ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 7, 2024

அருள் ஞானிகளுடன் ஒன்றுவதே “மதி”

அருள் ஞானிகளுடன் ஒன்றுவதே “மதி”

 

இந்த உபதேசத்தைக் கேட்பவர்கள் அனைவரும்… உங்களுக்கு நோயோ அல்லது மற்ற குறைபாடுகளோ தற்சமயம் ஏற்பட்டால் அது எல்லாம் இப்பொழுது வந்தது அல்ல.

இளமையில் ஏங்கிப் பெற்ற அல்லது பார்த்துணர்ந்த
1.தீமையான நிலைகளில் இருந்து விடுபட நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து
2.அது வளர்ச்சி பெறும் பொழுது விதி என்ற நிலையும்
3.அந்த விதிப்படி வினைகள் விளைந்து நோயாக விளைந்து
4.வேதனை என்ற நிலைகளை நமக்குள் வளர்க்கின்றது.

அந்த விதிப்படி விளைந்த உணர்வுகளை மாற்ற
1.அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து விதி என்ற அந்த இருளை நீக்கி
2.அருள் ஞானிகளுடன் ஒன்றச் செய்வதே மதி.

மனிதன்… மதி என்ற நிலைகள் கொண்டு தான் எத்தனையோ விஞ்ஞானம் உருப் பெற்றது. எத்தனையோ அருள் ஞானம் உருப் பெற்றது.

நம்மை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம். இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த நோய்களை அகற்றுவோம்.

நமது வாழ்க்கையில் முன் செய்து கொண்ட வினையே இது வருகின்றது. உதாரணமாக… ஒரு விபத்து என்று ஆனாலும் அதனைப் பற்றி நாம் கேட்டுணர்ந்த பின் அந்த உணர்வின் தன்மை நமக்குள் வலுப்பெற்றால்… நம் நல்ல குணங்களும் இருள் சூழச் செய்து விடுகிறது.

அது மட்டுமல்ல… விபத்தைப் பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த அதே உணர்வுகளும் நம்மை இயக்கப்பட்டு நம்மை அறியாமல் சில நோய்கள் வந்து விடுகிறது… அல்லது விபத்தாகி விடுகின்றது.

இதைப் போல
1.நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் அழைத்துச் சென்று
2.எத்தனையோ வினைகளுக்கு ஆளாக்கி அந்தத் தீவினையே நமக்குள் விளையச் செய்யும் நிலையாக உருவாகிவிடுகிறது.

ஆகவே எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெற வேண்டும்… அவர் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெற வேண்டும்… என்ற இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால்… உயிர் நாம் எண்ணிய உணர்வை நமக்குள் விளையச் செய்கின்றது “அந்த வலுவாக வளரச் செய்கின்றது…”

ஆகவே எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகள் அருள் சக்தியை நீங்கள் பெறும் அந்தத் தகுதிக்குத் தான்
1.நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து
2.வாழ்க்கையில் வந்த இருளை வென்று உடல் பெறும் உணர்வுகளை அங்கே சப்தரிஷி மண்டலத்தில் கரைக்கச் செய்து
3.அறிவின் ஒளியாக அவர்களை அங்கே நிலைக்கச் செய்யும்படி பயிற்சி கொடுக்கின்றோம்.

“அந்த அறிவின் ஒளியின் தன்மை” நமக்குள் பெறும் போது நம்மை அறியாது வந்த இருளை நீக்கும் ஆற்றலை நாம் பெறுகின்றோம். பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையை அடையும் தன்மையும் நாம் பெறுகின்றோம்.

அனைவரும் நாம் இதைப் பெறுவோம்… அருள் ஞான வழியில் நாம் செல்வோம்… என்று பிராத்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).