ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 10, 2024

இரவிலே புலனடங்கித் தூங்கினாலும்… பகலில் நுகர்ந்த உணர்வுகள் நம்மை இயக்கும் விதம்

இரவிலே புலனடங்கித் தூங்கினாலும்… பகலில் நுகர்ந்த உணர்வுகள் நம்மை இயக்கும் விதம்

 

ரோட்டிலே போகும் பொழுது அல்லது பஸ்ஸிலே செல்லும் பொழுது ஒரு விபத்து நடப்பதை நேரடியாகப் பார்க்கின்றோம் அந்த உடல் அப்பொழுது சிதைகின்றது… அந்த மனிதன் அலறும் ஓலங்கள்… அந்த ஒலி அலைகள் அங்கே படர்கின்றது.

அங்கே எத்தனை விதமான ஒலிகள் படர்கின்றதோ சூரியனுடைய காந்த சக்தி அதை எடுத்து வைத்துக் கொள்கின்றது. அடிபட்ட மனிதனை நம் கண் கருவிழி படமாக்கி உடலில் பதிவாக்கி விடுகின்றது.

அந்த உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் சூரியனுடைய காந்த சக்தியால் பரவி உள்ளது.
1.நாம் இப்படி நுகர்ந்த உணர்வு நமக்குள் பதிவாகி இருக்கப்படும் பொழுது
2.இரவிலே நம்மை அறியாமல் திடுக்… திடுக்… என்று பயப்படுவோம்.

காரணம்… மனிதன் மற்ற சிந்தனை இல்லாது உறங்கப்படும் பொழுது நம் உடலில் இருக்கும் உணர்வுகளில் “அது” வலுவாக இருக்கின்றது.

பாலிலே பாதாமைப் போட்டாலும் ஒரு துளி விஷம் பட்டு விட்டால் அந்த விஷம் தான் முன்னணியில் இருக்கும். “சப்…” என்று இருக்கும் ஒரு பொருளில் காரத்தை இணைத்தால் அந்தக் காரம் தான் முன்னணியில் இருக்கும்.

இதைப் போன்று மனிதனின் வாழ்க்கையில் நல் ஒழுக்கங்களையும்… நல்ல செயல்களையும்… நல்ல நிலைகளையும் பார்த்துணர்ந்த நாம் எதிர்பாராது ஒரு விபத்தைப் பார்க்க நேர்ந்து… அங்கே அவன் உடல் சிதைந்து வேதனையுடன் வெளிப்படுத்திய உணர்வுகளை நம் கருவிழி உடலில் இங்கே பதிவாக்கி… அந்த உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின்… “அவன் வேதனைப்பட்டது போன்று அச்ச உணர்வுகள் நமக்குள் உருவாகின்றது…”

அதை நுகர்ந்து அந்த உணர்வின் அணுக்களை அதிகமாக இங்கே பெருக்கி விட்டால்… நாம் புலனடங்கித் தூங்கும் பொழுது
1.நாம் ஈர்த்துக் கொண்ட அந்த அணு அதிகமாக இழுத்து…
2.நம் ஆன்மாவிலே வந்து உயிரிலே பட்ட பின் நம்மை அறியாமல் அலறுகின்றோம்… துடிக்கின்றோம்.

சில பேர் மற்றவரிடம் அடிவாங்கிய பின் அந்த அடி தாங்காது எழுந்து ஓடும் நிலை வரும். அதே போல மனிதனாக இருக்கக்கூடிய நிலையில் அதை உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் தூக்கத்திலே… ஐய்யய்யோ..! யாரோ என்னை அடிக்க வருகின்றார்கள்…! என்று எழுந்து ஓடுபவர்களும் உண்டு.

காரணம்… அடிப்பதை வேடிக்கைதான் பார்த்தார்கள். அந்த உணர்வின் தன்மை கரு விழி பதிவாக்கி விடுகின்றது அவன் உடலில் இருந்து வரக்கூடிய அஞ்சி ஓடும் உணர்வலைகள் செல்கின்றது.

அடிப்பவனையும் நாம் பார்க்கின்றோம் அஞ்சி ஓடுபவனையும் பார்க்கின்றோம். இரண்டு உணர்வையும் நம் கருவிழி இங்கே பதிவாக்கி வைத்து விடுகின்றது. இது கலந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக வருகின்றது.

அக்ரிகல்ச்சரில் பல பொருள்களைச் சேர்த்துப் புதிதாக எப்படி உருவாக்குகின்றார்களோ… அதைப் போல நம்முடைய செயல்கள் சந்தர்ப்பத்தில் நாம் உற்று நோக்கிய உணர்வுகள் அங்கே அடிப்பவனையும்… அடியினால் அரண்டு ஓடக்கூடிய நிலையும்… இரண்டும் கலக்கப்படும் பொழுது உயிர் நுகர்ந்து இதில் எதனின் ஆக்கம் அதிகமாகி “இப்படிச் செய்கின்றானே பாவி…!” என்று ஓடுவதைக் கண்டு அந்த பய உணர்வுகள் பதிவாகி விடுகின்றது.

இந்தப் பதிவின் துடிப்பு அதிகரிக்கப்படும் பொழுது இரவிலே தூங்கும் பொழுது நமக்குள் “அவன் உருவம்” தெரிவதில்லை ஆனால் யாரோ என்னை அடிக்க வருகின்றார்கள்… என்ற அந்த உணர்வு கொண்டு அஞ்சி… தூக்கத்தில் எழுந்து ஓட ஆரம்பிக்கின்றோம்.

புலனடங்கித் தூங்கினாலும்…
1.நம் ஆன்மாவில் பட்ட உணர்வு சுவாசிக்கும் போது உயிரிலே பட்டு இந்த உணர்வை இயற்கையில் நாம் எப்படி வாழ்ந்தோமோ (முழித்திருக்கும் போது)
2.அதே செயலாக்கங்களை இரவிலே கொண்டு வருகின்றது.

இப்படி சிலர் தூக்கத்தில் எழுந்து ஓடுவதையும் பார்க்கலாம். ஒரு சிலர் தூங்கும் பொழுது “என்னைக் கொல்கின்றார்களே… என்று சொல்வதையும்; என்னை அமுக்குகின்றனர்… கொல்கின்றனர்…” என்றெல்லாம் வரும்.

இதே போன்று சிலருடைய தாக்குதலான உணர்வுகளை ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் கூறுவதை உற்று நோக்கி அந்த உணர்வினைப் பதிவாக்கினால் மீண்டும் அந்த அதிர்ச்சியின் உணர்வுகள் அது வலுவாக இருப்பதால் புலனடங்கித் தூங்கும்போது அதுவும் இயக்கும்.

நண்பன் சொன்னதை அவர் பார்த்தார் ஆனால் நாம் பார்க்கவில்லை. பார்த்து அநியாயம்பா… இப்படி அடித்துக் கொள்கின்றார்கள் என்று அவர்கள் சொன்னால் போதும்.

அவர்களில் பதிவான உணர்வு சொல்லாக வருவதை நமது கண் கவர்கின்றது உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை பதிவான பின் அவர் எதைப் பார்த்தாரோ நாம் அந்த ஆளைப் பார்க்கவில்லை.

அவர் எந்த உணர்வின் வேகத்தைப் பார்த்தாரோ அந்த சொல் நமக்குள் பதிவான பின் இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுது அந்த மனிதனின் வேதனை நமக்குள் தெரிய வரும்.

வேதனைப்படுகின்றான்… புலம்புகின்றான்… அவனை அடித்துக் கொல்கின்றார்கள் என்ற இந்த உணர்வு நமக்குள் இருப்பதால் “அது உயிரிலே பட்டபின்”
1.அவன் தன்னை அடிக்க வருகிறான் என்று நாம் தூக்கத்தில் எழுந்து ஓடுவோம்
2.அல்லது அடிக்க வருகின்றார்கள் என்று இரவிலே கத்துவோம்.

இதைப் போன்று ஒருவன் குடும்பக் கஷ்டத்தினால் நீரிலே மூழ்கி மூச்சுத் திணறி இறந்து விடுகின்றான். இன்னொருவர் அதைப் பார்த்து வீட்டிலே வர்ணனை செய்வார்கள். இது மாதிரி ஆகிவிட்டான்… அவன் பட்ட பாடு எப்படி இருந்தது தெரியுமா…! என்று அங்கே சொல்வார்.

அதைக் கேட்பவர் உணர்வுகளில் அது அப்படியே பதிவாகும். அதே உணர்வின் தன்மை இங்கே வரப்படும் பொழுது அவர் வீட்டில் சங்கடமும் சலிப்பும் இருந்து அன்றைக்கு அவர் தூங்கினால் புலனடங்கிய நேரத்தில் சோர்வு என்று வரப்படும் பொழுது அவர்கள் சொன்னது போல (குளத்திலே விழுந்து மூழ்கி இறந்து விட்டான் இங்கே கத்தினான் என்று சொன்னது)
1.பதிவான அந்த உணர்வுகள் இங்கே வந்து தன்னை அறியாமலே கிணற்றிற்குள் மூழ்குவது போன்று தெரிய வரும்
2.தண்ணீருக்குள் மூழ்கிக் கத்துவது போன்று தெரியும்.

இதுகள் எல்லாம் நமக்குள் பதிவான உணர்வுகள்… நாம் புலனடங்கித் தூங்கினாலும்
1.உயிரின் தன்மைகள் அந்த உணர்ச்சிகளை உடலிலே சுழலச் செய்து
2.அதே செயலாக்கங்களைச் செயல்படுத்துகின்றது.

காரணம் நாம் எதைப் பதிவு செய்கின்றோமோ உடலுக்குள் பதிவான அதே உணர்வு மீண்டும் நம்மை இயக்கச் சக்தியாக இயக்குகின்றது.