ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 15, 2024

ஞானிகள் கருப்பணசாமியை வைத்ததன் நோக்கம்

ஞானிகள் கருப்பணசாமியை வைத்ததன் நோக்கம்

 

நம்மைத் திட்டுபவர்கள்… சாபம் இடுபவர்கள்… இவர்களை எல்லாம் ஓட்டுக் கேட்டுக் கொண்டே இருப்போம். அதற்காக வேண்டித் தான் கருப்பணசாமியை வைத்து மோப்ப நாயையும் பக்கத்தில் காட்டி இருப்பார்கள்.

ஏனென்றால்
1.ஒட்டுக் கேட்டவுடன் நம் நல்ல புத்தியெல்லாம் இருண்டு விடுகிறது.
2.இருண்டு போன பின் நாம் எப்படித் தவறு செய்கின்றோமோ அதே போன்று
3.அந்த உணர்வுகள் நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளைக் கொன்று புசிக்கத் தொடங்கி விடுகிறது.
4.நீ நுகர்ந்து பார்த்த உணர்வுகள்… உன் நல்ல குணங்களை இப்படிக் கொன்று விடுகின்றது…! என்பதைத் தான்
5.சிலையை வைத்து மோப்ப நாயையும் அருகே வைத்து ஞானிகள் காண்பிக்கின்றார்கள்.

ஆனால் இன்று வழக்கத்தில் நாம் என்ன செய்கிறோம்…?

கருப்பண்ணசாமிக்கு ஆட்டை வெட்டி அவனுக்குப் படையல் செய்தால் தன்னைக் காப்பான்… அது காவல் தெய்வம்… என்று சொல்லி அதற்குப் பலியிட்டு அதை வணங்கிக் கொண்டிருக்கின்றோம்.

அந்த ஆவேச உணர்வு கொண்டு என்ன செய்கின்றோம்…? அங்கே ஆட்டைப் பலி கொடுத்தேன் என்ற நிலையில் நாம் செய்த அந்த உணர்வுகள் இங்கே வந்து பிறரை இரக்கம் இல்லாதபடி துன்பப்படுத்தச் செய்யும்.

உதாரணமாக… கொலை செய்பவனைப் பார்த்தோம் என்றால் அவன் அரக்கத்தனமாகத் தான் போவான். அவனுக்கு எந்த நோயும் வராது. ஆனால் பல கொலைகளைச் செய்வான்… தெம்பாக இருப்பான்.

யாரையும் பற்றி அவன் அஞ்சுவதில்லை… அவனுக்குக் கொலை செய்வது தான் வேலை.

இதைப் போன்ற உணர்வின் தன்மை வரும் பொழுது அவன் எப்படி அந்த வலுப்பெற்றானோ இதைப் போல நமக்குள் இந்த அரக்க உணர்வுகள்… பலியிட்ட உணர்வுகள்… அதிகமாகி விடுகின்றது.

இறந்த பிற்பாடு என்ன செய்வேன்…?
1.நாம் பலியிட்டுக் கும்பிட்டது போன்று அடுத்தவர்கள் கருப்பணசாமிக்குப் பலியிட்டுக் கும்பிடுகிறார்கள் என்றால்
2.அந்த உடலுக்குள் புகுந்து… ஆவியாகப் போய்ச் சேர்ந்து விடுவேன்.

ஆனால் அவர்கள் ஆட்டைப் பலி கொடுக்கவில்லை என்றால் “எங்கடா ஆட்டைக் காணோம்…? ஏண்டா பலி கொடுக்கவில்லை…? பார்… உன் குடும்பத்தையே தொலைத்து விடுகின்றேன்…! எனக்கு ஆடு இப்பொழுதே வேண்டும்…! என்று சொல்லி இந்த உடலுக்குள் வந்த ஆவி அவனையும் ஆடச் சொல்லி ஆடைக் கேட்கும்.

இப்படித்தான் மனித உடலில் விளைய வைத்த உணர்வுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இருளை போக்க நாம் பிறரின் வேதனைகளை கேட்டறிந்தோம். ஆனால் அது நம் நல்ல குணங்களை இருளச் செய்து நம்மை அறியாமலே தவறு செய்ய வைக்கின்றது. அசுர செயல்களைச் செய்ய வைக்கின்றது.

அதே உணர்வு நம் நல்ல குணத்தை எப்படித் தாக்குகிறது என்பதைத் தான் இவ்வாறு சித்தரித்துக் காட்டினார்கள் ஞானிகள்.

அதற்கு மாறாக நாம் செய்யும் பொழுது மனித உடலில் எதை விளைய வைத்தோமோ அதனின் செயலாகத்தான் அடுத்து இருண்ட நிலையாக அந்தத் தெய்வமாக உருவாக்கி விடும்… அதே பலியைத் தான் இது கேட்கும்.

கருப்பணசாமி என்ற நிலைகளில் “அருளாடி” சொல்லும் பொழுது பேயை அங்கே ஓட்டலாம் என்று சொல்வார்கள். பேய் பிடித்தவர்களின் குடுமியைப் பிடித்து ஆட்டி… இரண்டு உதையைக் கொடுக்கும்.

ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதத்திற்கு அந்த ஆட்டம் குறைந்திருக்கும்.

அடுத்து பார்த்தோம் என்றால் அங்கே சென்று என்னை நீ அடக்கினாயா…? உன்னை நான் என்ன செய்கிறேன்…? என்று மீண்டும் ஆடத் தொடங்கும்.

1.இது தான் நாம் கண்ட பலனே தவிர
2.ஞானிகள் காட்டிய தீமைகள் இந்த விடுபடும் அருள் வழிகளை நாம் கடைப்பிடிக்கவில்லை

இதை எல்லாம் அறிந்து கொள்வதே மிகவும் நல்லது.