ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 23, 2024

நானே வழிகாட்டிச் செல்கின்றேன்... எல்லாம் புலப்படும்…!

நானே வழிகாட்டிச் செல்கின்றேன்... எல்லாம் புலப்படும்…!

 

சத்தியம் என்பது என்ன…? உனக்கு மேல் என் சிஷ்யனுக்குத் (ஞானகுரு0 தெரியும்.
1.சிஷ்யன் என்றால் அவன் மட்டும் அல்ல…
2.எல்லோரும் என் சிஷ்யர்கள் தான்.

சத்தியம் தான் ஜெயிக்கும் என்று சொல்கின்றோம். உண்மைதான் சத்தியம். எவன் ஒருவன் உண்மையில் இருந்து விலகாமல் அந்த உண்மையைக் கடைப்பிடிக்கின்றானோ அது தான் சத்தியம்.

சத்தியம் என்பதே உண்மை. ஒரு உண்மையை நாம் மறைக்கும் பொழுது சத்தியத்திலிருந்து விலகுகின்றோம்.
1.இடம் பொருள் சூழ்நிலை அறிந்து எந்தக் காரணத்தினாலும்… கடவுளாகவே இருந்தாலும் சத்தியம் செய்யாதே.
2.உன் உடலால் மனதால் சத்தியவானாக இரு.

நான் சொல்வதெல்லாம் உனக்கு மட்டுமல்ல… என்னிடத்தில் மனதை ஐக்கியப்படுத்தியுள்ள எல்லோருக்காகவும் தான்.

(ஒருவர் கொல்லிமலைக்கு அருகாமையில் உள்ள ஈஸ்வரன் கோயில் அது அமைதியான இடம் தியானத்திற்கு ஏற்ற இடம் என்று சொன்னார்). அதற்கு குருநாதரின் விளக்கம்.

தியானத்தில் இருக்க தனிமையான இடமும் சோலைகள் அடர்ந்த அமைதியான இடமும் பிற சத்தங்கள் வராத இடமும் தான் தியானத்திற்கு ஏற்ற இடமா…? இல்லை…!
1.எந்த நிலையிலும்… எங்கு இருந்தாலும்…
2.எவன் ஒருவன் ஒரு நிமிடமாவது ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்துகிறானோ “அதுவே தியானத்திற்கு ஏற்ற இடம்…”

சித்தர்கள் முனிவர்கள் இருப்பது போல் உலகப் பற்றை விட்டுத் தியானத்தில் இருந்தால் தான் தியான நிலை என்பது அல்ல. உலகத்தில் உள்ள எல்லோரும் அது போன்று செய்ய முடியாது.

1.அவரவர்கள் ஏற்றுக்கொண்ட கடமையைச் செய்து கொண்டே
2.ஈஸ்வர தியானத்தில் இருப்பவர் எல்லோருமே ஈஸ்வரனின் அருளைப் பெறுகின்றார்கள்.

நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்கள்… குழந்தைகளுக்குக் கல்யாணம் முடிந்த பிறகு நமது கடமை எல்லாம் முடித்துப் பிறகு தெய்வீக வழியில் ஈடுபடுகின்றோம் என்று…!

குழந்தைகளுக்குக் கல்யாணம் ஆனவுடன் நம் கடமை தீர்ந்து விட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
1.தீர்ந்து விடுமா…? எந்தக் கடமையும் தீர்ந்து விடாது.
2.நீங்கள் இருக்கும் வரை நினைப்பது போல் எல்லாம் நடக்கும் என்று நினைக்கின்றீர்கள்.
3.நினைப்பது எல்லாம் நடந்து விடுமா…?
4.நீங்கள் இருக்கும் வரை கடமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

நீங்கள் இப்பொழுது இருக்கும் நிலையிலேயே “கடமை பந்தம் ஆசைகளை விட்டு விடலாம் என்று நினைக்காமல்…” இப்போது செய்யும் முறையிலேயே தியானத்தைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.

கடமைகள் தீர்ந்த பிறகு தான் இதிலே ஈடுபாடு வைக்க வேண்டும் என்று சொல்ல வேண்டாம்.
1.நானே வழிகாட்டிச் செல்கின்றேன்... இதிலிருந்தே எல்லாம் புலப்படும்.
2,என் அருளும் ஆசீர்வாதமும் என்றும் உண்டு.

தன்னையே தான் பார்த்து விட்டான்…! தன்னுள் ஈஸ்வர சக்தி இருக்கும் என்று உணர்ந்து விட்ட பிறகுதான் இது தெரிந்திருக்கும்.

சாமியிடம் (ஞானகுருவிடம்) சொன்னால் மிகவும் சந்தோஷப்படுவான்.

காட்சி:- ஜோதி - மயில் - கிண்ணம் - கிண்ணத்தில் இருந்து பெரிய பாத்திரம் - கிண்ணம் போய் விடுதல் - பாத்திரம் பெரிய கிண்ணமாக - அந்தரத்தில் – கிண்ணத்தில் வெள்ளை ஆகாரம். முனிவர்கள் கிண்ணத்தில் இருந்து ஆகாரம் கிரகிக்கின்றார்கள்.

உன்னையே நீ காண்பாய்… உன்னையே நீ காண்பாய்… உன்னையே நீ காண்பாய்.