ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 27, 2024

உனக்குள்ளே… “நான் வந்து அமரும் நிலை பெற வேண்டுமப்பா…!”

உனக்குள்ளே… “நான் வந்து அமரும் நிலை பெற வேண்டுமப்பா…!”

 

நம் காலம் கலியுகம்…! அங்கு சொல்வது விஞ்ஞான காலம். அவன் விஞ்ஞானம் எல்லாம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு…?

விஞ்ஞானத்தில் விளையாடுபவன் சித்தனாக இருந்தான். சித்தனே தான் விஞ்ஞானி. எஞ்ஞானத்தையும் வெல்பவன் விஞ்ஞானத்தை வெல்ல மாட்டானா…?

இந்நிலையில் நீ இருந்தால் இந்நிலை என்பது
1.இப்பொழுது நீங்கள் தியானிக்கும் நிலையில் விஞ்ஞானத்தை வெல்லும் மெய் ஞானத்தைக் காண்பாய்
2.இந்த நிலையில் இருந்து கொண்டு எஞ்ஞானத்தையும் வென்று விடலாம்.

விடியும் காலத்தையும் நீ காண்பாய்… விடியும் காலத்தை என்னும் பொழுது உன் நினைவில் “வான மண்டலத்தின் நிலை” தெரிந்து இருக்கும்.

முதல் பாடம் பூமியின் நிலையைத் தெரிந்து கொள் என் நினைவை நீ தெரிந்தவுடன் இப்பூமியின் நிலையைத் தெரிந்து கொள்வாய்…
1.உனக்குள்ளே நான் வந்து அமரும் நிலை பெற்றுவிட்டால்
2.இந்தப் பூமியை இயக்கும் தன்மை புரியும்… மனித நிலை மாறியதன் தன்மையும் புரியும்.

மாற்றுடலைப் பெற்றிடலாம்…! மாறிடும் காலத்திற்கு முன்னே இந்த உடலிலேயே எல்லா நிலையையும் உனக்குத் தந்திடுவேன்.

பூமி இயங்கும் தன்மையே ஆகர்ஷண சக்தி என்பதை வைத்து உன் நிலையைப் பறக்கச் செய். இம்மண்டலம் விட்டு பிற மண்டலம் நீ சென்று வரலாம். பிற மண்டலத்தில் நடக்கும் நிலையை நான் தருவேன். நீ இருந்த நிலையிலேயே எல்லாம் உண்டு.

உன் மனதை நீ அடக்கு என்பதன் பொருள் இதற்காகவே.

1.முதலில் உள் மனதை அடக்கும் தன்மை வந்து விட்டால் வெளி மனதும் அடங்கிவிடும்
2.உள் மனதை அடக்கி விட்டால் ஜெப நிலையில் ஜோதி நிலை கண்டிடுவாய்.
3.மிக சீக்கிரத்தில் ஆகர்ஷண சக்தியை வென்றிடலாம்.

ஆரியபட்டா பறந்ததன் நிலை என்ன…? (ஆரியபட்டா (Aryabhata) என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும்). அவனே செய்தானா…? ஈஸ்வரப்பட்டா சென்றல்லவா அதைப் பார்த்தான்.

“ஆரியபட்டா” என்னும் பெயர் வர அவனுள்ளே நான் இருந்தேன். நீ இருக்கும் இந்தியா மட்டும் உலகம் அல்ல…
1.உலகில் உள்ள மறுபகுதியில் உள்ளவனுக்கும் நான் உள்ளேன்.
2.இங்கும் சித்தன் உள்ளான் அங்கும் உள்ளான்
3.நாம் நினைப்பது இங்கு தான் சித்தன் உள்ளான் என்று
4.அங்கிருக்கும் நிலையை அவன் வெளிப்படுத்துவதில்லை.

உன் மூளையை நீ உபயோகித்தால் அவனையும் நீ வென்றிடலாம். அவனையும் வென்று விட்டால் போதுமா…? அவனுக்கும் மேலே உள்ளவனை யார் வெல்வது…?

அவன் அவனையே தான் வென்று கொண்டிருக்கின்றான்… அவனுக்கு மேல் உள்ளவன் அவனை வெல்ல எவ்வளவு நாள் செல்லும்…?

விஞ்ஞான நிலை கொண்டு அழிக்கும் நிலை நமக்கு வேண்டாம். நம் ஞானத்தின் நிலை இந்த விஞ்ஞானத்திலும் மெய்ஞானத்திலும் இல்லையப்பா.

1.இந்தத் தியானத்தின் நிலையில் அந்த ஈஸ்வரனே பந்தம் வருவான்
2.நீ வேறு அவன் வேறு அல்ல என்ற நிலையை நீ பெற்றிடு.

நான் சொல்லும் பாடம் எல்லாம் இதுவே தான்.

இவ்வுலகில் நீ பிறந்த நிலை வேறு எந்த உலகத்தில் இல்லை. நம் மனத்தையே தெய்வமாக்கிக் கொள்ளும் நிலையைச் சீக்கிரம் பெற்றிடுங்கள். வாயளவில் மனமே தான் தெய்வம் என்பது இல்லாமல் மனதையே தெய்வமாக்கிடுங்கள்.

உன் மனதைத் தெய்வமாக்கிய பின்னால் தான் உனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். தியான நிலையின் பொருள் எல்லாம் புரிந்திருக்கும் நாசியில் நீ பெற்றிடும் வாசனையை உன் மனதில் ஆக்கு.

சுவாச நிலை என்பதன் உட்பொருள் இதுவே தான் உன் மனதை வாசனையாகப் பெற்று விட்டால் கோடி இன்பம் அதுவே தான்.

நுகரும் தன்மையில் நீ இருந்திடப்பா மலரும் கழிவும் வேறல்ல என்ற நிலை தெரிந்திடும்.

கோப நிலை எல்லோருக்கும் உண்டு. எனக்கும் உண்டு… உனக்கும் உண்டு…! மணம் என்னும் வாசனையைப் பெற்று விட்டால் எல்லா நிலையும் மாறிவிடும்.

யோகியாகச் சென்று தான் அடைய வேண்டும் என்னும் நிலை உனக்கில்லை. இருக்கும் நிலையில் எல்லாம் தெரியத்தான் இந்தப் பாடங்கள்.

பாட்டின் தன்மை புரிந்திருக்கும் பாடத்தின் தன்மைகளும் புரிந்திருக்கும் முதல் படி தாண்டி விட்டாய் என்று சொன்னேன்… அடுத்த படி ஏறத்தான் இந்தப் பாடங்கள்.

எல்லா நிலையும் வென்றிடும் சக்தி உனக்கு உண்டு.
1.பறக்கும் நிலை பார்த்திடுவாய்.
2.காட்சி:- உடல் இருக்க சாமி (ஞானகுரு) பறந்து போகும் நிலை
3.இந்த நிலையை உனக்கு அருள்வேன்.