ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 3, 2024

குரு பீடத்தின் சக்தி

குரு பீடத்தின் சக்தி

 

மனிதனின் வாழ்க்கையில் சலிப்போ வெறுப்போ வேதனையோ கோபமோ குரோதமோ சந்தர்ப்பவசத்தில் நமக்குள் இது வித்தாக ஆகிவிட்டால் விதியாக அது வளர்ந்து விடுகின்றது.
1.அந்த ஒவ்வொரு குணமும் விதியாக வளர்ந்து இந்த உணர்வின் தன்மை பெருக்கப்படும் பொழுது
2.கடும் நோயாக அவஸ்தைப்பட்டுத் தான் தீர வேண்டி இருக்கின்றது.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால் நம்முடைய மதியைச் செலுத்துதல் வேண்டும்.

மகரிஷியின் அருள் சக்திகளை நாம் பெறுதல் வேண்டும்… எங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்… அருள் ஒளி பெற வேண்டும்…! என்று ஏங்கி அதைப் பெறுதல் வேண்டும்

“தபோவன குரு பீடத்தின் சூரியனை உற்றுப் பார்த்து” மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் இதற்கு முன் எங்களை அறியாது சேர்ந்த தீயவினைகள் அனைத்தும் அகன்று மகரிஷிகளின் அருள் சக்தியால் உடல் நலம் பெறும் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

நீங்கள் இதற்கு முன் செய்த வினைகளை அகற்றிடும் சக்தியாக அருள் ஒளி உங்களுக்குள் படர்ந்து உங்கள் உடலில் எந்த வலி இருந்தாலும் மேல் வலியாக வந்திருந்தாலும் அது அனைத்தும் குறைந்து மன பலத்தையும் மன வளத்தையும் கூட்டும்.

மனக்கவலையோ சோர்வோ அதைப் போன்ற நிலைகள் இருந்தாலும் இங்கே தியானிக்கும் பொழுது அந்த மன பலம் உங்களுக்குக் கிடைத்து மன வளம் பெறும் அந்தத் திறனும் கிடைக்கும்.

உங்கள் உயிரை ஈஸ்வரா…! என்று வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர்தல் வேண்டும் என்னை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும். மெய் ஞானிகள் உணர்வு எனக்குள் வளர வேண்டும் என் பார்வையால் நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கிக் கண்ணைத் திறந்தே இந்தச் சூரியனைப் பாருங்கள்.

1.உங்கள் உடலுக்குள் அருள் ஞானிகளின் உணர்வுகள் ஊடுருவதும்… மகரிஷிகளின் ஆற்றல் பெருகுவதையும் நீங்கள் உணர முடியும்.
2.மகரிஷிகள் வாழ்ந்த காலங்களில் அவர்கள் உருவங்கள் இருந்திருந்தால் அந்த உருவமும் சிலருக்குக் காட்சியாகக் கிடைக்கும்
3.சப்தரிஷி மண்டலங்களையும் நீங்கள் பார்க்கலாம்.

இவ்வாறு தியானிக்க… தியானிக்க
1.உங்கள் நரம்பு மண்டலங்கள் அனைத்தும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படரும் பொழுது
2.ஒரு காந்தப் புலனறிவு உங்களுக்குள் இயங்குவதை உணரலாம்