ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 14, 2024

காற்று மண்டலத்தில் பரவிக் கொண்டிருக்கும் நஞ்சு நம்மைப் பாதிக்காது தடைப்படுத்த வேண்டும்

காற்று மண்டலத்தில் பரவிக் கொண்டிருக்கும் நஞ்சு நம்மைப் பாதிக்காது தடைப்படுத்த வேண்டும்

 

விவசாயங்களில்… பூச்சிகளைக் கொல்ல என்று விஞ்ஞான அறிவால் உபயோகப்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் தாவர இனங்களில் கலந்து விடுகின்றது… அதே சமயத்தில் இந்தக் காற்றிலும் கலந்து விடுகின்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் நெல்… கத்திரிக்காயிலிருந்து மற்ற எல்லாக் காய்களிலும் பூச்சி மருந்து அடிக்கப்பட்டுள்ளது. அதைப்போன்று நாம் உணவாக உட்கொள்ளும் திராட்சைப்பழம் மாம்பழங்களிலும் இந்த விஷத்தன்மைகள் படர்ந்துள்ளது.

அதை உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உயிர் உடலில் ஜீவ அணுவாக மாற்றுகின்றது.
1.அந்த ஜீவ அணு எந்த விஷத்தினைத் தனக்குள் வளர்த்துக் கொண்டதோ அது நம்முள் நின்று
2.இந்த விஷங்கள் (பூச்சி மருந்து) எங்கிருந்தாலும் அது தன் உணவுக்காகச் சுவாசித்து இழுக்கும்.
3.தன்னை வளர்த்துக் கொள்ள அவ்வாறு சுவாசிக்கும் பொழுது தன் இனக் குஞ்சுகளை நம் உடலுக்குள் அதிகமாகப் பெருக்கும்.

நம் உடலில் தசைகள் எல்லாம் நன்றாக இருக்கும் ஆனால் அது இருந்த இடத்திலிருந்து விஷத்தைப் பரப்பி அதை உணவாக உட்கொண்டுவிடும். அப்போது நம் உடலுக்குள் வலி… வேதனை தெரியும். இது கேன்சர் என்ற நோயாக வரும் காரணம் இந்த விஷத்தின் தன்மையால் வருவது தான்.

ஒரு மனிதன் மிகவும் வேதனைப்பட்டுச் சாபமிட்டாலும் அதை வேடிக்கையாகப் பார்த்து உற்றுக் கேட்டுணர்ந்தோர் உணர்வுகளில் அந்தச் சாபத்தின் வித்து வேதனையாகப் பதிவாகி விடுகின்றது.

“இப்படித்தான் அவன் ஆக வேண்டும்…” என்று சாபமிடும் பொழுது அந்த உணர்வுகள் ஜீவ அணுவாக மாறி அவன் எதை எல்லாம் பேசினானோ இந்த உணர்வை எடுத்து… நமக்குள் உருப்பெற்ற ஜீவ அணு அவன் சாபமிட்ட அந்த வாக்கை நிறைவேற்றிக் கொண்டே இருக்கும்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை… வேடிக்கைதான் பார்த்தோம்… சாபமிட்ட உணர்வுகள் இவ்வாறு வந்து விடுகின்றது.

எனக்கு மோசம் செய்தானே பாவி… அவன் கண்கள் குருடாகிவிடும்…! என்று சொன்னால் போதும்.
1.மற்றதை எடுத்து உணர்த்தும் “ஜங்ஷன்” கரு விழிக்குள் ஒரு இணைப்பு இருக்கின்றது
2.அதிலே பட்டுவிட்டால் சிறுகச் சிறுக அது படம் தெளிவாகத் தெரியாதபடி கண்களைக் குருடாக்கிக் கொண்டே இருக்கும்.

கண் பார்வை சரியாகத் தெரியாதவர்கள் இன்று நிறைய இருக்கின்றார்கள். காரணம் இந்த வேதனை உணர்வு கண்ணிலே திரை மறைவாகும்… பார்வை குறைந்து கொண்டே வரும்.

இப்படி இல்லாதவர்கள் யாரும் இல்லை.

பண்டைய காலங்களில் எல்லாம் 90 100 வயது வரையிலும் வாழ்ந்து இருக்கின்றார்கள். அவர்களுக்குக் கண்கள் சீராகத் தெரிந்துள்ளது. இன்றும் கண்ணாடி போடாமல் அவர்களால் வாழ முடிகிறது.
1.ஆக… நஞ்சினை எதிர்க்கும் சக்தி பெற்றவர்கள் அவர்கள்.
2/அந்த நஞ்சினை வென்றிடும் சக்தி இருப்பதால் அது ஒன்றும் பாதிக்காத நிலையாகி விடுகின்றது.

இன்று வாழும் நாம் தவறு செய்யவில்லை. இருந்தாலும் தாவர இனங்களில் தூவப்பட்ட நஞ்சுகள் செடியுடன் கலந்து விஷமான உணர்வாக உட்கொண்ட பின் அது நமக்குள் கலந்து விடுகின்றது.

விஷத்தைக் குடித்தால் எப்படி நம்மை மயக்கமடையச் செய்கின்றதோ அதைப் போன்று நம் தெளிந்த மனதை இழக்கச் செய்து விடுகின்றது. உணவு வழியாக வரும் இந்த நஞ்சின் தன்மை உடலில் ஜீவ அணுவாக மாறிய பின் அந்த விஷத்தையே உட்கொள்கின்றது.

முதலில் தாவர இனங்களில் பூச்சிகள் விழுந்து அது முட்டை இடுகின்றது. பூச்சிகள் விழாமல் இருக்கப் பூச்சிக்கொல்லி மருந்தை அதன் மீது தெளித்த பின் பூச்சிகள் இறந்து விடுகின்றது.
1.ஆனால் அது இட்ட முட்டைக்குள் மேல் தோடு அந்த மருந்தைக் கவருகின்றது.
2.விஷங்கள் அதற்குள் ஊடுருவுகிறது
3.மருந்திலிருந்து வரும் ஆவியின் தன்மையை அதற்குள் (கருவுக்குள்) இணைத்து
4.அதைச் சமமாக ஏற்றுக்கொள்ளும் நிலையாக வருகின்றது… முட்டைக்குள் இருக்கும் பூச்சியை உருவாக்கும் உயிரினங்களுக்கு…!

நாம் தூவும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ப்படி எல்லா வகைகளிலும் கலந்து உணவுடன் உட்கொள்ளும் பொழுது விஷம் கொண்ட அணுவாக மாறி விடுகின்றது.

உடலுக்குள் ஜீவ அணுவாக மாறி அது அதனுடைய மலத்தை வெளிவிடும் பொழுது கை கால் எல்லாம் கடு..கடு… என்று இருக்கிறது... கண் வலிக்கின்றது தலை வலிக்கின்றது நெஞ்சு வலிக்கின்றது பிடரி வலிக்கின்றது என்று நாம் சொல்லத் தொடங்கி விடுவோம்.

தவறு செய்யாமலேயே…
1.நம் உணவு வழியாக இப்படிப்பட்ட தீமைகள் கலந்து மனிதனுடைய சிந்தனையைக் குறைக்கச் செய்து
2.அடிக்கடி வேதனையைச் சுவாசித்து உடலுக்குள் வேதனையை அனுபவிக்கும் நிலையாக வருகின்றது.

இன்றைய காலகட்டத்தில் இந்த நஞ்சு விளைந்து அது உடலுக்குள் அதிகமாகி விட்டால் சிறுகச் சிறுகக் கேன்சராக முளைக்கத் தொடங்கி விடுகிறது.

நம் உடலில் இருக்கும் ஜீவ அணுக்கள் அதிகமான விஷத்தை நுகர்ந்து விட்டால் அந்த விஷத்தையே வளர்த்திடும் நிலையாக வந்து அருகில் இருக்கக்கூடிய தசைகளில் இருக்கும் நல்ல அணுக்களையும் மடியச் செய்து விடுகின்றது.

இதையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டு அதை மாற்றி அமைக்கும் சக்தியாக வர வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்…
1.நஞ்சினை வென்று ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை
2.ஒவ்வொரு நொடிப்பொழுதும் உங்கள் இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.
3.அதிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணுதல் வேண்டும்.