ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 21, 2022

“பிரம்மச்சரியத்தால்” எந்தத் தவசியும் ரிஷியும் உருவாக முடியாது…! - ஈஸ்வரபட்டர்

 

மெய் ஞானி அன்று தன் ஞானத்தின் உண்மை நிலையில் உணர்த்திய தத்துவ வழி முறையில்
1.தெய்வத்தின் செயல் நிலையில் சுட்டிக் காட்டிய விக்கிரக வழிபாட்டு முறையிலேயே
2.ஒரு உயிர் அணு மூல முதலாக வளர்ச்சியுற்ற வழித் தொடருக்கு
3.விநாயகன்…! என்ற யானையின் தோற்றமுடன்…
4.மனித உரு முருகா…! என்ற அறு குண அழகனைக் காட்டினார்கள்.

உருவத்தில் பெரியது யானை…. எண்ணத்தில் உயர்ந்தவன் மனிதன். அவ்வுயிரணுவைத் தெய்வமாகத் தொடர்புபடுத்திச் சுட்டிக் காட்டிய வழித் தொடரில்… உருவ அமைப்புகளில் ஆதியில் மெய் ஞானிகள் வழிகாட்டிய தத்துவத்தில் “பல உண்மைகள் உண்டு…”

சில தெய்வங்களுக்குக் கிருஷ்ணாவதார கீதையின் தத்துவத்தில் ஒருவனுக்குப் பல ஆயிரம் மனைவிகளைச் சுட்டிக் காட்டினார்கள். அதன் உண்மைத் தத்துவத்தை நம் ஞானத்தால் எடுத்தால் அவ்வுண்மை நமக்குப் புரியும்.

மனிதன் பெற்ற ஒளி சக்தியில்… மனித எண்ண ஞானம்.. தான் பகுத்தறிவில் உயர் தன்மை கொண்டு மனித உடல் ஜீவனுடன் உள்ள பொழுது
1.உணர்வுடன் கூடிய எண்ணத்தால் எடுக்கப்படும் குணங்களின் வளர்ப்பு ஒவ்வொன்றையுமே ஜீவிதம் கொண்ட மனைவியாய்
2.பெண் சக்தி மனிதனுக்குள் வளரும் நிலை பெண் தன்மை கொள்ளும் குணங்களை எல்லாம் மனைவியாகச் சுட்டிக் காட்டி
3.கீதையின் தன்மையை நமக்கு அன்றே மெய் ஞானிகள் புகட்டினார்கள் பாடநிலையாக…!

இராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் எந்த அவதாரமாக இருந்தாலும்…
1.மனிதன் பிரம்மச்சரியம் கொண்டு எச்சக்தியையும் பெற முடியாது என்ற நிலையைத்தான்
2.மெய் ஞானிகளும் ரிஷிகளும் சுட்டிக் காட்டினர்
3.தானும் அவ்வழியில்தான் தன் ஞானத்தை வளர்த்தனர்.

இல்லற உணர்வில் எண்ணத்தில் வளர்க்கும் குணத்தில் இரு நிலை வளர்ச்சியின் அன்பால் பெறும் நிலையின் மகவுகளின் பரிவு பாசம் வளருமேயன்றி உணர்வின் எண்ணத்திலேயே
1.அன்பின் ஜீவிதத் தொடர்பின் உணர்வு பிணைப்பு வளரா விட்டால்
2.எத்தவசிகளும்… ஞானிகளும்… “சரீரம்” பெற்றிருக்க முடியாது.

ஜீவ உணர்வின் எண்ணத்தில் வளரும் குணத்தின் பிடிப்பு நிலை கொண்டு… தொடரும் இல்லறப் பிணைப்பின் உடல் தொடர்பின்… “ஆத்ம தொடர்பு கூடும் இரு எண்ணங்களும்…” ஒன்றாய் வலுக் கூடத் தொடங்கும்.

1.அப்படிக் கூடப்பெறும் எண்ணத்தின் உயர் ஞான தியானத்தால்…
2.ரிஷி பத்தினி சக்தியின் வளர்ச்சி ஈர்ப்பில்…
3.இரு நிலை கொண்டு ஒரு நிலை வளர்க்கும் செயல் வழி சரீரப் பிணைப்பில் மக்கள் தொடரும்..
4.ஆத்மப் பிணைப்பின் உயர் ரிஷி சக்தி பெறக்கூடிய படைப்பின் படைப்பிற்கு…
5.இவ்விரு ஆத்மாவின் ஐக்கிய தொடர்பில் பிணைக்கப்பட்டு மூலக்கரு வளர்ச்சியுறும்.