ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 13, 2024

தாஜ்மகால்

தாஜ்மகால்

 

மக்களின் வாழ்க்கையில்… ஆவியின் தொடர்பு கொண்ட நிலையில் தான் பலரின் நிலை உள்ளது.

1.மனிதர்களின் எண்ணம் நல்வழியில் சென்று… தெய்வ பக்தி கொண்டு அவர்கள் செல்லும் வழிக்கெல்லாம் தெய்வமாக அருள் புரிகின்றார்கள்…
2.நாம் இப்பொழுது போற்றி வணங்கிடும் சப்தரிஷிகளும் ஞானிகளும் சித்தர்களும்.

நல்வழியை மாற்றி நாம் நம் மனதை அடிமைப்படுத்தி வாழும் வாழ்க்கைக்குச் சென்றால்.. அதைப் போன்றே ஆசை கொண்டு சென்ற பல ஆவிகளின் தொடர்புகளை நம்முள்ளேயே நமக்குத் தெரியாமலேயே ஈர்த்துவிடுகிறோம்.

அப்போது… “அந்த ஆவிகளின் ஏவலுக்குகந்தவனாக நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்கின்றோம்…” என்பதனை உணர்ந்து வாழ்வதற்காகத்தான் இதை உணர்த்தி வருகின்றேன்.

காலம் காலமாக இவ்வாவிகளின் நிலை செயல்பட்டுக் கொண்டேயுள்ளது.

நல்ல நிலையில் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் சூட்சும நிலையிலிருந்து கொண்டே
1.தான் வாழ்ந்த குடும்பத்திற்குத் தன் அங்கத்தின் அங்கமாகத் தான் பெற்று வளர்த்த மக்களின் நன்மைக்காக
2.தெய்வமாக இருந்து பல நல் சக்திகளைத் தான் வாழ்ந்த குடும்பத்திற்குப் பாய்ச்சி
3.தன் இரத்த தொடர்புடைய பிள்ளைகள் வாழும் காலம் வரை அந்தக் குடும்பத்திற்குத் தான் விட்டுச் சென்ற சில குறைகளைப் பூர்த்தி செய்திட
4.பல உதவிகளை அக்குடும்பத்தில் உள்ளோர் அறியாமலேயே அது செயல்படுத்தி வருகின்றது.

அந்தக் குடும்பத்திலேயே தன் எண்ணத்தைச் சுழல விட்டு அந்த ஆவியின் நிலை இருக்கின்றது. அந்நிலையின் தன்மை பூர்த்தி பெற்ற பிறகு தான் தன் நிலைக்கு உகந்த உடல் கிடைத்த பிறகு மறு ஜென்மம் பெற்று அடுத்த வாழ்க்கைக்கே வருகின்றது.

ஆனால்… குரோதத்திலும் பேராசையிலும் தான் வாழ்ந்த நாளில் பல தீய பழக்கங்களுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்ந்த ஆவிகள் எல்லாம் ஆவி நிலைக்குச் சென்ற பிறகும் எந்த நிலையில் அந்த ஆவி பிரிந்ததோ அதே குரோத நிலையில் தான் சுழல்கிறது.

அந்த ஆவி குரோதத்தை எந்த நிலையில் விட்டுச் சென்றதோ… அதைக் குரோதம் கொண்டவர்கள் மூலமாகச் செயல்படுத்துகின்றது. அதாவது… வும் நல்ல நிலையில் இருந்த ஆவி எப்படியெல்லாம் தன் நிலையைச் செயல்படுத்துகிறதோ அதே போல்தான் இந்தத் துர் ஆவிகளும் வந்து செயல்படுத்துகின்றன.

இத்துர் ஆவிகளின் அத்தகைய சுவாச நிலையினால் தான் மனிதன் மிருகமாகும்… அதாவது மிருக இனத்திற்குச் சென்று வாழும் நிலைக்கு ஆளாகின்றான்.

ஆகவே… வாழ்ந்த நாளில் நாம் எடுக்கும் வாழ்க்கை முறை கொண்டு தான் மறு ஜென்மம் நமக்கு அமைவதே…!

இன்று மனிதர்களுக்கு உள்ள எண்ணமும் செயல் திறமை அறிவு அனைத்துமே மிருக ஜெந்துக்களுக்கும் பறவைகளுக்கும் உண்டு.
1.மனிதனைக் காட்டிலும் பறவைகள் மிருகங்கள் இவைகளுக்குத் தன் போன சரீரத்தின் நிலை எல்லாம் தெரிந்திடும்
2.நாய்க்கு அனைத்து நிலைகளையும் தெரிந்துவிடும்,

ஆனால் அவைகளுக்குச் சொல்லாற்றலும் நம்மை ஒத்து செயல்படுத்த அங்கங்களும் இல்லாததினால்… “தான் விட்டுச் சென்ற குறையை எண்ணியே மிருகமாக வாழ்கின்றன…”

ஆனால் அந்த மிருகத்தைத் தன் நிலைக்கு அரும்பெரும் சுவையாக்கிச் சமைத்து உண்ணுகின்றான் ஈன்றைய மனிதன். இவன் உண்ணும் நிலையும் ஆவியாகி அந்த மிருகத்துக்கும் தெரிகின்றது.

மிருக உணவையும் பறவைகளின் உணவையும் நாம் புசிப்பதினால்
1.அவற்றின் உடல்களில் எந்தெந்த அணுக்களின் தாக்குதல்கள் இருந்தனவோ
2.அவற்றையெல்லாம் நம்முள்ளும் நாம் ஏற்றிக் கொள்கின்றோம்.

இப்படியெல்லாம் பல நிலை கொண்ட ஆவித் தன்மைகள் இந்த உலகில் உள்ள பொழுது
1.அந்த ஆவி அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்திடாமல்
2.வரும் தடங்கல்களை எல்லாம் நாம் போக்கிக் கொண்டு
3.நம்முள் உள்ள சிறு சிறு மனச் சஞ்சலங்களையும் நம்மையே சுற்றிக் கொண்டில்லாமல் அதைப் புனிதப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.

இன்று தாஜ்மஹால் என்ற நிலையில் உள்ள மும்தாஜ் எனும் ஆவியின் நிலை என்ன…?

அந்த ஆவி இன்னும் அந்த தாஜ்மஹாலிலேயே அந்த நிலையிலேயே சுற்றிக் கொண்டுள்ளது.

எந்த எண்ணத்தைப் பூர்த்தி பெறாமல் விட்டுச் சென்றதோ அதே நிலையில் தான் இன்னும் உள்ளது அந்த இரண்டு ஆவிகளுமே…! ஷாஜஹான் என்னும் ஆவியும் மும்தாஜின் ஆவியும்.
1.அவ்வாவிகளுக்கு அதற்கு மேல் நிலைக்குச் செல்லும் நிலைக்கும் ஆசைப்படவில்லை
2.மறு ஜென்மத்திற்கும் வரவில்லை… சூட்சும நிலைக்குச் செல்வதற்கும் முடியவில்லை.

ஆனால் அந்த இரண்டு ஆவிகளுமே ஆனந்த நிலையில் தான் இன்றும் அந்நிலையில் உள்ளன. அவையின் நிலை என்றுமே அந்நிலையில் தான் இருந்திடும்… ஆனந்த நிலையில் அன்புடனே வாழ்ந்து வருகின்றன. அந்த மாளிகையில்…!

வாழ்ந்த நாளில் இரண்டும் இணைந்து வாழாத நிலையில் ஆவி நிலையில் இணைந்த காவியக் காதலராக இன்றும் வாழ்கின்றார்கள் அந்த இரண்டு ஆவிகளுமே.

இந்நிலை போல் ஆவி உலகில் பல நிலைகள் உள்ளன.