இது எல்லாம் அந்த உணர்வின் உயிரின் நிலைகள் இயக்கப்படும் பொழுது வயிற்று வலியை உருவாக்கும் அணுக்களை அது ஆகாரமாக எடுத்து அதிகமாகச் சேர்க்கும் பொழுது நுகர்ந்தபின் இந்த உணர்ச்சிகள் நமக்குத் தெரிகின்றது… வேதனைப்படுகின்றோம்.

இது எல்லாம் இயற்கையின் நிகழ்ச்சிகள். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.