ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 18, 2024

நாம் செய்யும் ஆத்ம சுத்திக்கு வலு கூட்டும் முறை (முக்கியமானது)

நாம் செய்யும் ஆத்ம சுத்திக்கு வலு கூட்டும் முறை (முக்கியமானது)

 

இரவில் படுக்கும் போது:-
தனக்குள் அறியாத வந்த தீய வினைகளை நீக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இரவிலே படுக்கச் செல்லும் பொழுது 100 முறையாவது இதைச் செய்யுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் வீடு முழுவதும் படர்ந்து எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அந்தச் சக்தி படர்ந்து எங்களை அறியாது சேர்ந்த தீயவினைகள் பாவ வினைகள் சாப வினைகள் அனைத்தும் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா.

காலையின் கண் விழித்த்தும்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தொழில் செய்யும் இடங்கள் முழுவதும் படர்ந்து… எங்கள் தொழில்கள் சீராகி மன பலம் மன வளம் உடல் நலம் செல்வம் செல்வாக்கு பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு 100 முறை எண்ணுங்கள்.

நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் வாடிக்கையாளர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் எங்களுடன் வேலை செய்பவரும் பணிபுரிபரும் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும் என்று இதை எண்ணிச் செயல்படுத்துங்கள்.

காலையில் கண் விழித்த உடனே இதை எல்லாம் குறைந்தபட்சம் 100 முறையாவது சொல்வது மிகவும் நல்லது.

சமையல் செய்யும் போது பரிமாறும் போது உணவு உட்கொள்ளும் போது:-
வீட்டிலே பெண்கள் சமையல் செய்யும் போது 25 முறை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு நாங்கள் சமைக்கும் ஆகாரம் அதை உணவாக உட்கொள்ளும் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் அவர்கள் உடல் நலம் மன பலம் மன வளம் பெற வேண்டும் என்று எண்ணிச் சமையல் செய்யுங்கள்.

ஆகாரத்தைக் கொடுக்கும் போதும் பரிமாறும் போதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோரும் பெற வேண்டும் என்று 25 முறையாது மனதில் எண்ணுங்கள்.

உணவாக உட்கொள்வோரும் இதே போல் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று 25 முறையாவது எண்ணுங்கள். நாங்கள் உணவாக உட்கொள்வது அனைத்தும் எங்களுக்குள் உடல் நலம் பெறும் சக்தியாக வரவேண்டும் என்று எண்ணி உணவை உட்கொள்ளுங்கள்.

வெளியில் செல்லும் போது:-
எங்கே வெளியிலே சென்றாலும் ஒரு 25 முறையாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணிவிட்டு எந்தக் காரியத்திற்காகச் செல்கின்றீர்களோ நாங்கள் பார்ப்பது அனைத்தும் நலம் பெற வேண்டும் என்னைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் மலரைப் போன்ற மணம் நாங்கள் பெற வேண்டும் என்னைப் பார்ப்போர் அனைவருக்கும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி விட்டுச் செல்லுங்கள்.

எனக்கு நல்ல மனதும் என்னைப் பார்ப்போருக்கு நல்ல மனதும் எங்கள் வழி என்றுமே நல்ல வழியாகவும் அமைய வேண்டும் ஈஸ்வரா… என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

நோய் நீங்க:-
நோய் ஏது இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து அந்த நோய் நீங்கி எங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

எவ்வளவுக்கு அந்த நோய் சாடி இருக்கின்றதோ அதையே எண்ணாது பற்றதாக மாற்ற வேண்டும். மேலே சொன்னதை எத்தனை முறை அதிகரித்துச் சொல்கிறீர்களா அவ்வளவுக்கு உங்களுக்கு நல்லது… அதற்குத் தக்க உங்கள் பிணிகள் சீக்கிரம் அகலும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை பற்றுடன் பற்ற முடிகின்றது. வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்ற முடிகிறது.

பிறர் நோயைப் பற்றிக் கேள்விப்பட்டால்:-
பிறர் நோய்வாய்ப்பட்டாலும் அதைக் கட்டறிந்த பின் ஒரு 25 முறையாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று திருப்பித் திருப்பி ஏங்கித் தியானியுங்கள்.

பின் அவர் அந்த சக்தி பெற்று உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணி விட்டு… அவர்களுக்கு வேண்டிய உபகாரத்தை நீங்கள் செய்யலாம்.

அடுதவர் கஷ்டங்களை வேதனைகளைக் கேட்டறியும் போது:-
ஒருவர் தனக்கு மிகுந்த கஷ்டம் என்று சொன்னாலும் அதைக் கேட்டறிந்தால் ஒரு 25 முறையாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று முதலில் எண்ணி வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

பின்… அந்தக் கஷ்டப்படுபவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று சொல்லி “உங்கள் கஷ்டம் நீங்கும்” என்று வாக்கினை அவருக்குக் கொடுங்கள்.

1.உங்கள் சொல் தான் (உணர்வு) அவருடைய கஷ்டத்தைப் போக்க வேண்டுமே தவிர
2.அவருடைய கஷ்டத்தை நாம் வாங்கி விடக்கூடாது… நம் நல்லதை அது அழித்து விடக்கூடாது.

உடலில் ஆவி புகுந்திருந்தால்:-
ஒரு சிலர் உடலில் பிறிதொரு ஆவி இருக்கலாம். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். என் உடலில் புகுந்த அந்த ஆன்மா துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு ஐம்பது முறையாவது எண்ணுங்கள்

1.அதிலே கலந்து வந்த தீமைகள் மடிந்திட வேண்டும்
2.அவைகளும் எனக்குள் இருந்து பிறவா நிலை பெற வேண்டும்
3.எனக்கு நல் வழி காட்ட வேண்டும் என்று ஒரு 100 முறையாவது எண்ணுங்கள்.

இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அதை வலுவாக்கும் பொழுது நாம் அடைய வேண்டிய எல்லையான அந்தச் சப்தரிஷி மண்டலத்தை எளிதில் அடைகின்றோம்.

இப்படிச் செய்யாது கஷ்டப்பட்டவரையும் வேதனைப்பட்டவரையும் நோய்வாய்ப்பட்டவரையும் எண்ணி அவர்களின் உணர்வை நுகர்ந்து விட்டால் அதே உணர்வு நம்மைத் தாக்கி புவியின் ஈர்ப்பிற்குள் தான் நாம் சிக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணும்போதெல்லாம் நமக்குள் அதைப் பற்றுடன் பற்றுகின்றோம். ஆகவே தீமைகளைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும்.
1.அப்போது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
2.எந்தத் தீமையாக இருந்தாலும் அதிலிருந்து விடுபட இந்த முறைகளைக் கையாளுங்கள்.

குருவிடம் யாம் (ஞானகுரு) பெற்றது:-
1.இலேசாகச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம்.
2.25 வருடம் காடு மேடல்லாம் அலைந்து குருநாதருடைய அருளைப் பெற்று மூன்று லட்சம் பேரைச் சந்தித்து அதனின் அனுபவங்களைப் பெற்று
3.தீமைகளை எவ்வாறு நீக்க வேண்டும் என்று பெற்ற அந்த அருள் சக்தியைத் தான்
4.நீங்கள் பெற வேண்டும் என்று உங்களை நான் இப்பொழுது நியானிப்பது

குருநாதர் காட்டிய வழியில் பல முறை நீங்கள் எண்ணித் தியானிக்கும் போது உங்கள் பிணிகள் நீங்கும்… நீங்கள் மகிழ்ச்சி பெறுவீர்கள். அந்த மகிழ்ச்சியே எனக்குத் தேவை. உங்களில் குருவைக் காணுகின்றேன்.