ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 6, 2024

மனித வாழ்க்கையில் “நான் அதைச் செய்வேன்… இதைச் செய்வேன்…” என்று சொல்லத் தான் முடியும்

மனித வாழ்க்கையில் “நான் அதைச் செய்வேன்… இதைச் செய்வேன்…” என்று சொல்லத் தான் முடியும்

 

ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன்…! என்னுடைய (ஞானகுரு) அறியாத குழந்தைப் பருவத்தில் சில உயிரினங்களை (குருவி மைனா) உயிருடன் எரித்திருக்கின்றேன்… கை கால்களை இழக்கச் செய்து அதை வேடிக்கை பார்த்து ரசித்து உள்ளேன்.

அப்படி நான் ரசித்து வேடிக்கை பார்த்த உணர்வுகள்
1.எனக்குள் அணுக்களாக வளர்ந்து “விதி” என்ற நிலையாக வருகின்றது
2.அதனுடைய பருவ வளர்ச்சியில் அதே உணர்வாக இயக்கி என்னையும் முடக்கச் செய்கிறது.

இப்பொழுது நான் சக்தி பெற்றவனாக இருப்பினும்… எத்தனையோ பேருக்கு நான் உதவி செய்கின்றேன் என்ற எண்ணத்தில் இருந்தாலும்… கீழே விழுந்த பின் “என் கை எலும்பு முறிந்து விட்டதே…” என்று வேதனையாக எண்ணினேன் என்றால் “அந்த மரண பயத்தால் மீண்டும் பிறவிக்குத் தான் வருவேன்…”

1.ஆக… நான் அறியாத வயதில் செய்த உணர்வுகள் எதுவோ அது என்னை அதன் வழி அழைத்துச் சென்றது
2.அது இத்துடன் செல்லட்டும்… அருள் ஒளி எனக்குள் பெருக வேண்டும்
3.என்னைப் போன்று பிறருக்கு இந்த நிலைகள் வரக்கூடாது என்று நான் எண்ணி ஏங்கப்படும் பொழுது
4.மரண பயத்திலிருந்து நான் விடுபடுகின்றேன்… அருள் மகரிஷிகளுடன் தொடர்பு கொள்கின்றேன்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் மனிதனுடைய அடுத்த எல்லையான பிறவி இல்லா நிலையை அடையத்தான் நாம் முயற்சிக்க வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில்
1.நான் அதைச் செய்வேன்… இதைச் செய்வேன்… என்ற எண்ணங்கள் இருப்பினும்
2.எதையும் எவரும் செய்ய முடியாது (இது முக்கியம்).

உதாரணமாக நடந்து செல்லும் ரோட்டின் நடுவிலே ஒரு பொருள் இருக்கின்றது. அதை எடுக்க நான் ஆசைப்பட்டேன் என்றால் என் எண்ணம்… என்னுடைய ஆசை… அந்தப் பொருள் மீது தான் வரும்.

ஆனால் எடுக்கச் செல்லும் போது இடையிலே குறுக்கே வரும் வண்டியினைக் கவனிக்கவில்லை என்றால் ஆளை மாய்த்துவிடும். அல்லது மற்ற எதிரிகள் அந்தப் பொருளை நான் பெற முடியாதபடி தடுக்கும் செயலாக இருந்தால் அதை அறிய முடியாது.

அந்தப் பொருளை அடைய முடியவில்லை என்றால் வெறுப்பும் வேதனையும் கொண்டு கொதிப்படையும் தன்மை வருகிறது. அதனால் அவர்களை அழித்திடும் உணர்வுகள் தோன்றி… கடும் நோயாக உடலுக்குள் உருவாகி… நம் நல்ல உணர்வுகளை எல்லாம் அது அழித்து விடுகின்றது.

காரணம்… நாம் எண்ணியதை எல்லாம் நமது உயிர் உடலில் அணுக்களாக விளையச் செய்து விடுகின்றது. அதன் வழி தீமையை நமக்குள் விளைவிக்கின்றது.
1.இப்படி மனித உருவை மாற்றுகின்றதே தவிர இந்த உடலிலே யாரும் நீடித்து வாழ்வது அல்ல
2.இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை.

ஒரு வித்தினை நிலத்தில் ஊன்றினோம் என்றால் அது நிலத்தின் துணை கொண்டு தன் இனத்தைக் கவர்ந்து செடியாக வளர்ந்து மீண்டும் தன் இனத்தைப் பெருக்குகிறது.

இதைப் போன்று தான் நம் உடலும் ஒரு நிலம் தான்.
1.நம் உயிரின் இயக்கத் துணையால்… அதிலுள்ள காந்தப்புலனால் கவர்ந்து கொண்ட உணர்வுகள்
2.ஊழ்வினை என்ற வித்துக்களாக விளைந்து விடுகின்றது.

அது போன்று தான் இந்த உபதேசத்தின் வாயிலாக அருள் ஞான வித்தாக உங்களுக்குள் விளையச் செய்யப்படும் பொழுது நஞ்சினை வென்றிடும் உணர்வாக உங்களில் விளைகின்றது.

அருள் ஞான சக்தியாகப் பெருக்கிவிட்டால் உடலுக்குள் ஒளிச் சுடராக விளைகின்றது. இருள் சூழ்ந்த நிலைகளை ஒடுக்கி விடுகின்றது.

உடலை விட்டுச் செல்லும் பொழுது எந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் நாம் பற்றினோமோ அங்கே செல்கின்றோம். ஆகவே நாம் மரணம் இல்லாப் பெரு வாழ்வு வாழ வேண்டும். ஒவ்வொருவரும் அந்த நிலை பெற வேண்டும்.

1.எனது குரு காட்டிய அருள் வழியினை நீங்கள் அனைவரும் பெற வேண்டும்
2.உங்கள் நினைவாற்றல் அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும்
3.அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைய வேண்டும்… நஞ்சினை வென்றிடும் ஆற்றல் நீங்கள் பெற வேண்டும்.
4.உங்கள் மூச்சின் தன்மை நல்ல உணர்வாக இந்தப் பூமி முழுவதும் படர வேண்டும்

ஞானிகளைப் போல் நஞ்சினை அடக்கும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குரு காட்டிய அருள் வழியினை உங்களுக்குள் பதிவு செய்வது.