ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 24, 2024

கல்கி

கல்கி

 

உலகெங்கிலும் தோன்றிய ஞானிகள் அனைவருமே
1.மனிதனின் உயிரைக் கடவுளாக மதி
2.மனிதனுக்கு மனிதன் மனிதனாக நீ மதி
3.மனிதனை ஒரு கடவுளாக மதி என்று தான் அனைவரும் சொல்லி உள்ளார்கள்.

அத்தகைய ஞானிகள்
1.மனிதனை மதித்தார்கள்… மனித உடலை மதித்தார்கள்
2.மனிதன் மகிழ்ந்திட வேண்டும் என்று எண்ணத்தைத் தனக்குள் வளர்த்தார்கள்
3.மனிதன் அவன் அறியாத இருள்களில் இருந்து மீள வேண்டும் என்ற சதா தியானித்தார்கள்.
4.மனிதன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற ஏக்கத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டார்கள்.

அவர்கள் அனைவரும் பிறவிக் கடலை நீந்தி ஒளியின் சரீரமாக இன்றும் சப்தரிஷி மண்டலமாகத் திகழ்ந்து கொண்டு உள்ளார்கள் அது தான் கல்கி…!

கடவுளின் அவதாரத்தில்… என்றும் பதினாறு என்ற அழியா ஒளிச் சரீர வாழ்க்கையினை மனித உயிரான்மா பெறுவதைத்தான் ஞானிகள் “கல்கி” என்றார்கள்.

மனிதர் தாம் கல்கி என்ற பெருவீடு பெருநிலையை அடைவதைத்தான், பத்தாவது அவதாரமாகக் காண்பித்துள்ளார்கள்.

உயிரின் பரிணாம வளர்ச்சியில் இறுதியானதும் உறுதியானதுமான அழியா ஒளிச் சரீர வாழ்வே மனித இனத்திற்கு இலட்சியமாக இருக்கவேண்டும் என்றுரைத்தார்கள் ஞானிகள்.

ஆனால்
1.இந்தக் கலியில் மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் விளைய வைத்து
2.எவர் ஒருவர் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுகிறார்களோ அவரே கல்கி.
3.வாழ்க்கையில் வரும் இருளை யாரெல்லாம் மாய்க்கின்றார்களோ…
4.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நஞ்சினை அடக்குகின்றார்களோ… அவரே கல்கி.